Wednesday, July 22, 2026
No menu items!

புத்தளம்

புத்தளம் மார்க்கத்திலான தொடருந்து சேவையில் தாமதம்..!

புத்தளம் மார்க்கத்திலான தொடருந்து சேவையில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகத் தொடருந்து திணைக்களம் அறிவித்துள்ளது. சிலாபத்திலிருந்து பாணந்துறை நோக்கிப் பயணித்த தொடருந்தொன்று சீதுவை தொடருந்து நிலையத்திற்கு அருகில் தொழில்நுட்ப கோளாறுக்குள்ளானது. இதன் காரணமாகக் குறித்த மார்க்கத்திலான தொடருந்து சேவையில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகத்  திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்துடன், அலுவலக தொடருந்துகளை சேவையில் ஈடுபடுத்துவதிலும் தாமதம் ஏற்படலாம் என தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

புத்தளத்தில் இலட்சகணக்கான போதை மாத்திரைகள் மீட்பு…!

புத்தளம், கற்பிட்டி, முசல்பிட்டி பிரதேசத்தில் கடந்த 14 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில் 442,680 போதை மாத்திரைகள் அடங்கிய 18 பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கற்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர். கற்பிட்டி பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போதே இந்த போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கற்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு...

பொல்லால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை…!

புத்தளம், சாலியவெவ பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் பொல்லால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக சாலியவெவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த கொலை சம்பவம் நேற்றையதினம் (15.11.2024) இடம்பெற்றுள்ளது. கொலை செய்யப்பட்டவர் புத்தளம், சாலியவெவ பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயதுடையவர் ஆவார். இது தொடர்பில் தெரியவருவதாவது, கடந்த 14 ஆம் திகதி அன்று இரவு நடைபெற்ற மதுபான களியாட்ட நிகழ்வொன்றில் ஏற்பட்ட தகராறு...

புத்தளம் மாவட்டத்தின் முழுமையான தேர்தல் தொகுதி முடிவுகள்!

2024 நாடாளுமன்ற தேர்தலின் புத்தளம் மாவட்டத்தின் முழுமையான தேர்தல் தொகுதி முடிவுகள் வெளியாகியுள்ளன. தேசிய மக்கள் சக்தி பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை – 239,576 ஐக்கிய மக்கள் சக்தி பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை – 65,679 புதிய ஜனநாயக முன்னணி பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை – 15,741 ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை – 14,624 ஐக்கிய ஜனநாயக...

சீரற்ற வானிலை காரணமாக பாதிக்கப்பட்ட புத்தளம் மாவட்டம்..!

புத்தளம் மாவட்டத்தில் சீரற்ற வானிலை காரணமாக 6832 குடும்பங்களைச் சேர்ந்த 23689 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக புத்தளம் மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. அந்த வகையில் புத்தளம், முந்தல், கற்பிட்டி, வன்னாத்தவில்லுவ, நாத்தாண்டிய, மாதம்பை, மஹாவெவ, ஆராச்சிக்கட்டுவ, சிலாபம் மற்றும் வென்னப்புவ ஆகிய 10 பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட 74 கிராம சேவகர்கள் பிரிவுகளைச் சேர்ந்த...

இலக்கத் தகடு இல்லாத வாகனத்துடன் இருவர் கைது!

புத்தளம், வென்னப்புவ, மிரிஸ்ஸன்கொட்டுவ பிரதேசத்தில் அமைந்துள்ள வீடு ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த இலக்கத் தகடு இல்லாத வாகனம் ஒன்றுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக வென்னப்புவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். வென்னப்புவ பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். புத்தளம் லுணுவில மற்றும் மிரிஸ்ஸன்கொட்டுவ ஆகிய பிரதேசங்களில் வசிக்கும் இருவரே...

1,180 சங்குகளுடன் ஒருவர் கைது..!

புத்தளம் , கற்பிட்டி - வன்னிமுந்தல் பிரதேசத்தில் சட்டவிரோதமாகப் பிடிக்கப்பட்ட 1,180 சங்குகளுடன் சந்தேக நபரொருவர் நேற்று புதன்கிழமை (30) கைது செய்யப்பட்டுள்ளதாக கற்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர். கற்பிட்டி பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் கற்பிட்டி - வன்னிமுந்தல் பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். புத்தளம் ,...

காட்டு யானை தாக்கி வயோதிபர் ஒருவர் உயிரிழப்பு!

புத்தளம் புதிய எலுவாங்குளம் ஐலிய கிராமத்தில் இன்று (17) அதிகாலை 2 மணியளவில் காட்டு யானை தாக்கி வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் முந்தல் பகுதியைச் சேர்ந்த 65 வயதுடையவர் எனவும் அவர் தோட்டமொன்றின் காவலாளியாக கடமை புரிந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவரின் சடலம் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் இந்த மரணம் தொடர்பில் வண்ணாத்திவில்லு பொலிஸார்...

சீரற்ற வானிலையினால் 3196 பேர் பாதிப்பு…!

புத்தளம் மாவட்டத்தில் சீரற்ற வானிலையினால் 859 குடும்பங்களைச் சேர்ந்த 3196 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக புத்தளம் மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. அந்த வகையில் முந்தல் மகாகும்புக்கடவல நாத்தாண்டி தங்கொட்டுவ மற்றும் வென்னப்புவ ஆகிய 05 பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட 45 கிராம சேவகர் பிரிவுகளைச் சேர்ந்த 859 குடும்பங்களைச் சேர்ந்த 3196 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில்...

இன்றைய நாளுக்கான வானிலை…

சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என சிரேஸ்ட  வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் தெரிவித்துள்ளார். நாட்டின் ஏனைய பிரதேசங்களின் பல இடங்களில்  பிற்பகல் அல்லது இரவு  வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். மத்திய...
- Advertisement -spot_img

Latest News

ஐவரின் உயிரிழப்புக்கு காரணமான தீ விபத்து; மேலதிக விபரங்கள் வெளியாகின

ஹோமாகம கட்டுவான தொழிற்பேட்டையில் இடம்பெற்ற தொழிற்சாலை தீ விபத்தில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான மேலதிக விபரங்கள் வெளியாகியுள்ளன. இன்று காலை 9.45 மணியளவில் தீ...
- Advertisement -spot_img