Sunday, May 10, 2026
No menu items!

காவல்துறையினர்

மித்தெனிய முக்கொலை சம்பவத்துடன் தொடர்புடைய காவல்துறை கான்ஸ்டபிள் கைது!

மித்தெனிய முக்கொலை சம்பவத்திற்கு உதவிய குற்றச்சாட்டின் பேரில் ஒருவரை மித்தெனிய காவல்துறையினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர், வீரகெட்டிய காவல் நிலையத்தில் பணிபுரியும் 36 வயதுடைய காவல்துறை கான்ஸ்டபிள் என விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்டவர் ஜூலம்பிட்டிய பகுதியைச் சேர்ந்தவர் ஆவார். விசாரணைகளின் போது கைது செய்யப்பட்டவர் சந்தேக நபர்களுக்கு T-56 ரக துப்பாக்கிக்குப்...

விசாரணைக்கு சென்ற காவல்துறை சார்ஜன்ட் சிறுமி மீது பாலியல் வன்கொடுமை!

திஸ்ஸமஹாராம பகுதியில் வீடொன்றிற்கு முறைப்பாட்டை விசாரிக்க சென்ற வேளையில் 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய காவல்துறை சார்ஜன்ட் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக திஸ்ஸமஹாராம காவல்துறையினர் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட காவல்துறை சார்ஜன்ட் திஸ்ஸமஹாராம காவல்நிலையத்தில் பணியாற்றுபவர் எனத் தெரிவிக்கப்படுகின்றது. நேற்று இரவு மேற்கூறிய சிறுமி வீட்டில் குழப்பமான சூழல் ஏற்பட்டதை தொடர்ந்து காவல்துறை அவசர...

முன்னாள் காவல்துறை கான்ஸ்டபிள் இல்லத்திலிருந்து கைக்குண்டுகள் மீட்பு!

அனுராதபுரம் - கலென்பிந்துனுவெவ பகுதியில் உள்ள முன்னாள் காவல்துறை கான்ஸ்டபிள் ஒருவரின் உத்தியோகபூர்வ இல்லத்தின் வளாகத்திலிருந்து 341 தோட்டாக்கள் மற்றும் 4 கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன. காவல்துறையினருக்குக் கிடைத்த தகவலின்படி, குறித்த பகுதியில் நேற்று மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது இவ்வாறு தோட்டாக்கள் மற்றும் கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன. 281 ரி -56 தோட்டாக்கள், ஐந்து மெகசின்கள் மற்றும் 84...

பத்தேகம பகுதியின் கொலைச் சம்பவம் தொடர்பில் மூவர் கைது!

பத்தேகம பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு சகோதரர்கள் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கடந்த 27 ஆம் திகதி குறித்த பகுதியில் நடந்த இறுதிச் சடங்கொன்றின் போது இரு குழுக்களிடையே மோதல் ஏற்பட்டது. இதன்போது ​​கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு சகோதரர்கள்...

அதிவேக தொடருந்தில் பெண் ஒருவர் மோதி பலி!

கொழும்பிலிருந்து பெலியத்த நோக்கிப் பயணித்த விசேட அதிவேக தொடருந்தில் இன்று (26) பெண் ஒருவர் மோதி உயிரிழந்துள்ளதாக அளுத்கம காவல்துறையினர் தெரிவித்தனர். அளுத்கம, களுவா மோதர, தெவல வீதிக்கு அண்மித்த பகுதியில் இன்று காலை 7.40 அளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. உயிரிழந்த பெண் அளுத்கம களுவா மோதர பகுதியில் வசிக்கும் 67 வயதுடையவர் எனத் தெரியவந்துள்ளது. இந்த...

மாலம்ப பகுதியில் கேரள கஞ்சாவுடன் தம்பதியினர் கைது!

மாலம்ப - ஹோகந்தர விஸ்கம் மாவத்தை பகுதியில் 1கிலோ 800 கிராம் கேரள கஞ்சாவை மகிழுந்தில் மறைத்துக் கொண்டு சென்ற தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளனர். மாலம்பை காவல்துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனையின் போது குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் தெல்கொட பகுதியைச் சேர்ந்த 30 மற்றும் 33 வயதுடைய...

காவல்துறையின் உத்தரவை மீறி பயணித்த வாகனத்தின் மீது துப்பாக்கிப் பிரயோகம்!

உத்தரவை மீறி பயணித்த மகிழுந்தின் மீது மாலபே காவல்துறையினர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். இதன்போது குறித்த வாகனத்திலிருந்து 02 கிலோ கிராமிற்கும் அதிகமான கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த சம்பவத்தில் இருவர் கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர். 30 வயதுடைய ஒரு ஆண் ஒருவரும், 33 வயதுடைய ஒரு பெண் ஒருவருமே சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

கணேமுல்ல சஞ்சீவ கொலைதாரியுடன் தொடர்புடைய பெண்ணை கைது செய்ய நடவடிக்கை..!

கணேமுல்ல சஞ்சீவ கொலையுடன் தொடர்புடைய 25 வயதுடைய இஷாரா செவ்வந்தி என்ற பெண்ணை தேடுவதற்காக நாடளாவிய ரீதியில் விசேட நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். குறித்த பெண் சட்டத்தரணி வேடமணிந்து நீதிமன்றத்துக்கு துப்பாக்கியைக் கொண்டு வந்தவரென காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர். கொலைக்குப் பின்னர் தப்பிச் சென்றிருந்த குறித்த பெண் வேறு நாட்டிற்குத் தப்பிச் சென்றுள்ளதாகக் கூறப்பட்டது. எனினும், அந்தப் பெண்...

வவுனியாவில் விற்பனை நிலையம் ஒன்றிலிருந்து மீட்கப்பட்ட சடலம்!

வவுனியா நகரில் உள்ள ஒரு விற்பனை நிலையம் ஒன்றிலிருந்து நேற்று (11) ஆண்னொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. உயிரிழந்த நபர் அதே விற்பனை நிலையத்தில் ஊழியர் எனத் தெரிவிக்கப்படுகின்றது. இரவு வீட்டிற்குச் செல்ல முடியாத காரணத்தால் குறித்த நபர், விற்பனை நிலையத்தின் மேல் மாடியில் தங்கியிருப்பதாகவும், மேல் மாடியிலிருந்து கீழே விழுந்ததால் உயிரிழந்திருக்கலாம் எனவும் காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். உயிரிழந்தவர் வவுனியா...

அர்ச்சுனா எம்.பிக்கு எதிராக பொலிஸார் நடவடிக்கை..!

யாழ்பாண மாவட்ட சுயேட்சை நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவிற்கு எதிராகப் போக்குவரத்து மற்றும் தண்டனைக் கோவை சட்டங்களின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் காவல்துறை அறிவித்துள்ளது. அனுராதபுரம் - ரம்பேவ பகுதியில் வைத்து நேற்று அதிகாலை இராமநாதன் அர்ச்சுனா காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். போக்குவரத்து விதிகளை மீறியமைக்காக அவரது வாகனத்தை நிறுத்திய காவல்துறை அதிகாரிகளுக்கு எதிராக நாடாளுமன்ற உறுப்பினர்...
- Advertisement -spot_img

Latest News

நாளை காலை முதல்வராக பதவியேற்கும் விஜய்!

தவெக தலைவர் விஜய்யை ஆட்சி அமைக்க வருமாறு ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார். இதற்கமைய நாளை காலை 10 மணிக்கு விஜய் முதல்வராக பதவி ஏற்க உள்ளார் என...
- Advertisement -spot_img