Wednesday, June 10, 2026
No menu items!

தேர்தல் பணி

அரசாங்கத்தின் வழிநடத்தலில் தேர்தல் திகதியை நிர்ணயிக்கவில்லை – சமன் ஸ்ரீ ரத்நாயக்க..!

அரசாங்கத்தின் வழிநடத்தலுக்கு அமைய தேர்தல் பணிகளுக்கான திகதிகளை நிர்ணயிக்கவில்லை. ஆணைக்குழுவுக்கு வழங்கப்பட்டுள்ள  அதிகாரத்துக்கு அமைவாகவே தீர்மானம் எடுக்கப்பட்டது. தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு போதுமான காலவகாசம் வழங்கப்படும் என்று தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். உள்ளூராட்சிமன்றத் தேர்தல் நடவடிக்கைகள் தொடர்பில் வினவிய போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவித்ததாவது, அரசியலமைப்பால் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள்...

தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த 3 உத்தியோகத்தர்கள் உயிரிழப்பு!

தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் மற்றும் இரண்டு சிவில் அதிகாரிகள் திடீர் சுகயீனம் காரணமாக உயிரிழந்துள்ளதாக இலங்கை பொலிஸார் தெரிவித்தனர். இன்று காலை பல்வேறு பகுதிகளில் தேர்தல் கடமையில் ஈடுபட்டிருந்த அதிகாரிகள் சுகயீனமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ இன்று இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார். மேலும்,...

பேருந்து சேவைகள் வழமை போன்று இயங்கும்!

வாக்களிப்பு நிலையங்களுக்குச் செல்லும் வாக்காளர்களின் வசதிக்காக பேருந்து சேவைகள் வழமை போன்று இயங்கும் என இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அனைத்து டிப்போ பணிப்பாளர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக அதன் தலைவர் ரமால் சிறிவர்தன தெரிவித்துள்ளார். தேர்தல் பணிகளுக்காக 1,300 பேருந்துகள் அனுப்பப்பட்டுள்ளன. எவ்வாறாயினும், தனியார் பஸ் சேவைகள் குறிப்பிட்ட அளவு வரை மட்டுப்படுத்தப்படும் என இலங்கை தனியார்...

மற்றுமொரு வழக்கில் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவிற்கு பிணை!

கூட்டுறவு மொத்த விற்பனை நிறுவன ஊழியர்களை தேர்தல் பணிகளுக்கு பயன்படுத்தியமை தொடர்பான வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை பிணையில் விடுவிக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வழக்கு விசாரணைக்கு ஆஜராகத் தவறியதற்காக ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு அக்டோபர் 24ஆம் திகதி நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்தது. முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, முன்னாள் அமைச்சர் எராஜ் பெர்னாண்டோ மற்றும்...

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான முக்கிய கூட்டம்…!

மாவட்ட தேர்தல் அதிகாரிகள் செப்டம்பர் 10ஆம் திகதி கொழும்பில் முக்கிய கலந்துரையாடலொன்றை மேற்கொள்ளவுள்ளனர். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான எதிர்கால நடவடிக்கைகளைத் திட்டமிடுவது தொடர்பில் இந்தக் கூட்டத்தில் கவனம் செலுத்தப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. வாக்கு எண்ணும் மையங்கள், தேர்தல் பணிகளுக்குத் தேவைப்படும் பணியாளர்களின் எண்ணிக்கை உள்ளிட்ட அனைத்து தேர்தல் நடவடிக்கைகள் குறித்தும் தேர்தல் அதிகாரிகளுக்கு...
- Advertisement -spot_img

Latest News

இந்தியப் பிரதமரின் வரலாற்று சாதனை; ஜனாதிபதி வாழ்த்து

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, மிக நீண்ட காலம் பதவி வகித்த இந்தியப் பிரதமர் என்ற பெருமையைப் பெற்று வரலாறு படைத்துள்ளார். இன்று ஜூன் பத்துடன், அவர்...
- Advertisement -spot_img