பதுளை
புதிய செய்திகள்
தடம்புரண்ட தொடருந்து…!
மலையக மார்க்கதிலான தொடருந்து சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
பதுளையில் இருந்து கண்டி நோக்கி பயணித்த தொடருந்து தெமோதரை தொடருந்து நிலையத்திற்கு அருகில் தடம்புரண்டதன் காரணமாக மலையக மார்க்கதிலான தொடருந்து சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
குறித்த தொடருந்தை வழித்தடமேற்றும் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக தொடருந்து கட்டுப்பாட்டு அறை தகவல் தெரிவித்துள்ளது.
புதிய செய்திகள்
ரயில் மோதி நபரொருவர் உயிரிழப்பு!
கொழும்பிலிருந்து பதுளை நோக்கி பயணித்த சீக்ரகாமி ரயில் மோதி இனந்தெரியாத நபரொருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் பிலிமத்தலாவை மற்றும் மித்தெனிய ரயில் நிலையங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் நேற்றையதினம் இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவரின் அடையாளம் இதுவரை கண்டறியப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் 35 வயதுடைய 06 அடி 04 அங்குல உயரமும் ஊதா நிற காற்சட்டை , சாம்பல் நிற...
உள்நாட்டுச்செய்திகள்
மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்த இரு விபச்சார விடுதிகள்…!
கல்கிசை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்த இரு விபச்சார விடுதிகளிலிருந்து 5 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கல்கிசை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கல்கிசை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கல்கிசை, வவுனியா, பமுனுவ , நொச்சியாகம மற்றும் பதுளை ஆகிய...
புதிய செய்திகள்
இளம் சமூகத்தவரிடம் உள்ள மனநல நோய் அறிகுறி…!!
மனநல நோய்க்குரிய அறிகுறிகளுடன் பதுளை போதனா வைத்தியசாலைக்கு வருகை தரும் சிறுவர்கள் மற்றும் இளைஞர் யுவதிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக பதுளை வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப்பிரிவின் சிரேஷ்ட வைத்தியர் பாலித ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
மனநல நோய்க்குரிய அறிகுறிகளுடன் நாளாந்தம் 4 முதல் 5 சிறுவர்களும், 3 முதல் 4 இளைஞர் யுவதிகளும் வைத்தியசாலைக்கு வருகை தருகின்றனர்.
அத்துடன் மயக்கம்,...
புதிய செய்திகள்
மதஸ்தாபனங்களுக்கு ஜனாதிபதி விசேட நிதி ஒதுக்கீடு…!!
பதுளை மாவட்டத்தில் உள்ள மதஸ்தாபனங்களுக்கு நிதி உதவிகள் வழங்கும் திட்டம் நேற்று முன்தினம் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் பதுளைப் பாராளுமன்ற உறுப்பினருமான வடிவேல் சுரேஷினால் ஆரம்பிக்கப்பட்டது.
இதன் போது பதுளை மாவட்டத்திலுள்ள 34 பள்ளிவாசல்கள், 111 ஆலயங்களுக்கான நிதி உதவிகளுக்கான கடிதங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் பதுளைப் பாராளுமன்ற உறுப்பினருமான வடிவேல் சுரேஷின் வேண்டுகோளுக்கிணங்க...
News Updates
மாரிஸ் ஸ்டெல்லா,லைசியம் வெற்றி – ரிட்ஸ்பரி அஞ்சலோட்ட களியாட்டம்..!
இலங்கையின் வளர்ந்து வரும் விளையாட்டு வீரர்களின் திறமைகளை வெளிப்படுத்துவதற்காக மூன்று நாள் போட்டியாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த, ரிட்ஸ்பரி அஞ்சலோட்ட களியாட்டம் அண்மையில் பதுளை, வின்சன்ட் டயஸ் மைதானத்தில் நிறைவடைந்தது.
கல்வி அமைச்சு மற்றும் இலங்கை பாடசாலைகள் மெய்வல்லுநர் சம்மேளனம் மற்றும்
நிகழ்வின் ஏக அனுசரணையாளராக ரிட்ஸ்பரி ஆகியன இணைந்து இந்த நிகழ்வை ஏற்பாடு
செய்திருந்தன.
நாடு முழுவதிலும் இருந்து 220க்கும்...
உள்நாட்டுச்செய்திகள்
இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து விபத்து!
பதுளையில் இருந்து பண்டாரவளை நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்று ஹல்பே பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது.
பேருந்து சாலையை விட்டு விலகி அருகில் இருந்த ஹோட்டல் சுவரில் மோதியது. பேருந்தில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறு காரணமாக விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
விபத்தில் காயமடைந்தவர்கள் தெமோதர பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காயமடைந்தவர்களில் 04 பெண்களும் 4...
உள்நாட்டுச்செய்திகள்
பதுளையில் பேரூந்து விபத்து; ஐந்து பேர் காயம்…!
பதுளை, எல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹல்பே பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் ஐந்து பேர் காயமடைந்துள்ளதாக எல்ல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பெத்தேவெலவிலிருந்து பண்டாரவளை நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேரூந்து ஒன்று வீதியை விட்டு விலகி அருகிலிருந்த சுவரில் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
மேலும், விபத்தின் போது பேரூந்தில் 18 பேர் பயணித்துள்ளதோடு அவர்களில் ...
புதிய செய்திகள்
போலி தங்க நகைகளை பயன்படுத்தி பண மோசடி!
பதுளையில் உள்ள தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் போலி தங்க நகைகளை பயன்படுத்தி 19,670,000 ரூபாவை மோசடி செய்த நபரை பதுளை பொலிஸ் பிரிவின் விசேட குற்றப்புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
தனியார் நிதி நிறுவன உரிமையாளர் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இதன் போது சந்தேகநபரிடம் இருந்து 41 போலி நகைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார்...
புதிய செய்திகள்
பதுளையில் பாரிய தீ பரவல் !
பதுளை, கொஸ்லாந்தை, பூனாகலை வனப்பகுதியில் பாரிய தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று வியாழக்கிழமை (27.06) பிற்பகல் தீ விபத்து ஏற்பட்டதுடன், ஐம்பது ஏக்கருக்கும் அதிகமான வனப்பகுதி முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது.
குறித்த பகுதியில் நிலவும் வரட்சியான வானிலை மற்றும் காற்றின் வேகத்தால் தீ வேகமாகப் பரவியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பூனாகலை மலைத் தொடரின் சரிவுகளில் கொஸ்லாந்தை மற்றும் வெல்லவாய...
Latest News
பங்களாதேஷில் எரிபொருள் விலை அதிகரிப்பு
பங்களாதேஷில் எரிபொருள் விலை 10% முதல் 15% வரை அதிகரிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் எரிசக்தி அமைச்சு நேற்று (சனிக்கிழமை) அறிவித்துள்ளது.
உலகளாவிய மசகு எண்ணெய் விலையில் ஏற்பட்ட அதிகரிப்பு...


