Saturday, June 27, 2026
No menu items!

Monthly Archives: June, 2024

மக்களை கொல்ல ஜே.வி.பி யினர் ஆயுதம் கேட்டனர் ;இரகசியத்தை கசித்த பிள்ளையான்!

இயக்கத்தில் தாங்கள் இருந்தபோது மக்களை கொலை செய்ய ஜே.வி.பியினர் ஆயுதம் கேட்டனரென பிள்ளையான் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் இன்று ஊடகவியலாளர்களை சந்தித்த  தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் , விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் முக்கிய உறுப்பினருமான பிள்ளையான் குறிப்பிட்டார். ஜே.வி.பியினர் ஜனநாயகம் பற்றி பேசுவதற்கு அருகதை அற்றவர்கள் எனவும் பிள்ளையான் என அழைக்கப்படும் சிவநேசதுரை...

இளைஞரை கடத்தியதால் சிறைக்கு செல்லும் ஹிருணிகா !

ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ஹிருணிகா பிரேமச்சந்திரவிற்கு மூன்று வருட கடூழிய சிறைத் தண்டனையை கொழும்பு மேல் நீதிமன்றம் விதித்துள்ளது. 2015 ஆம் ஆண்டு கொழும்பு தெமட்டகொடை பகுதியில் இளைஞன் ஒருவரை, டிபென்டர் மூலம் கடத்திச் சென்ற வழக்கில் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டதை அடுத்தே இந்த தீர்ப்பை நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை...

மருந்து கொள்வனவு விவகாரத்தில் விசாரணை…!!

மருந்து இறக்குமதியில் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்படும் முறைகேடுகள் குறித்து குற்றச்சாட்டின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தாக்கல் செய்த, ரிட் மனுவை எதிர்வரும் ஜூலை (01.07) விசாரணைக்கு எடுத்துக் கொள்வதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. இதன்படி தரமற்ற மருந்து கொள்வனவு தொடர்பான சம்பவத்தில் தமக்கு எதிரான வழக்கு நிறைவடையும் வரை, தம்மை...

நிலவின் தொலைதூர அரிதான மாதிரிகளுடன் பூமிக்கு திரும்பிய சீன விண்கலம்..!

சீனாவின் சாங்கே 6 (Chang'e 6) விண்கலம் பூமிக்கு திரும்பியுள்ளதாக சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதன்போது குறித்த விண்கலம், நிலவின் தொலைதூரத்தில் இருந்து அரிதான மாதிரிகளை எடுத்து வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வு விண்கலம், மங்கோலியாவில் சீன நேரப்படி இன்று பிற்பகல் 2 மணியளவில் தரையிறங்கியுள்ளது. இந்தநிலையில் விஞ்ஞானிகள் இந்த ஆய்வு விண்கல வருகையை ஆவலுடன் வரவேற்றுள்ளனர். சாங்கே...

ரஷ்ய இராணுவத்தில் சிக்கியுள்ள இலங்கையர்களை மீட்க இருதரப்பினரதும் நடவடிக்கை…!

ரஷ்ய இராணுவத்தில் பணிக்கமர்த்தப்பட்டுள்ள இலங்கையர்கள் விவகாரத்தில் அவர்களின் பிரச்சனைகள் மற்றும் கவலைகளை நிவர்த்தி செய்வதற்காக இருதரப்பு அதிகாரிகளை உள்ளடக்கிய ஒரு கூட்டு செயற்குழுவை அமைப்பதற்கு இலங்கை முன்மொழிந்துள்ளது. இரு தரப்பினரும் இவ்விடயங்களில் ஈடுபாட்டுடன் செயற்பாடுகளைத் தொடர ஒப்புக் கொண்டுள்ளனர். வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய தலைமையிலான உயர்மட்ட தூதுக்குழு, நேற்று(27.06) மற்றும் நேற்று முன்தினம்(26.06)...

இடைநிறுத்தப்பட்ட முஸ்லிம் மாணவிகளின் பெறுபேறு குறித்து சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் அதிருப்தி!

இலங்கையில் (Sri Lanka) பரீட்சை எழுதும் போது, முஸ்லிம் மாணவிகள் ஆடைகளால் காதுகளை மறைத்திருந்ததாக கூறப்படும் காரணத்தினால் மாணவிகளின் பரீட்சை பெறுபேறுகளை அரசாங்க அதிகாரிகள் தடுத்து வைத்துள்ளமை குறித்து சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் அதிருப்தி வெளியிட்டுள்ளது. இந்தத் தீர்மானமானது மாணவர்களின் மத சுதந்திரத்திற்கான உரிமையை மீறுவதாகவும்,  இலங்கையில் முஸ்லிம்களால் பரவலாக நோக்கப்படும் பாகுபாட்டை மேலும்...

புதிய மின்சார சட்டமூலத்திற்கு சபாநாயகர் அங்கீகாரம் !

மூன்று வாரங்களுக்கு முன்னர் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட புதிய இலங்கை மின்சார சட்டமூலத்திற்கு நேற்று (27) பாராளுமன்ற சபாநாயகரிடமிருந்து அங்கீகாரம் கிடைத்துள்ளது. அதன்படி, புதிய சட்டம் நேற்று (27) முதல் அமலுக்கு வருகிறது எனவும் தெரிவிக்கப்படுகிறது. இலங்கையின் மின்சாரத் துறையில் விரிவான சீர்திருத்தங்களை அமுல்படுத்துவதற்காகவே இந்த முக்கியச் சட்டம் ஆகும். தேசிய மின்சார ஆலோசனைக் குழுவை நிறுவுதல் மற்றும் இலங்கை...

பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்களின் 58ஆவது நாளாக தொடரும் போராட்டம்!

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள பணிப்புறக்கணிப்பு போராட்டம் இன்று58ஆவது நாளாகவும் தொடர்கிறது. 15% சம்பளக் குறைப்பு மற்றும் மாதாந்த கொடுப்பனவு அதிகரிக்கப்படாமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து முன்னெடுக்கப்பட்டு வருகிறது இப் பணிப்புறக்கணிப்புப் போராட்டம். இப் போராட்டம் குறித்து  அரசாங்கம் இதுவரை பதிலளிக்கவில்லை என பல்கலைக்கழக தொழிற்சங்க கூட்டுக் குழுவின் இணைத் தலைவர் தம்மிக்க எஸ்.பிரியந்த தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில்...

இறுதிப்போட்டிக்கு முன்னேறும் இந்திய அணி..!

T20 உலகக் கிண்ணத் தொடரில்  இரண்டாவது அரையிறுதிப்போட்டி நேற்றிரவு (27.06)நடைபெற்றிருந்தது. இப்போட்டியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகள் மோதியிருந்தன. போட்டியில் இந்தியா அணி 68 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இரண்டாவது அணியாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து முதலில் களத்தடுப்பைத் தீர்மானித்தது. இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியா நிர்ணயிக்கப்பட்ட...

ஆசிரியர் சேவை தொடர்பாக ஜனாதிபதியின் கருத்து…!!

ஆசிரியர் சேவையை அத்தியாவசிய சேவையாக அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி அறிவித்துள்ளார். நாட்டின் பிள்ளைகளின் கல்விக்காக ஆசிரியர்கள் காலை வேளையில் பாடசாலைகளில் இருக்க வேண்டியது கட்டாயமானது எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். ஏதேனும் காரணங்களுக்காக எதிர்வரும் காலங்களில் அவ்வாறு நடக்காமல் இருக்குமாயின், பாடசாலை மாணவர்கள் கல்வியை இழப்பதற்கான சந்தர்ப்பம் உருவாகும் என ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார். மாணவர்கள் இவ்வாறான நிலைமைக்கு...
- Advertisement -spot_img

Latest News

 62 கிலோவுக்கும் மேற்பட்ட போதைப்பொருட்கள் அழிக்கப்பட்டன

நீதிமன்ற நடவடிக்கைகள் நிறைவடைந்ததை அடுத்து, 62 கிலோகிராமுக்கும் அதிகமான போதைப்பொருட்களை அதிகாரிகள் அழித்துள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது. இதில் கிட்டத்தட்ட 40 கிலோகிராம் ‘குஷ்’ எனப்படும்  போதைப்பொருளும் அடங்கும்...
- Advertisement -spot_img