Friday, June 5, 2026
No menu items!

ஜனாதிபதி

இலங்கைத் தமிழரசுக் கட்சி ஜனாதிபதியுடன் சந்திப்பு!

இலங்கைத் தமிழரசுக் கட்சியினர் இன்று (நவம்பர் 19) ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவை சந்தித்து பேசவுள்ளதாக கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்துள்ளார். இந்த சந்திப்பு மதியம் 1 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த சந்திப்பில், தேசிய இனப் பிரச்சினைக்கான தீர்வு, தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிற பிரச்சினைகள், வடக்கு, கிழக்கு அபிவிருத்தித்...

திருகோணமலை புத்தர் சிலை விவகாரம்: அரசு மீது மிஹிந்தலை பீடாதிபதி கடும் குற்றச்சாட்டு!

திருகோணமலையில் உள்ள போதிராஜ சம்புத்த ஜயந்தி விகாரையில் உருவான பதற்றநிலையை அடுத்து, மிஹிந்தலை இராஜ மகா விகாரையின் தலைமை விகாராதிபதி வளவாஹெங்குணாவெவ தம்மரத்ன தேரர் அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்துள்ளார். தற்போதைய நிர்வாகம் ஆட்சிக்கு வருவதற்கு முன்பே எச்சரிக்கை அறிகுறிகள் தெளிவாக இருந்ததாக அவர் தெரிவித்துள்ளார். சமயத் துறவிகள் தாக்கப்பட்டதாகவும், புத்தர் சிலை அகற்றப்பட்டதாகவும் கூறப்படும் சம்பவங்களுக்குப் பொறுப்பானது...

75,000 பேரை அரச பதவியில் இணைக்க முடிவு!

எதிர்வரும்  காலங்களில் அரச துறையில் சகல ஆட்சேர்ப்புக்கள், பதவி உயர்வுகள் உள்ளிட்ட செயற்பாடுகள் அரச தலையீடின்றி உரிய பரீட்சை மற்றும் சேவைப் பிரமாணங்களின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். இதன்மூலம் இளைஞர், யுவதிகளுக்கு  சமமான வாய்ப்புகள் வழங்கப்படும் என, 2026ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை முன்வைத்து நாடாளுமன்றில் ஜனாதிபதி உரையாற்றியபோது...

ஜனாதிபதிக்கு தைரியம் இல்லை: சபையில் சிறீதரன் சீற்றம்!

மாகாண சபைத் தேர்தலை நடத்துவது தொடர்பில் தீர்மானத்தை மேற்கொள்ள ஜனாதிபதிக்கு தைரியம் இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் குற்றம் சுமத்தியுள்ளார். மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கம் தயங்குவதற்கான காரணம் என்ன எனவும் அவர் இதன்போது கேள்வியெழுப்பியுள்ளார். எதிர்வரும் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட உரை நேற்றைய தினம்  ஜனாதிபதி அனுரகுமார...

2026 வரவு செலவுத் திட்டம் மக்களுக்கானதல்ல – சஜித் பிரேமதாச விமர்சனம்..!!

2026 ஆம் ஆண்டுக்கான அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டம் சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) வழிகாட்டுதலின் கீழ் உருவாக்கப்பட்டதாகவும், அதில் மக்களுக்கு எந்தவிதமான சலுகைகளும் நிவாரணங்களும் இல்லையெனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கடுமையாக விமர்சித்துள்ளார். ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நாடாளுமன்றத்தில் தனது வரவு செலவு திட்ட  உரையை வழங்கியதைத் தொடர்ந்து ஊடகங்களிற்கு கருத்துத் தெரிவிக்கும்...

வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தின் முதல் நாள் இன்று!!!

2026 ஆம் ஆண்டுக்கான அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இன்று (08) முதல் ஆரம்பமாகிறது. வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நவம்பர் 14 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகப் நாடாளுமன்றத் தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு...

நுகேகொடை பேரணியில் மஹிந்த ராஜபக்ச பங்கேற்கமாட்டார் – நாமல் ராஜபக்ச..!!

நுகேகொடையில் எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள அரசாங்க எதிர்ப்பு பேரணியில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச பங்கேற்கமாட்டார் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச  இன்று தெரிவித்தார். நுகேகொடை அரசியல் சமர் தொடர்பில் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட அவர் மேலும் கூறியவை வருமாறு, “ நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை...

2026 வரவு செலவுத் திட்டம் மீதான இரண்டாம் வாசிப்பு இன்று …!!

2026 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு அல்லது வரவு செலவுத் திட்ட உரை இன்று (07) பிற்பகல் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளது. நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராகிய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று பிற்பகல் 01.30 மணிக்கு பாராளுமன்றத்தில் வரவு செலவுத் திட்ட உரையைச் சமர்ப்பிக்க உள்ளார். அதற்கிணங்க, ஒதுக்கீட்டுச்...

தொழுநோய் ஒழிப்பில் இலங்கையின் முயற்சிக்கு அரசு உறுதி – ஜனாதிபதி!

தொழுநோயின் அபாயத்தைக் குறைத்து, சிகிச்சை வசதிகளை மேம்படுத்தி, நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சமூகப் பாதுகாப்பை உறுதி செய்வதில் அரசாங்கம் முழுமையாக உறுதிபூண்டுள்ளதாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். இலங்கையில் தொழுநோயை ஒழிக்கும் பயணத்தில் ஒரு முக்கிய மைல்கல்லாகக் கருதப்படும் தேசிய தொழுநோய் மாநாடு இன்று (06) காலை கொழும்பில் ஆரம்பிக்கப்பட்டது. 1995 ஆம் ஆண்டில் தொழுநோய் பொது சுகாதாரப்...

2026 வரவு செலவுத் திட்ட இறுதி வரைவை மதிப்பாய்வு செய்த ஜனாதிபதி!

2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளின் இறுதி வரைவை ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க மதிப்பாய்வு செய்துள்ளார். வரவு செலவுத் திட்ட மீளாய்வு நேற்றைய தினம் இரவு(05/11/2025) ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் நிதி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும கலந்து கொண்டார். இது தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் இரண்டாவது...
- Advertisement -spot_img

Latest News

அங்குருவதோட்ட முதியோர் இல்ல அனர்த்தம்; உயிரிழப்பு 13 ஆக அதிகரிப்பு

களுத்துறை அங்குருவதோட்ட, பட்டகொட பகுதியில் உள்ள ‘செனஹசே கெடல்ல’ முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் நேற்று 12 பேர் வரையில் உயிரிழந்திருந்த நிலையில் இன்று...
- Advertisement -spot_img