Friday, April 17, 2026
No menu items!

உரிமையாளர்

மாத்தறை பகுதியில் உணவகம் ஒன்றின் உரிமையாளர் மீது துப்பாக்கிச் சூடு!

மாத்தறை காவல்பிரிவுக்குட்பட்ட கரையோர வீதி பகுதியில் நேற்று (25) இரவு உணவகம் ஒன்றின் உரிமையாளர் மீது சிற்றூந்தில் வந்த ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார். இச் சம்பவம் தொடர்பில் மாத்தறை காவல்நிலையத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. குறித்த துப்பாக்கிச் சூட்டில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் மற்றும் சந்தேக நபர்...

வர்த்தக நிலையமொன்றைச் சோதனையிட சென்ற அதிகாரிகள் மீது தாக்குதல்!

குருநாகல் - கொகரெல்ல பகுதியில் உள்ள வர்த்தக நிலையமொன்றைச் சோதனையிடுவதற்குச் சென்ற நுகர்வோர் விவகார அதிகாரசபையின் அதிகாரிகள் இருவர் அச்சுறுத்தப்பட்டுத் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர். இந்தத் தாக்குதலைக் குறித்த வர்த்தக நிலையத்தின் உரிமையாளர் மற்றும் அவரது மகன் ஆகியோர் நடத்தியதாக, காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட வர்த்தக நிலையத்தின் உரிமையாளர்,...

முச்சக்கர வண்டிகளை செலுத்தும் வெளிநாட்டவர்களினால் அதிகரித்துள்ள வீதி விபத்துக்கள்!

நாட்டில் முச்சக்கர வண்டிகளை செலுத்தும் வெளிநாட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதோடு, விபத்துக்கள்  மற்றும் உயிரிழப்புக்களும் அதிகரித்து வருவதாக இலங்கை பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது. விபத்துக்களில் சிக்கும் பல வெளிநாட்டவர்களிடம் முச்சக்கர வண்டிகளை செலுத்துவதற்கான சாரதி அனுமதி பத்திரங்கள் இல்லாமல் இருப்பது விசாரணையில்  தெரிய வந்துள்ளது. முறையான பயிற்சி இல்லாததே இந்த விபத்துக்கள் இடம்பெறுவதற்கு காரணமாக உள்ளது. இலங்கையில் சட்டபூர்வமாக...

மலசலக் கூடத்தில் உணவு தயாரித்து விற்பனை – உரிமையாளருக்கு சிறைத்தண்டனை!

மட்டக்களப்பு செங்கலடி பொது சுகாதாரப் பிரிவிலுள்ள உணவகம் ஒன்றில் மலசல கூடத்தில் மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற முறையில் உணவு தயாரித்து விற்பனை செய்த கடை உரிமையாளருக்கு ஒரு மாதகால சிறைத்தண்டனையும் 60 ஆயிரம் ரூபாவை அபதாரமாக செலுத்துமாறு ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற மேலதிக நீதவான் நேற்று திங்கட்கிழமை (24/03/2025) உத்தரவிட்டார். குறித்த பிரதேசத்திலுள்ள உணவகங்களை சம்பவதினமான...

சைபர் தாக்குதலுக்கு உள்ளான “X” தளம்!

"X" சமூக ஊடக தளம் மிகப்பெரிய சைபர் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக அதன் உரிமையாளர் எலோன் மஸ்க் தெரிவித்துள்ளார். இதன் விளைவாக, பிரிட்டன் மற்றும் அமெரிக்காவில் ஆயிரக்கணக்கான X கணக்குகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. தனது "X" கணக்கில் பதிவிட்டு, எலான் மஸ்க், இதுபோன்ற தாக்குதல்கள் ஒவ்வொரு நாளும் நடப்பதாகவும், நேற்று ஒரு பெரிய சைபர் தாக்குதல் நடந்ததாகவும் சுட்டிக்காட்டுகிறார். இதன்...

தையிட்டி விகாரை தொடர்பான போராட்டத்துக்கு ஈ.பி.டி.பி ஆதரவு!

யாழ்ப்பாணம் - தையிட்டி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள விகாரை தொடர்பில் பூர்வீக காணி உரிமையாளர்களால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள போராட்டத்துக்கு ஆதரவு வழங்கவுள்ளதாக ஈழமக்கள் ஜனநாயக கட்சி தெரிவித்துள்ளது. அந்த கட்சியின் செயலாளர் நாயகம் முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அறிக்கையொன்றை வெளியிட்டு இதனைக் குறிப்பிட்டுள்ளார். தையிட்டிப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள விகாரை என்பது சட்ட ரீதியான அனுமதிகள் எவையும் பெற்றுக்...

பேருந்து நடத்துனரை கட்டிவைத்து அடித்த உரிமையாளர்!

தனியார் பஸ்வண்டி ஒன்றில் நடத்துனராக கடமையாற்றி வந்த இளைஞர் ஒருவர் பணத்தை திருடியதாக அவரை தனியர் பஸ்வண்டி உரிமையாளர் தென்னை மரம் ஒன்றில் கட்டிவைத்து அடித்து சித்திரவதை செய்துள்ளார். இச் சம்பவம் நேற்று (7.10) களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிலுள்ள ஓந்தாச்சிமடம் பகுதியில்  இடம் பெற்றுள்ளது. இது பற்றி தெரியவருவதாவது, கல்முனை மட்டக்களப்பு போக்குவரத்து சேவையில் ஈடுபட்டுவரும் பஸ்வண்டியில் நடத்துனராக...

மின் ஒழுக்கு காரணமாக தீக்கிரையான வீடு!

நுவரெலியா பொரலாந்த வஜிரபுர பிரதேசத்தில் உள்ள தனி வீடொன்று தீப்பிடித்து முற்றாக தீக்கிரையாகியுள்ளது. குறித்த தீ விபத்தானது இன்று அதிகாலையில் ஏற்பட்டுள்ளதாக வீட்டின் உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர். வீடு திடீரென தீப்பிடித்து எரிவதனை அவதானித்த அயலவர்கள் தீயை கட்டுக்குள் கொண்டுவர முயற்சித்த போதிலும் வீட்டில் இருந்த பெறுமதியான பொருட்களும், முக்கிய ஆவணங்களும் தீயில் எரிந்து நாசமாகியுள்ளது. தீ விபத்தில் யாருக்கும் எந்த...

கொஹுவல பகுதியில் நபரொருவர் சுட்டுக்கொலை!

கொஹுவல, சரணங்கர வீதியிலுள்ள கடையொன்றுக்குள் நபர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். நேற்று (18.09.2024) இரவு இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதில் 43 வயதுடைய கடையின் உரிமையாளரே கொல்லப்பட்டதாகக் பொலிஸார் தெரிவிக்கின்றனர். உந்துருளியில் வந்த இனந்தெரியாத இருவரால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது என பொலிஸார் விசாரனைகளின் போது தெரியவந்துள்ளது. இச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இச் சம்பவத்தில் படுகாயமடைந்த...

கிளப் வசந்த கொலை வழக்கு – 7 சந்தேகநபர்களும் நீதிமன்றில்…!

அத்துரிகிரிய பச்சை குத்தும் நிலையத்தில் கிளப் வசந்த உள்ளிட்ட இருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 7 சந்தேகநபர்களும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பச்சை குத்தும் நிலையத்தில் உரிமையாளர் உள்ளிட்ட சந்தேகநபர்கள் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் கடுவெல நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. ஜூலை 8 ஆம் திகதி நடந்த துப்பாக்கிச் சூட்டில்...
- Advertisement -spot_img

Latest News

மோதலுக்கு பின்னர் நாட்டை வந்தடையும் முதலாவது மசகெண்ணை கப்பல்

மத்திய கிழக்கு மோதல் தொடங்கி பின்னர் நாட்டுக்கு மசகெண்ணை ஏற்றி வரும் முதல் கப்பல் நாளை (17) தீவை வந்தடைய உள்ளது என சிலோன் பெட்ரோலியம்...
- Advertisement -spot_img