கடந்த அரசாங்கத்தின் முன்னாள் அமைச்சர்கள் இருவர் சில சொத்துக்களை எவ்வாறு பெற்றுக்கொண்டார்கள் என்பது தொடர்பில் விளக்கமளிக்கத் தவறியமை தொடர்பில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கறுவாத்தோட்டத்தில் சொகுசு வீடு மற்றும் காணி ஒன்றை வாங்கியதாக கூறப்படும் முன்னாள் அமைச்சரின் சாரதி ஒருவரிடமும் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக  ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இதேவேளை, சந்தேகத்திற்கிடமான வகையில் பெருமளவிலான சொத்துக்களை கையகப்படுத்தியமை தொடர்பில் அரசியல்வாதிகள், அரச அதிகாரிகள், இராணுவ அதிகாரிகள் உள்ளிட்ட 7 பேரின் சொத்துக்களை முடக்க சட்ட நடவடிக்கையும் ஆரம்பிக்கப்படவுள்ளது.

தனிநபர்கள் தமது சாதாரண சம்பளத்துடன் சொத்துக்களை கையகப்படுத்த முடியாது என விசாரணைகளில் கண்டறியப்பட்டதையடுத்து சட்ட நடவடிக்கையை ஆரம்பிக்க இலஞ்ச ஊழல் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.

இதுவரை நடத்தப்பட்ட விசாரணையில், குடும்பம் மற்றும் உறவினர்கள் மூலம் சொத்துகளைப் பெற்றதாகக் கூறப்படும் கூற்றுகள் தவறானவை என்று கண்டறியப்பட்டுள்ளது, அதே நேரத்தில் சில அரசியல்வாதிகள் அறிக்கைகளை வழங்குவதன் மூலம் விசாரணைகளுக்கு உதவத் தயங்குகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here