ரஷ்யாவின் நட்புக்கான விருதை பெற்ற கலாநிதி சமன் வீரசிங்க!
இலங்கை–ரஷ்ய நட்புறவுச் சங்கத்தின் பொதுச் செயலாளரும், ரஷ்ய புவியியல் சங்கத்தின் இலங்கைக்கான தலைவருமான கலாநிதி சமன் வீரசிங்கவுக்கு, ரஷ்யாவின் மிக உயரிய சிவிலியன் விருதுகளில் ஒன்றான “நட்புக்கான விருது” (Order of Friendship) வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கைத் தூதுவராகப் பணியாற்றிய கலாநிதி சமன் வீரசிங்க, இரு நாடுகளுக்கிடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதற்காக பல தசாப்தங்களாக செய்த பங்களிப்பை
ரஷ்ய எண்ணெய் நிறுவனங்களுக்கு அமெரிக்கா புதிய தடைகள் – ட்ரம்ப் அறிவிப்பு!
ரஷ்யாவின் இரண்டு முக்கியமான எண்ணெய் நிறுவனங்களை குறிவைத்து, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் புதிய பொருளாதார தடைகளை அறிவித்துள்ளார். இந்த நடவடிக்கை, உக்ரைனுடன் அமைதி ஒப்பந்தம் குறித்து மொஸ்கோவிற்கு அழுத்தம் கொடுப்பதற்கான முயற்சியின் ஓர் பகுதியாக அமைகிறது என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. தடைகள், ரஷ்யாவின் மிகப்பெரிய எண்ணெய் நிறுவனங்களான ரோஸ்நெஃப்ட் (Rosneft) மற்றும் லுகோயில் (Lukoil) ஆகியவற்றை குறிவைத்து
இந்தியா ரஷ்யாவிடமிருந்து நீண்டகால எண்ணெய் கொள்வனவு செய்யாது-டொனால்ட் ட்ரம்ப் !
ரஷ்யாவிடம் இருந்து மசகு எண்ணெய்யை நீண்ட காலத்திற்குக் கொள்வனவு செய்யப்போவதில்லை என, இந்தியப் பிரதமர் தமக்கு உறுதியளித்ததாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இருப்பினும் இந்தியாவால் அதனை உடனடியாகச் செய்ய முடியாது என்றும், பிரதமர் மோடி தம்மிடம் கூறியதாக ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார். வெள்ளை மாளிகையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைக் கூறியுள்ளார். அத்துடன், ரஷ்யாவிடம் இருந்து
ரஷ்யா – நேட்டோ பதற்றம் மீண்டும் அதிகரிப்பு!
எஸ்டோனியா வான்வெளியில் ரஷ்ய போர் விமானங்கள் நுழைந்ததாக குற்றச்சாட்டு எழுந்ததை அடுத்து, எஸ்டோனியா நேட்டோ உறுப்பினர்களுடன் அவசர ஆலோசனையை கோரியுள்ளது. பின்லாந்து வளைகுடா மேல், ரஷ்யாவின் மிக்-31 போர் விமானங்கள் 3, எஸ்டோனியா வான்வெளியில் 12 நிமிடங்கள் அனுமதியின்றி பறந்ததாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. நேட்டோவின் கிழக்கு பாதுகாப்பு பணியின் கீழ், இத்தாலி, பின்லாந்து, ஸ்வீடன் போர் விமானங்கள் உடனடியாக
பெருங்குடல் புற்றுநோய்க்கு எதிரான தடுப்பூசி தயாராக இருப்பதாக ரஷ்யா அறிவிப்பு!
பெருங்குடல் புற்றுநோய்க்கு எதிரான தடுப்பூசி பயன்பாட்டுக்குத் தயாராக உள்ளதாக ரஷ்யாவின் மத்திய மருந்து மற்றும் உயிரியல் நிறுவனம் (Biological Agency) அறிவித்துள்ளது. பல ஆண்டுகளாக நடைபெற்ற ஆராய்ச்சியின் பின்னர், கடந்த 3 ஆண்டுகளாக மருத்துவப் பரிசோதனைகளில் இருந்த இந்த தடுப்பூசி பாதுகாப்பானதும், புற்றுநோய்க்கு எதிராக விளைவாற்றல் கொண்டதுமாக இருப்பது உறுதிசெய்யப்பட்டதாக அந்த அமைப்பின் தலைவர் வெரோனிகா ஸ்க்வோர்ட்சோவா தெரிவித்துள்ளார். புற்றுநோயின்
ரஷ்யாவின் கம்சட்கா பகுதியில் மீண்டும் நில அதிர்வு !
ரஷ்யாவின், கம்சட்கா பகுதியில் மீண்டும் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. 6 மெக்னிடியூட் அளவில் இந்த நில அதிர்வு ஏற்பட்டதாக, வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. மேலும், இந்த நில அதிர்வினால் ஏதேனும் பாதிப்புகள், உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதா என்பது பற்றிய எந்த தகவல்களும் இதுவரை வெளியாகவில்லை. அத்துடன், ஆழிப்பேரலை அறிவிப்பு குறித்த விவரங்களும் வெளியாகவில்லை எனது தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவின் கம்சட்கா பகுதியில் கடந்த
ரஷ்ய எல்லையில் இரண்டு அணு ஆயுத நீர்மூழ்கிக் கப்பல்கள் – டிரம்ப் உத்தரவு..!!
ரஷ்ய எல்லையில் இரண்டு நீர்மூழ்கிக் கப்பல்களை நிலைநிறுத்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நேற்று (01) உத்தரவிட்டுள்ளார். ரஷ்யா – உக்ரைன் போரை நிறுத்துவதற்கு அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் முயற்சிகள் பலனளிக்காததால், ரஷ்யா மீது பொருளாதார தடையை அமெரிக்க அரசு விதித்து வருகின்றது. ரஷ்யாவிடம் வர்த்தகம் மேற்கொள்ளும் நாடுகளுக்கு நெருக்கடி கொடுத்து வருகின்றது. டிரம்பின் எச்சரிக்கையை மீறி ரஷ்யாவிடம் இருந்து
ரஷ்யாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: பசுபிக் கடற்கரைகள் முழுவதும் ஆழிப்பேரலை எச்சரிக்கை!
ரஷ்யாவின் கம்சட்கா பகுதியில் நேற்று (ஜூலை 29) அதிகாலை 8.7 மெக்னிடியூட் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தையடுத்து பசுபிக் பெருங்கடல் எல்லை பகுதியில் உள்ள நாடுகள் பலருக்கும் ஆழிப்பேரலை எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. ஜப்பான், ஹவாய் தீவுகள், அமெரிக்காவின் கலிபோர்னியா, அலாஸ்கா, மற்றும் பல பசுபிக் தீவுகள் இவை அனைத்தும்
மீண்டும் மீண்டும் விமான விபத்து; பலியாகும் உயிர்கள்!
ரஷ்யாவில் 49 பேருடன் சென்ற விமானம் ஒன்று விபத்துக்கு உள்ளாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. ரஷ்யாவின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள அமூர் மாகாணம் அருகே திண்டா நகரத்தை நோக்கிச் ஒரு பயணிகள் விமானம் சென்றுகொண்டிருந்தது. இந்த விமானத்தில் 5 குழந்தைகள் உட்பட மொத்தம் 49 பேர் பயணம் செய்துகொண்டிருந்தனர். இந்நிலையில், இந்த விமானம் திண்டா விமான நிலையத்தை நெருங்கும்
உக்ரைனுக்கு பேட்ரியாட் பாதுகாப்பு அமைப்புகளை அனுப்ப அமெரிக்கா முடிவு – டொனால்ட் ட்ரம்ப் அறிவிப்பு!
ரஷ்ய படைகளின் தாக்குதல்களுக்கு எதிராக உக்ரைனின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில், அமெரிக்கா பேட்ரியாட் வான் பாதுகாப்பு அமைப்புகளை (Patriot Air Defense Systems) அனுப்பும் என முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இவ் அமைப்புகள் நேரடியாக அல்லாது, முதலில் நேட்டோவிற்கு (NATO) அனுப்பப்பட்ட பின்னர், அவை உக்ரைனுக்கு மாற்றப்பட்டு வழங்கப்படும் எனவும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார். இதனுடன், உக்ரைன்