Monday, July 13, 2026
No menu items!

உள்நாட்டுச்செய்திகள்

இரத்தினபுரி விபத்தில் ஐந்து பேர் காயம்; ஒருவர் பலி…!

இரத்தினபுரி, எம்பிலிப்பிட்டிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட எம்பிலிப்பிட்டிய - செவனகல வீதியில் இன்று சனிக்கிழமை (26.10.2024) அதிகாலை இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளதுடன், ஐந்து பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று வீதியை விட்டு விலகி மரக்கறி கடை ஒன்றின் மீது மோதி பின்னர் அருகிலிருந்த மின் கம்பத்தில்...

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஐக்கிய மக்கள் அரசாங்கத்தில் இடமில்லை; விமல் ரத்நாயக்க…!

முன்னால் அமைச்சருக்கோ அல்லது பாராளுமன்ற உறுப்பினர்களுக்கோ ஐக்கிய மக்கள் அரசாங்கத்தில் இடமில்லை என விமல் ரத்நாயக்க, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்ததாக இன்று (26.10.2024) தெரிவித்தார். தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் கிளிநொச்சிமாவட்டத்தின் வட்டக்கச்சி பகுதியில் இன்று (26.10.2024) நடைபெற்றது. இதன் போது கலந்து கொண்ட ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்...

கருத்து முரண்பாடு வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரதமர்…!

தனக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் கருத்து முரண்பாடு ஏற்பட்டுள்ளதாக சிலர் பொய்யான செய்திகளை பரப்ப முயற்சிப்பதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். அத்திடிய பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்ட போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்துள்ளார். பொதுத் தேர்தலை இலக்காகக் கொண்டு தேசிய மக்கள் சக்தியினால் ஏற்பாடு செய்யப்பட்ட பொதுக் கூட்டம் பிரதமர் கலாநிதி ஹரிணி...

இலங்கையில் தனது கிளைகளுடனான வணிகத்தை முடித்து கொள்ளும் மெக்டொனால்ட்ஸ் குழுமம்…!

மெக்டொனால்ட்ஸ் குழுமம்  மற்றும் அதன்  இலங்கையிலுள்ள கிளைகளுக்கு உரிமையாளரான (International Restaurant Systems) சர்வதேச உணவக அமைப்புகள் நிறுவனம் தங்களது வணிக உறவை முறித்துக் கொண்டதாக கூட்டாக அறிவித்துள்ளது. இலங்கையில் தனது கிளைகளுடனான வணிகத்தை முடித்து கொள்வதோடு,  தங்களுக்கு ஆதரவு அளித்த  பொதுமக்களுக்கு நன்றியை மெக்டொனால்ட்ஸ் தெரிவித்துள்ளது. மெக்டொனால்ட்ஸ் குறித்து அண்மைக் காலங்களில் ஊடகங்களில் வெளிவந்த வதந்திகள் அல்லது...

கண்டியில் சில பகுதிகளில் நீர் வெட்டு…!

திருத்தப்பணிகள் காரணமாக கண்டியில் சில பகுதிகளில் 6 மணிநேரம் நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை (NWSDB) தெரிவித்துள்ளது. அதன்படி, எதிர்வரும் திங்கட்கிழமை (28.10.2024) காலை 10.00 மணி முதல் பிற்பகல் 4.00 மணி வரை நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. ரஜபிஹில்ல, கோனிகொட மெதவல, பூஜாப்பிட்டிய , கலகெதர, கிரிஹாகம, பொக்காவல, மாவத்தகம,...

தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபடும் ஆசிரியர்கள்; மாணவர்கள் சிரமத்தில்…!

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் இரத்தினபுரி மாவட்டத்தில் போட்டியிடும் பாடசாலை ஆசிரியர்களுக்கு, ஆதரவாக சக ஆசிரியர்கள் தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக பெற்றோர் குற்றஞ் சுமத்துகின்றனர். பாடசாலை நேரங்களிலும், பாடசாலை முடிவடைந்த பின்னரும் ஆசிரியர்கள், தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட்டுவருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதனால், மாணவர்களின் கல்வி நடவடிக்கை நேரடியாகவே பாதிக்கப்படுவதாக பெற்றோர்கள் விசனம் தெரிவிக்கின்றனர். அத்துடன், தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்கு...

இரத்தினபுரியில் துப்பாக்கிச் சூடு…!

இரத்தினபுரி மாரப்பன தலாவ பிரதேசத்தில் அமைந்துள்ள வீடொன்றின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. இன்று (26.10.2024) அதிகாலை 02 மணியளவில் இந்த துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தின் போது வீட்டின் உரிமையாளர், அவரது மனைவி, குழந்தை மற்றும் அவரது பெற்றோர்கள் அங்கு இருந்துள்ள நிலையில், அவர்களில் யாருக்கும் காயங்கள் ஏதும் ஏற்படவில்லை. வீட்டின் உரிமையாளர்...

ஜனாதிபதிக்கும் பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கும் இடையில் கருத்து முரண்பாடு…!

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் புதிய தலைவர் நியமனம் தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மற்றும் பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கு இடையில் கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டிருந்ததாக அரச தரப்புச் செய்திகள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதியாக அநுரகுமார திஸாநாயக்க தெரிவு செய்யப்பட்டப் பின்னர் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பதவியில் மாற்றம் மேற்கொள்ளப்பட வேண்டும் என துறைசார் சில தொழிற்சங்கங்கள்...

திடீர் சுகயீனமுற்று உயிரிழந்த மாணவி…!

குருணாகல், கிரியுல்ல , மெத்தேபொல பிரதேசத்தில் திடீர் சுகயீனமுற்று உயிரிழந்த 15 வயது பாடசாலை மாணவியின் உடல் பாகங்கள் மேலதிக பரிசோதனைக்காக அரசாங்க இரசாயன பகுப்பாய்வாளர் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் தெரியவருவதாவது, இந்த பாடசாலை மாணவி கடந்த 23 ஆம் திகதி அன்று இரவு உணவிற்காக கிரியுல்ல நகரத்தில் உள்ள உணவகம் ஒன்றிலிருந்து கோழி பிரியாணி...

மின் கட்டணத் திருத்தம் தொடர்பான அறிவித்தல்…!

இந்த வருடத்தின் மூன்றாம் காலாண்டுக்கான மின் கட்டணத் திருத்தம் தொடர்பான யோசனையை மின்சார சபை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் கையளித்துள்ளது. ஒவ்வொரு காலாண்டுக்கும் மின் கட்டணம் திருத்தப்படுகிறது. இதன்படி, டிசம்பர் மாதத்தில் மின் கட்டணத்தை திருத்துவதற்கான முன்மொழிவை மின்சார சபை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கு அனுப்பி வைத்துள்ளது. டிசம்பரில் அனைத்துத் துறைகளுக்கும் மின்சாரக் கட்டணம் 06 வீதம்...
- Advertisement -

Latest News

அமெரிக்கா-ஈரான் மோதல்:சர்வதேச எண்ணெய் விலையில் கடும் அதிகரிப்பு

அமெரிக்காவும் ஈரானும் மீண்டும் இராணுவ தாக்குதல்களை மேற்கொள்ள ஆரம்பித்துள்ள நிலையில், மத்திய கிழக்கில் எரிசக்தி விநியோகத்தில் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்த அச்சம் காரணமாக இன்று (திங்கட்கிழமை)...