Wednesday, August 19, 2026
No menu items!

சூறாவளி

வருமான வரிக் கணக்குகளை தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் நீடிப்பு !!

​நாட்டின் பல பகுதிகளில்  'டிட்வா' சூறாவளி  (Cyclone Ditwah) மற்றும் கடுமையான வானிலையால் பரவலான இடையூறுகள் ஏற்பட்டது. அதனைத்தொடர்ந்து, 2024/2025 மதிப்பீட்டு ஆண்டுக்கான வருமான வரிக் கணக்குகளைத் தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை உள்நாட்டு இறைவரித் திணைக்களம் (IRD) நீட்டித்துள்ளது. ஆரம்பத்தில் வரிக் கணக்குகள் சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு நவம்பர் 30, 2025 ஆக நிர்ணயிக்கப்பட்டிருந்தாலும், மோசமான வானிலை காரணமாக...

அனர்த்த நிவாரணம் தொடர்பான விசேட சுற்றறிக்கை..!!

அனர்த்த நிவாரணம் தொடர்பான விசேட சுற்றறிக்கை  நேற்று (05) வெளியிடப்பட்டுள்ளது. திடீர் அனர்த்த நிலைமை காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ள மற்றும் சீர்குலைந்துள்ள மக்களின் வாழ்க்கையை மீட்டெடுப்பதற்காக, விரைவான நிவாரணத்தை வழங்குவதை நோக்கமாகக் கொண்டு இந்தச் சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.  சுற்றறிக்கை கீழே…

நாட்டை மீட்டெடுக்க 19,000 இலங்கையர்கள் நிதி பங்களிப்பு..!!

'டித்வா' சூறாவளியால் ஏற்பட்ட பெரும் சேதத்திற்குப் பிறகு நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதை நோக்கமாகக் கொண்ட ‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு நேற்று (02) வரை 19,000 க்கும் மேற்பட்ட வெளிநாட்டில் தொழில்புரியும் இலங்கையர்கள் பணத்தை வைப்புச் செய்துள்ளதாக நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கலாநதி ஹர்ஷன சூரியப்பெரும தெரிவித்தார். நிதி, திட்டமிடல்...

பிலிப்பைன்ஸில் கல்மேகி சூறாவளி: 58 பேர் பலி!

பிலிப்பைன்ஸ் நாட்டை தாக்கிய “கல்மேகி” என்ற சூறாவளியால் ஏற்பட்ட கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கில் 58 பேர் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். வெள்ளத்தில் சிக்கி 300க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன மற்றும் பல வாகனங்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்டன. பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதுடன், தொலைத்தொடர்பு சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. சூறாவளி தாக்கத்தால் 180க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும்,...

இன்றைய நாளுக்கான வானிலை!

வடக்கு, வடமத்திய, மத்திய , சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடுமென சிரேஸ்ட  வானிலை அதிகாரி மொஹமட் சாலிஹீன் தெரிவித்துள்ளார். மத்திய மலைப் பிராந்தியத்தின் மேற்கு சரிவுகளிலும், மத்திய, சப்ரகமுவ, மேல், தென், வடமத்திய, வடமேல் மற்றும் வட மாகாணங்களிலும் அத்துடன் திருகோணமலை மற்றும்...

அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள சூறாவளி- அவசரகால நிலை அறிவிப்பு!

அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள சூறாவளி மற்றும் புயல் காரணமாக இதுவரையில் 20 பேர் வரையில் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளைச் சூறாவளி மற்றும் புயல் தாக்கி வருகிறது. இதன் காரணமாகப் பெருமளவான குடியிருப்புகள் சேதமடைந்துள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மிசோரியில் சுமார் ஒரு இலட்சம் பேர் மின்சாரமின்றி இருப்பதாகக் கண்காணிப்பு சேவை தெரிவித்துள்ளது. அத்துடன், ஆர்கன்சஸ், இந்தியானா, டெக்சாஸ்...

சூறாவளி காற்று வீசும் கோள்….மணிக்கு 33,000 கிலோமீட்டர் வேகம்..!

ஒரு புறக்கோளில் மணிக்கு 33,000 கிலோமீட்டர் வேகத்தில் சூறாவளி வீசுவதை வானியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். பூமியிலிருந்து சுமார் 500 ஒளி ஆண்டுகள் தொலைவில் வாயுப் புறக்கோள் ஒன்று உள்ளது. மிகக் குறைந்த நிறையைக் கொண்ட இந்தக் கோளில் பூமத்திய ரேகையில் சூறாவளி காற்று வீசும் பெரிய வளையம் ஒன்று உள்ளது. ஐரோப்பிய தெற்கு ஆய்வக விஞ்ஞானிகள் பெரிய தொலைநோக்கியின் உதவியுடன்...

இன்றைய நாளுக்கான வானிலை…

தென்மேற்கு வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை நவம்பர் 26, 2024 அன்று இரவு 11.30 மணியளவில் திருகோணமலைக்கு தென்கிழக்கே சுமார் 190 கிலோமீற்றர் தொலைவில் நிலைகொண்டது. இது இன்று (27.11.2024) மேலும் தீவிரமடைந்து நாட்டின் கிழக்கு கடற்கரைக்கு அருகே வடக்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து சூறாவளி புயலாக மாற...

யாகி சூறாவளி காரணமாக 220 பேர் பலி!

யாகி சூறாவளி காரணமாக மியன்மாரில் இதுவரை 220 பேர்வரை உயிரிழந்ததாக அந்த நாட்டு இராணுவம் தெரிவித்துள்ளது. இதுவரையில் 80 பேர் தேடப்பட்டு வருவதாகவும் சர்வதேச ஊடகங்கள் குறிப்பிடுகின்றன. வியட்நாம், லாவோஸ், தாய்லாந்து மற்றும் மியன்மார் ஆகிய நாடுகளில் இச் சூறாவளியின் தாக்கம் அதிகரித்துக் காணப்படுகிறது.

சீனாவின் ஷங்காய் நகரத்தை தாக்கிய சூறாவளி!

பல வருடங்களுக்கு பின்னர் சீனாவின் ஷங்காய் நகரத்தை திங்கட்கிழமை (16) அதிகாலை சக்திவாய்ந்த சூறாவளி தாக்கியுள்ளது. இதனை தொடர்ந்து பாரிய காற்றும் வீசியதோடு, பலத்த மழையுடன் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், அங்கிருந்து 400,000 க்கும்  அதிகமானவர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். அத்தோடு,  விமானங்கள், படகுகள் மற்றும் ரயில் சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன. சீனாவில் மூன்று நாள் இலையுதிர்கால கொண்டாட்டங்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. ஷாங்காய்க்கு தென்மேற்கே...
- Advertisement -spot_img

Latest News

தலவாக்கலையில் வாகன பரிசோதனை: 28 வாகனங்கள் அகற்றப்பட்டன 

தலவாக்கலை பகுதியில் நடத்தப்பட்ட திடீர் பரிசோதனையில் வீதியில் செல்வதற்கு தகுதியற்றவை என கண்டறியப்பட்ட, 28 வாகனங்கள் தற்காலிகமாக வீதியிலிருந்து அகற்றப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட பிரதான மோட்டார்...
- Advertisement -spot_img