November 18, 2025
கிராமங்களில் முன்னெடுக்கப்படவுள்ள வேலைதிட்டம்   
News News Line Top Updates இலங்கை அரசியல் புதிய செய்திகள்

கிராமங்களில் முன்னெடுக்கப்படவுள்ள வேலைதிட்டம்  

Mar 7, 2024

நாட்டில் தெரிவுசெய்யப்பட்ட 86 கிராமங்களில் 45,000 இளநீர் கன்றுகளை நாட்டுவதற்கான விசேட வேலைதிட்டத்தினை தெங்கு செய்கை சபையால் நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.

இதன்படி மொனராகலையில் 03 கிராமங்கள், மாத்தறையில் 01 கிராமம், குருநாகலில் 08 கிராமங்கள், குளியாப்பிட்டியவில் 09, கேகாலையில் 08, கம்பஹாவில் 09, களுத்துறையில் 10, மாரவில 09, இரத்தினபுரி 04, ஹம்பாந்தோட்டையில் 08, அனுராதபுரம், அனுராதபுரம் 02, இந்திராதபுரம், பொலன்னறுவையில் 02, அம்பாறையில் 02, மாத்தளையில் 04, காலியில் 08, மட்டக்களப்பில் 02, யாழ்ப்பாணத்தில் 03, கண்டியில் 04 கிராமங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளன.

நாட்டில் இளநீர் செய்கைக்கு ஏற்ற 86 கிராமங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன் உற்பத்திக்கான காரணங்களை ஆராய்ந்து மேற்படி கிராமங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளன.

இதற்கமைய இளநீர் நாற்றுகள், தொழில்நுட்ப அறிவு மற்றும் ஆலோசனைகள் இலவசமாக வழங்கப்படும்.

மேலும் ஒரு கிராமத்தில் அதிக ஏக்கர் பரப்பளவில் இளநீரை யாராவது பயிரிட விரும்பினால், அதற்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாய அமைச்சர் அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *