Tuesday, June 9, 2026
No menu items!

சீரற்ற வானிலை

சீரற்ற வானிலை; மூவாயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, ஏழு (07) மாவட்டங்களில் உள்ள 1,113 குடும்பங்களைச் சேர்ந்த 3,475 பேர் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 489 குடும்பங்களைச் சேர்ந்த 1,310 நபர்கள் எட்டு (08) தற்காலிகப் பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இதேநேரம், மட்டக்களப்பு மாவட்டத்தின் கோரளைப்பற்று தெற்கில் ஒரு...

பாடசாலை மாணவர்களுக்கு 25,000 ரூபா உதவி..!!

வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாகப் பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்கள் ஒவ்வொருவருக்கும், அவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்காக 25,000 ரூபாவை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. குறித்த நிதியை ஜனாதிபதி நிதியத்திலிருந்து வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. இதேவேளை, அனர்த்தத்தினால் பாதிக்கப்படாத மாகாணங்கள் மற்றும் மாவட்டங்களில் உள்ள பாடசாலைகள் எதிர்வரும் டிசம்பர் 16 ஆம் திகதி மீண்டும் திறக்கப்படும்...

உயிரிழந்தோரின் எண்ணிக்கை 474 ஆக அதிகரிப்பு..!!

சீரற்ற வானிலை காரணமாக நாடு முழுவதும் ஏற்பட்ட அனர்த்தங்களினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 474 ஆக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் நிலவும் சீரற்ற வானிலை மற்றும் அனர்த்த நிலைமைகள் காரணமாகப் பாதிக்கப்பட்டவர்களின் விபரங்கள் அடங்கிய அறிக்கையை அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இன்று (03) காலை 10.00 மணிக்கு வெளியிட்டுள்ளது. குறித்த அறிக்கையின் புள்ளிவிபரங்களின்படி, அனர்த்தங்களினால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 474...

2025 மகளிர் ஒருநாள் உலகக் கிண்ணம்: இங்கிலாந்து – தென்னாப்பிரிக்கா அரையிறுதிப் போட்டி இன்று !

2025 ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக் கிண்ணத்தின் முதல் அரையிறுதிப் போட்டியில் இன்று இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி இலங்கை நேரப்படி பிற்பகல் 3.00 மணிக்கு கவுகாத்தி நகரில் உள்ள பர்சபரா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான இது மூன்றாவது அரையிறுதி மோதலாகும். இங்கிலாந்து அணி, நாட் ஸ்கைவர்-பிரண்ட் தலைமையிலிருந்து,...

ஹைதராபாத்திலிருந்து பெங்களூரு நோக்கிப் பயணித்த பேருந்தில் தீ விபத்து – 25 பேர் பலி!

இந்தியாவின் ஹைதராபாத்திலிருந்து பெங்களூரு நோக்கிப் பயணித்த தனியார் பேருந்து, வழியிலே ஒரு உந்துருளியுடன் (lorry) மோதியதில் ஏற்பட்ட தீப்பரவலில் குறைந்தது 25 பேர் உயிரிழந்ததாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அந்த பேருந்தில் சுமார் 40 பயணிகள் இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. தீப்பரவலில் சிலர் கடுமையான தீக்காயங்களுடன் உயிர் பிழைத்துள்ளனர். அவர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை...

சீரற்ற காலநிலை: 12 மாவட்டங்களில் 9,000-க்கும் அதிகமானோர் பாதிப்பு – 3 பேர் உயிரிழப்பு!

நாட்டில் நிலவி வரும் சீரற்ற வானிலையின் காரணமாக, 12 மாவட்டங்களில் 2,357 குடும்பங்களைச் சேர்ந்த 9,392 பேர் பலவிதமாக பாதிக்கப்பட்டுள்ளனர் என தேசிய அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. இதுவரை இந்த வானிலை காரணமாக மூன்று பேர் உயிரிழந்துள்ளனர் என்பதோடு, 377 வீடுகள் பகுதியளவு சேதமடைந்துள்ளன என்று அந்த நிலையத்தின் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார். தற்போதைய...

நாட்டில் கனமழை தாக்கம் – இரண்டு உயிரிழப்புகள், நூற்றுக்கணக்கானோர் பாதிப்பு!!

நாட்டின் பல பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக, கொழும்பில் பல வீதிகளில் வெள்ளநீர் தேங்கி கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. பலத்த மழையினால் விபத்துகள் ஏற்படும் அபாயம் இருப்பதால், சாரதிகள் மிகுந்த அவதானத்துடன் வாகனங்களை இயக்குமாறு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் தகவலின்படி, சீரற்ற வானிலை காரணமாக  இதுவரை இரண்டு உயிரிழப்புகள்...

மேற்கு சூடானின் தொடரும் சீரற்ற வானிலையினால் 1000க்கு மேற்பட்டோர் பலி!

மேற்கு சூடானின் தொடரும் சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட மண்சரிவினால் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மண்சரிவானது கடந்த 31 ஆம் திகதி பதிவான போதிலும் இன்று (2) உத்தியோகப்பூர்வமான அறிவிப்பு வௌியாகியுள்ளது. பலர் இந்த மண்சரிவில் சிக்கி காணாமல் போயுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. மீட்பு பணிகளுக்காக ஐக்கிய நாடுகள் சபை மற்றும் பிற சர்வதேச...

வறட்சியான  வானிலை காரணமாக குடிநீர் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டுகோள் – நீர் வழங்கல் சபை அறிவுறுத்தல்!

தற்போது நிலவும் வறட்சியான வானிலை காரணமாக, குடிநீரை முடிந்தவரை சிக்கனமாகப் பயன்படுத்துமாறு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் சபை, நுகர்வோரிடம் கோரியுள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் நிலவும் வறட்சியான வானிலை காரணமாக, நீர் ஆதாரங்களில் நீர் மட்டம் வேகமாகக் குறைந்து வருவதாகவும், வெப்பம் காரணமாக மக்களின் நீர் நுகர்வு மிக அதிகமாக இருப்பதாகவும் சபை...

நிலவும் சீரற்ற வானிலையால் பல்லாயிரக்கணக்கானோர் பாதிப்பு..!

நிலவும் சீரற்ற வானிலை காரணமாக 14 மாவட்டங்களைச் சேர்ந்த 140 பிரதேச செயலகப் பிரிவுகளில் 2,757 குடும்பங்களைச் சேர்ந்த 10,270 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார். பெய்து வரும் பலத்த மழையை கருத்தில் கொண்டு நாடு முழுவதும் உள்ள பல நீர்த்தேக்கங்களில் பல வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாகவும்...
- Advertisement -spot_img

Latest News

காகிதத்தில் கோடீஸ்வரரான பெண்; போலி நாணயத்தாள்கள் மீட்பு

கொழும்பு,கொட்டிக்காவத்தையில் நடத்தப்பட்ட சோதனை ஒன்றின் போது, ​​700,000 அமெரிக்க டொலர் முகமதிப்புள்ள 60 கட்டு,போலி நாணயத்தாள்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். சம்பவம் தொடர்பில் 53 வயதான இலங்கைப் பெண்...
- Advertisement -spot_img