ராஜகிரிய பகுதியில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
குறித்த சம்பவமானது இன்று (27) மதியம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ராஜகிரிய பிரதேசத்தில் பாதுகாப்பு பெட்டகங்கள் தயாரிக்கும் நிறுவனத்தின் அலுவலக கட்டடம் ஒன்றிலேயே தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.
தீயணைப்பு பணிகளில் 4 தீயணைப்பு வாகனங்கள் ஈடுபட்டுள்ளதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.








