Wednesday, June 10, 2026
No menu items!

கைதி

ரணிலின் கைது அரசியல் பழிவாங்கலாகவே தெரிகிறது –எம்.பி ஞா. ஸ்ரீநேசன்!

ரணில் விக்கிரமசிங்கவை விட பல்வேறு குற்றச்சாட்டுகளுடன் பல முன்னாள் ஜனாதிபதிகள் உள்ளனர் அவர்களும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும், இல்லாவிடின் ரணிலின் கைதினை அரசியல் பழிவாங்கலாகவே நாம் பார்க்கிறோம் என எம்.பி ஞா. ஸ்ரீநேசன் தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் பாலையடிவட்டை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும்...

ஜனாதிபதியின் பொதுமன்னிப்புக்கான நிபந்தனைகளை கடுமையாக்கவுள்ள நீதி அமைச்சு!

இலங்கையில் தேசிய நிகழ்வுகளைக் கருத்தில் கொண்டு வழங்கப்படும் ஜனாதிபதியின் பொதுமன்னிப்புக்கான நிபந்தனைகளை, இனிவரும் காலங்களில் நீதி அமைச்சு கடுமையாக்கும் என்று நீதியமைச்சர் ஹர்சன நாணயக்கார தெரிவித்துள்ளார். பொது மன்னிப்பின் கீழ் கைதிகளை விடுவிப்பதில் அண்மையில் கண்டறியப்பட்ட முறைகேடுகளைக் கருத்திற் கொண்டு இந்த செயற்பாடு நடைமுறைக்கு வரவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். தேசிய சுதந்திர தினம், விசாக பூரணை மற்றும்...

388 கைதிகளுக்கு விசேட பொது மன்னிப்பு..!

விசாக பூரணை தினத்தை முன்னிட்டு 388 கைதிகளுக்கு விசேட பொது மன்னிப்பு வழங்கப்படவுள்ளதாக, சிறைச்சாலைகள் ஆணையாளரும், பேச்சாளருமான காமினி பீ திசாநாயக்க தெரிவித்துள்ளார். அதற்கமைய, எதிர்வரும் 12 ஆம் திகதியன்று அரசியலமைப்பின் 34 ஆவது பிரிவின் மூலம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி, குறித்த கைதிகள் விசேட பொது மன்னிப்பில் விடுவிக்கப்படவுள்ளனர். அபராதம் செலுத்தாததால் சிறைத்தண்டனையை அனுபவிக்கும் கைதிகளும்,...

மெகசின் சிறைச்சாலை கைதியின் மரணம் குறித்து விசாரணைகள் ஆரம்பம்..!

சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் சக கைதிகளால் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் கொழும்பு மெகசின் சிறைச்சாலை கைதியின் மரணம் தொடர்பாக பொரளை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். போதைப்பொருள் கடத்திய குற்றச்சாட்டில் மஹரகம பொலிஸாரால் கைதான சந்தேகநபர் கடந்த மாதம் 23 ஆம் திகதி விளக்கமறியலில் வைக்கப்பட்டார். கொழும்பு மெகசின் சிறைச்சாலையின் இரு அதிகாரிகள், போதைப்பொருள் வைத்திருந்ததாக சந்தேகத்தின் பேரில் அந்த நபரை...

சுதந்திர தினத்தை முன்னிட்டு கைதிகள் சிலருக்கு விடுதலை!

நாட்டின் 77ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, கைதிகள் சிலருக்கு விசேட பொது மன்னிப்பின் கீழ் விடுதலை அளிக்கப்பட்டுள்ளது. அரசியலமைப்பின் 34 ஆவது சரத்துக்கமைய, ஜனாதிபதிக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரத்தின் பிரகாரம் இந்த பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது. இதன்படி, நாடளாவிய ரீதியில் உள்ள சிறைகளில் சிறு குற்றங்களுக்கான தண்டனை பெற்றுவரும் 285 கைதிகள் இன்று விடுவிக்கப்பட்டு வருகின்றனர். பொது மன்னிப்பின் கீழ் விடுவிக்கப்படுபவர்களில்...

மட்டு. சிறைச்சாலையில் 16 கைதிகள் பொதுமன்னிப்பில் விடுதலை..!

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 77வது தேசிய சுதந்திர தினத்தினை முன்னிட்டு ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைவாக மட்டக்களப்பு சிறையிலிருந்து 16 கைதிகள் இன்று (04/02/2025) திகதி விடுதலை  செய்யப்பட்டுள்ளனர். மட்டக்களப்பு சிறைச்சாலையின் அத்தியட்சகர் என்.பிரபாகரன் தலைமையில்  விடுதலை செய்யப்பட்ட நிகழ்வில் சிறைச்சாலையின் பிரதம ஜெயிலர் உள்ளிட்ட சிறைச்சாலை அதிகாரிகள் கலந்துகொண்டு சிறுகுற்றங்கள் புரிந்ததன் அடிப்படையில் தண்டனை...

காலி சிறைச்சாலையில் மோதல் – விசாரணைகள் தீவிரம்..!

காலி சிறைச்சாலையில் இரண்டு கைதிகளுக்கு இடையில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கு உதவி சிறைச்சாலை அத்தியட்சகர் தலைமையிலான குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் இன்று (27/1/2025) நீதிமன்றில் அறிவிக்கவுள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளரும் சிறைச்சாலைகள் ஆணையாளருமான காமினி பீ.திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார். நேற்று (26/1/2025) இடம்பெற்ற மோதலில் காலி சிறைச்சாலையில் இருந்து நான்கு கைதிகள் காயமடைந்து...

தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு கைதிகளை பார்வையிட அனுமதி!

தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறைச்சாலைகளில் உள்ள இந்துமத கைதிகளை பார்வையிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகச் சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. சிறைச்சாலைகள் திணைக்களம் அறிக்கை ஒன்றின் ஊடாக இதனைக் தெரிவித்துள்ளது. அதன்படி நாளையதினம், சிறைச்சாலைகளில் உள்ள இந்துமத கைதிகளை பார்வையிட வரும் உறவினர்களால் கைதியொருவருக்கு தேவையான அளவு, உணவுப் பொருட்கள் மற்றும் இனிப்புகளை எடுத்து வர முடியும் என சிறைச்சாலைகள்...

கைதிக்கு சூட்சுமமான முறையில் கைவிலங்கு சாவி கொடுக்க முன்றவர் கைது..!

புதிய மெகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதி ஒருவருக்கு மிகவும் சூட்சுமமான முறையில் கைவிலங்கு சாவியை கொண்டு சென்றதாக கூறப்படும் சந்தேக நபரொருவர் சிறைச்சாலை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஆணையாளர் காமினி பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார். சந்தேக நபர் புதிய மெகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதி ஒருவரை சந்திப்பதற்கு சென்ற போது சிறைச்சாலை...

உணவுப் பொதியிலிருந்து ஐஸ் போதைப்பொருள் மீட்பு!

புதிய மெகசீன் சிறைச்சாலையில் கைதியொருவரை பார்க்கச் சென்றவர் எடுத்துச் சென்ற உணவுப் பொதியிலிருந்து ஐஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது. தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதியொருவரை பார்வையிட வந்த நபரொருவர் கொண்டு வந்த உணவுப் பொதியில் இரண்டு சிறிய பொதிகளில் சூட்சுமமாக மறைத்துவைத்து எடுத்துச் சென்ற ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் காமினி பி. திஸாநாயக்க தெரிவித்தார். இந்த...
- Advertisement -spot_img

Latest News

சட்டவிரோத ட்ரோன் இறக்குமதி மற்றும் பயன்பாட்டுக்குத் தடை!

இலங்கை அதிகாரிகள்,ட்ரோன் செயல்பாடுகள் மற்றும் இறக்குமதிகள் மீதான விதிமுறைகளைக் கடுமையாக்க நடவடிக்கை எடுத்துள்ளனர் என டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது. இதற்கமைய கட்டாய உரிமம் மற்றும் பதிவுத்...
- Advertisement -spot_img