Tuesday, June 9, 2026
No menu items!

பயங்கரவாத தடைச் சட்டம்

புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் தொடர்பாக விரைவில் மக்கள் கருத்து பெறப்படும்!

பயங்கரவாத தடைச் சட்டத்துக்கு மாற்றாக கொண்டு வரப்படவுள்ள புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் தொடர்பாக விரைவில் பொதுமக்கள் கருத்து கோரப்படும் என நீதி அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார தெரிவித்துள்ளார். 2026 ஆம் ஆண்டுக்கான பாதீட்டின் சுற்றுலாத்துறை மற்றும் வெளிவிவகார அமைச்சுக்கான ஒதுக்கீட்டின் மீதான நாடாளுமன்ற குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, இந்தத் தகவலை அவர்...

பயங்கரவாத தடைச் சட்டம் நீக்கப்படும் – விஜித ஹேரத்!!

பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குவதற்கான சட்டமூலத்தை எதிர்வரும் செப்டம்பர் மாதம் முதற்பகுதிக்குள் வர்த்தமானியில் வௌியிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என வௌிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்தில் வாழும் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் மனித உரிமைப் பிரச்சினைகள் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஶ்ரீதரனால் இன்று...

குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்தி எடுக்கும் நடவடிக்கைகள் என்ன? – சஜித் கேள்வி..!

இன்று சமூகத்தில் உள்ள அனைவரும் அச்சத்திலும் சந்தேகத்திற்கு மத்தியிலும் வாழ்ந்து வருகின்றனர். சமீபத்தில், பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் அமைச்சு சார் ஆலோசனைக் குழு கூட்டத்தில் நாட்டில் நடந்து வரும் வன்முறை கலாசாரம் குறித்து ஆராயப்பட்டது. இந்த வன்முறை சார் அலையை தடுக்க முறையான திட்டமொன்று முன்னெடுக்கப்படும் என்று கூறப்பட்டது. எனவே, இந்த குற்ற அலையை...

இன்று கூடவுள்ள தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற குழு!

இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற குழு இன்றைய தினம் கூடுகிறது. இன்று முற்பகல் 11 மணியளவில் இந்த கூட்டம் நடைபெறுகிறது. அரசாங்கத்தின் தற்போதைய செயற்பாடு, தமிழ் மக்கள் முகங் கொடுக்கும் பிரச்சினை உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் இந்த கூட்டத்தில் ஆராயப்படவுள்ளன. இதுதவிர, இலங்கை தமிழரசுக் கட்சியின் மாநாடு, அதிகார பகிர்வு, பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குதல் உள்ளிட்ட...

ஊடக சுதந்திரம் தொடர்பில் ஜனாதிபதிக்கு கடிதம்!

இலங்கையில் ஊடக சுதந்திரத்தை உறுதி செய்யுமாறு கோரி, பத்திரிக்கையாளர் பாதுகாப்பு குழுமம் உள்ளிட்ட பல சிவில் சமூக அமைப்புகள் இணைந்து ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளன. பொதுமக்களின் தகவல் அறியும் உரிமையைப் பாதுகாக்க வேண்டும் என குறித்த கடிதத்தில் கோரப்பட்டுள்ளது. பத்திரிக்கையாளர் பாதுகாப்பு குழுமத்துடன் 24 சிவில் சமூக அமைப்புகள் கூட்டாக இணைந்து இந்தக்...

யங்கரவாத தடைச் சட்டத்தை பயன்படுத்துவதால் பிரச்சினைகள் – சஜித் பிரேமதாச..!

நாட்டில் இடம்பெற்ற உள்நாட்டுப் போர் நிறைவடைந்து 15 வருடங்கள் கடந்துள்ள போதிலும் தொடர்ந்து பயங்கரவாத தடைச் சட்டம் பயன்படுத்தப்படுவதனால் பல பிரச்சினைகள் உருவாகுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று முற்பகல் வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தில் இந்த விடயம் தொடர்பான கேள்விகளை எதிர்க்கட்சித் தலைவர் முன்வைத்திருந்தார். நாட்டில் காணப்பட்ட குழப்ப நிலைமையை அடுத்து...

அசாத் சாலி கைது செய்யப்பட்டமை சட்டவிரோதமானது – உச்ச நீதிமன்றம் தீர்ப்பு..!

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ், 2021 இல் மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி கைது செய்யப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டமை சட்டவிரோதமானது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதற்காக அவருக்கு 75,000 ரூபா இழப்பீடு வழங்க வேண்டுமெனப் பிரதிவாதிகளுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இவ்வழக்கின் பிரதிவாதிகளாக, முன்னாள் பொது பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர, குற்றப் புலனாய்வு...
- Advertisement -spot_img

Latest News

காகிதத்தில் கோடீஸ்வரரான பெண்; போலி நாணயத்தாள்கள் மீட்பு

கொழும்பு,கொட்டிக்காவத்தையில் நடத்தப்பட்ட சோதனை ஒன்றின் போது, ​​700,000 அமெரிக்க டொலர் முகமதிப்புள்ள 60 கட்டு,போலி நாணயத்தாள்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். சம்பவம் தொடர்பில் 53 வயதான இலங்கைப் பெண்...
- Advertisement -spot_img