Friday, July 3, 2026
No menu items!

உள்நாட்டுச்செய்திகள்

கொலை செய்ய பயன்படுத்திய ரிவோல்வர் கண்டுபிடிப்பு…!

கொலன்ன பிரதேசத்தில் நபர் ஒருவரை கொலை செய்ய பயன்படுத்தப்பட்ட வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ரிவோல்வர், மித்ததெனிய முருங்கஸ்யாய பிரதேசத்தில் புதைக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பிரகாரம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் துப்பாக்கியை கண்டுபிடித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த 7 ஆம் திகதி கொலன்ன, உப்தன்வத்த பிரதேசத்தில் வீடு ஒன்றில்...

மசாஜ் நிலையம் என்ற போர்வையில் விபச்சார விடுதி; 5 பெண்கள் கைது… !

கல்கிஸ்ஸை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்த விபச்சார விடுதியொன்றிலிருந்து 5 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கல்கிசை பொலிஸார் தெரிவித்துள்ளனர். நீர்கொழும்பு , மாத்தளை, மாவனல்லை மற்றும் தெனியாய ஆகிய பகுதிகளில் வசிக்கும் 21 முதல் 32 வயதுக்குட்பட்ட ஐந்து பெண்களே கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை...

கேகாலையில் கிணற்றில் வீழ்ந்து பெண் உயிரிழப்பு…!

கேகாலை, வறக்காப்பொல பிரதேசத்தில் கிணற்றில் வீழ்ந்து நான்கு பிள்ளைகளின் தாய் ஒருவர் உயிரிழந்துள்ளதாக வறக்காப்பொல பொலிஸார் தெரிவித்துள்ளனர். கேகாலை, வறக்காப்பொல பிரதேசத்தைச் சேர்ந்த 84 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தாயொருவரே உயிரிழந்துள்ளார். தனது தாய் வீட்டில் இல்லாததை அவதானித்த மகள் தாயை தேடியுள்ளார் இதன்போது, வீட்டிற்கு அருகில் உள்ள கிணற்றிற்குள் தாய் சடலமாக கிடப்பதை கண்ட மகள்...

சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு…!

இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து கடந்த ஜூலை 15 ஆம் திகதி வரை இலங்கைக்கு விஜயம் செய்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை பத்து மில்லியனை (1,095,675) தாண்டியுள்ளதாக சுற்றுலா மற்றும் காணி அமைச்சின் தரவு அறிக்கைகள் தெரிவித்துள்ளன. 2022 ஆம் ஆண்டில், இலங்கைக்கு வந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை ஏழு இலட்சம் (719,978) ஐத்...

காலியில் 18 மணிநேர நீர் வெட்டு…!!

திருத்தப்பணிகள் காரணமாக காலியில் சில பகுதிகளில் 18 மணிநேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. அதன்படி, எதிர்வரும் 29 ஆம் திகதி திங்கட்கிழமை காலை 8.00 மணி முதல் 30 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை 2.00 மணி வரை போபே, பொத்தல, ஹபுகல , ரத்கம...

இலங்கை பொருளாதார நெருக்கடிக்கு முகம்கொடுக்கும் என்பதை முன்னரே அறிவித்த ஜனாதிபதி ரணில்…!!

இலங்கை பொருளாதார நெருக்கடிக்கு முகம்கொடுக்கும் என்பதை முன்னரே அறிந்திருந்ததாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். நிலைமை குறித்து அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு தெரிவித்ததாகவும், தேவைப்பட்டால் உதவிகளை வழங்குவதாகவும் உறுதியளித்ததாகவும் விக்ரமசிங்க கூறியுள்ளார். இளைஞர்கள் குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்ட #AskRanilLive என்ற நேரடி கேள்வி பதில் அமர்வின் போது  ஜனாதிபதி விக்கிரமசிங்க இந்தத் தகவலைப் பகிர்ந்துகொண்டுள்ளார். நிகழ்ச்சியை நேரலையில்...

ஜனாதிபதி தேர்தலில் தமிழ் கட்சிகளின் ஆதரவை பெற சஜித் முயற்சி…!!

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வடக்கு, கிழக்கு மக்களுள் பெரும்பான்மையானர்கள் சஜித் பிரேமதாசவுக்கே ஆதரவு வழங்குவார்கள் என ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “இலங்கையில் இதற்கு முன்னரும் ஜனாதிபதி தேர்தல்களின்போது தமிழ் பொதுவேட்பாளர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர். ஆனால் அவர்களால் குறிப்பிட்டுக் கூறும் அளவுக்கு வாக்குகளை பெறமுடியாமல்போனது. சஜித் பிரேமதாச...

கொழும்புக்கு மலிவு விலையில் பழங்கள்….!!

வட மாகாணத்தில் உற்பத்தி செய்யப்படும் பழங்களை கொழும்புக்கு கொண்டு வந்து சலுவை விலையில் விற்பனை செய்யும் வேலைத்திட்டம் விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் என வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம் திருமதி சார்ள்ஸ் தெரித்துள்ளார். நுகர்வோர் பழங்களை அதிக விலைகொடுத்து வாங்கவேண்டிய சூழ்நிலையில் இருப்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஜீப் வாகனம் மோதியதில் பாதசாரி ஒருவர் உயிரிழப்பு…!!

நிட்டம்புவ, திஹாரிய பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் பாதசாரி ஒருவர் உயிரிழந்துள்ளதாக நிட்டம்புவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். கண்டியிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த ஜீப் வாகனம் ஒன்று வீதியில் பயணித்த பாதசாரி மீது மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தின் போது படுகாயமடைந்த பாதசாரி வத்துப்பிட்டிவல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கலகெடிஹேன பிரதேசத்தைச் சேர்ந்த 47...

வெடுக்குநாறி ஆதி லிங்கேஸ்வரர் ஆலயத்தின் பூசகரிடம் பயங்கரவாத புலனாய்வு பிரிவு விசாரணை…!!

வவுனியா வெடுக்குநாறி ஆதி லிங்கேஸ்வரர் ஆலயத்தின் பூசகரான மதிமுகராசாவை பயங்கரவாத புலனாய்வு பிரிவின் வவுனியா அலுவலகத்தினர் விசாரணைக்கு உட்படுத்தியுள்ளனர். வவுனியாவில் அமைந்துள்ள பயங்கரவாத புலனாய்வு பிரிவுக்கு வருமாறு கிராம சேவையாளர் ஊடாக அறிவித்தல் விடுக்கப்பட்ட நிலையில் மதிமுகராசா பயங்கரவாத புலனாய்வு பிரிவின் வவுனியா அலுவலகத்திற்கு சென்றிருந்தார். அங்கு கடும் விசாரணைகள் இடம் பெற்றதோடு வெடுக்குநாறி ஆலயம் தொடர்பான...
- Advertisement -

Latest News

முன்னாள் கடற்படை தளபதி கரன்னாகொடவுக்கு பிணை

முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் ஒப் த ப்லீட் வசந்த கரன்னாகொட, கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றினால் இன்று (03,) பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். இலஞ்ச ஊழல் ஒழிப்பு...