Wednesday, July 22, 2026
No menu items!

போதைப்பொருள்

யாழில் இடம்பெறும் குற்ற செயல்களுக்கு விரைவில் முற்றுப்புள்ளி – ஆனந்த விஜேபால..!

யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்படும் போதைப்பொருள் விற்பனை மற்றும் சட்டவிரோத சொத்து சேகரிப்பு தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்படும் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவிக்கின்றார். நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவன் ஜெயசந்திரமூர்த்தி எழுப்பிய கேள்விக்குப் பதில் வழங்கும் போதே அமைச்சர் இந்த விடயத்தை நாடாளுமன்றத்தில் குறிப்பிட்டார். இதேவேளை நாடளுமன்றத்தில் உரையாற்றிய ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி யாழ்ப்பாணத்தில் போதைப்பொருள் மாபியாக்கள், போதைப்பொருட்களை...

Ez Cash முறையை பயன்படுத்தி போதைப்பொருள் விற்பனை – 50 வயது பெண் கைது..!!

நுவரெலியா, வெலிமடை, பண்டாரவளை மற்றும் கெப்பட்டிபொல பகுதிகளில் ஈஸி கேஷ் (Ez Cash) முறையைப் பயன்படுத்தி போதைப்பொருள் விற்பனை செய்து வந்ததாக சந்தேகிக்கப்படும் 50 வயதுடைய பெண் ஒருவர், “மஹரகம அக்கா” என்ற பெயரில் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். இக்கைது நுவரெலியா பொலிஸ் ஊழல் ஒழிப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சிறப்புச் சுற்றிவளைப்பின் போது இடம்பெற்றுள்ளது. இச்...

மஹரகமவில் ஹெரோயின் மற்றும் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் பெண் உட்பட நால்வர் கைது!

மஹரகம பகுதியில் 1.5 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் 680 கிராம் ‘ஐஸ்’ போதைப்பொருள் உடன், ஒரு பெண் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தக் கைதுகள், களனி பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்ட சிறப்பு நடவடிக்கையின் போது இடம்பெற்றதாக பொலிசார்  தெரிவித்தனர். முன்னதாக, எண்டெரமுல்ல பகுதியில் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட ஒரு சந்தேக நபரை விசாரித்தபோது...

களுத்துறையில் 10 கிலோ போதைப்பொருள் பொதி மீட்பு!

இன்று (05) காலை, களுத்துறை தெற்கு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கட்டுகுருந்த கடற்கரையில், போதைப்பொருள் என சந்தேகிக்கப்படும் ஒரு பொதி கரை ஒதுங்கி கிடந்தது. சுமார் 10 கிலோகிராம் எடையுடைய அந்தப் பொதியை, அருகிலிருந்த சுற்றுலா ஹோட்டல் ஊழியர்கள் கண்டுபிடித்து பாதுகாப்புப் பிரிவினருக்கு தகவல் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து, பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் சம்பவ இடத்துக்கு சென்று...

ஒரே நாளில் 1,200க்கும் மேற்பட்டோர் போதைபொருட்களால் கைது!

நாட்டிலிருந்து போதைப்பொருளை முற்றிலுமாக ஒழிப்பதை நோக்கமாகக் கொண்ட “முழு நாடுமே ஒன்றாக – தேசிய செயற்பாடு” என்ற கருப்பொருளின் கீழ், நேற்று (03) நடைபெற்ற நாடு தழுவிய நடவடிக்கையில் 1,200க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பில் காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்ததாவது, நேற்றைய தினம் (03.11)நாடு முழுவதும் நடத்தப்பட்ட 1,273 சோதனைகளில் மொத்தம் 1,264 சந்தேக...

போதைப்பொருள் பழக்கத்திற்கு அடிமையானவர்களை அடையாளம் காண காவல்துறை விசேட நடவடிக்கை!

காவல்துறை போதைப்பொருள் பழக்கத்திற்கு அடிமையானவர்களை அடையாளம் காண காவல்துறை கணக்கெடுப்பு நடத்தவுள்ளது என காவல்துறை ஊடகப் பேச்சாளர் காவல் துறை மா அதிபர் (சிறப்பு பிரிவு) எப்.யு. வூட்லர் தெரிவித்துள்ளார். போதைப்பொருள் பழக்கத்திலிருந்து விடுபடச் செய்வதற்காக மறுவாழ்வு திட்டம் ஒன்றும் தயாரிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். இதன் மூலம் போதைப்பொருளுக்கான தேவை குறைக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார். மேலும், போதைப்பொருள்...

கொழும்பு நகைக் கடைகளில் கொள்ளை: கலால் துறையின் ஐந்து அதிகாரிகள் கைது!

கொழும்பில் உள்ள இரண்டு தங்க நகைக் கடைகளில் இருந்து ரூ.102 மில்லியன் திருடப்பட்ட சம்பவம் தொடர்பாக, கலால் துறையின் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவைச் சேர்ந்த ஐந்து அதிகாரிகள் குற்றப்புலனாய்வுத் துறையினரால் (சிஐடி) கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் ஒரு இன்ஸ்பெக்டர் மற்றும் நான்கு கார்போரல்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்கள், அதிகாரப்பூர்வ சோதனை நடத்துவதாகக் கூறி சீ ஸ்ட்ரீட்டில்...

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 182.5 மில்லியன் ரூபா மதிப்புள்ள ஹாஷிஷ் போதைப்பொருள் – கனேடிய மாணவர் கைது!

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 182.5 மில்லியன் ரூபா பெறுமதியான ஹாஷிஷ் போதைப்பொருள் கடத்த முயன்ற 21 வயது கனேடிய பிரஜை ஒருவர் இன்று (28) அதிகாலை சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட நபர் கனடாவில் உயர்கல்வி பயிலும் மாணவர் என்றும், அவர் டுபாயில் இருந்து இலங்கைக்கு வந்தவர்...

நாடு தழுவிய பொலிஸ் நடவடிக்கை: 781 நபர்கள் கைது!

நேற்றைய தினம்  (அக்டோபர் 26) நாடாளவிய ரீதியில் நடத்தப்பட்ட விரிவான பொலிஸ் நடவடிக்கையில், பல்வேறு குற்றங்கள், போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத மதுபானக் குற்றங்களுடன் தொடர்புடைய 781 நபர்கள் கைது செய்யப்பட்டதாக  பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. அனைத்து மாகாணங்களிலும் ஒரே நேரத்தில் நடந்த இந்த நடவடிக்கை, அதிகரித்து வரும் குற்றச் செயல்களைத் தடுப்பதற்கும் பொதுப் பாதுகாப்பை...

ஏறாவூரில் போதைப்பொருள் விற்பனை நிலையம் முற்றுகை – பெண் ஒருவர் கைது!

ஏறாவூர் பிரதேசத்தில் போதைப்பொருள் விற்பனை நிலையமாக செயற்பட்டு வந்த வீடு ஒன்றை பொலிஸார் நேற்று (26) முற்றுகையிட்டுள்ளனர். இச் சம்பவத்துடன் தொடர்புடைய 56 வயதான பெண் ஒருவரையும் கைது செய்துள்ளனர். ஏறாவூர் பொலிஸார் தெரிவித்ததாவது, சந்தேகநபரிடமிருந்து 5,350 மில்லி கிராம் ‘ஜஸ்’ போதைப்பொருள் மற்றும் போதைப்பொருள் வியாபாரம் மூலம் ஈட்டியதாக சந்தேகிக்கப்படும் ரூ. 3 இலட்சத்து 61...
- Advertisement -spot_img

Latest News

அமெரிக்காவுக்கான முன்னாள் தூதுவர் ஜாலியவுக்கு மீண்டும் பிடியாணை

அரச நிதியை முறைகேடாக பயன்படுத்திய சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், தற்போது நீதிமன்றத்தை தவிர்த்து வரும் அமெரிக்காவிற்கான முன்னாள் இலங்கை தூதுவர்...
- Advertisement -spot_img