Sunday, July 5, 2026
No menu items!

உள்நாட்டுச்செய்திகள்

ரணில் வீட்டில் விசாரணை; கண்டனம் தெரிவித்துள்ள ஐக்கிய தேசிய கட்சி

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் மனைவி பேராசிரியர் மைத்ரீ விக்ரமசிங்கவிடம் வாக்குமூலம் பதிவு செய்வதற்காக, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) அதிகாரிகள் அவரது இல்லத்திற்கு திடீரென சென்றமை தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சி (UNP) கண்டனம் வெளியிட்டுள்ளது. விக்ரமசிங்க தற்போது இதய அறுவை சிகிச்சைக்குப் பிறகு குணமடைந்து வருவதாகக் குறிப்பிட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர்...

இராணுவ வீரர்களை ஐ.நா அமைதிப்படைக்கு அனுப்ப தயாராகும் இலங்கை!

நாட்டின் படையினரை ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிப்படை வீரர்களாக அனுப்புவதில் தாம் ஆர்வத்துடன் இருப்பதாக இலங்கை, ஐ.நா.விடம் கூறியுள்ளது. அனைத்து வீரர்களுக்கும் ஐ.நா. சட்டங்கள் மற்றும் விதிகள் குறித்துப் பயிற்சி அளிக்கப்படும், மேலும் எந்தவொரு தவறான செயலையும் விசாரணை செய்ய கடுமையான அமைப்புகள் செயல்படும் என்றும் இலங்கை குறிப்பிட்டுள்ளது. இலங்கையின் பாதுகாப்புச் செயலாளர், ஓய்வுபெற்ற விமான பிரிவின்...

சாகரிகா ரயில் தடம் புரண்டது; கடலோர ரயில் சேவைகள் பாதிப்பு

பெலியத்தவிலிருந்து மருதானைக்குச் சென்று கொண்டிருந்த சாகரிகா ரயில், வட்டுவ ரயில் நிலையம் அருகே தடம் புரண்டதால், இன்று காலை (24) கடலோர ரயில் சேவைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. இதன் காரணமாக கொழும்பிலிருந்து பாணந்துறை வரையிலும், மாத்தறையிலிருந்து களுத்துறை வரையிலும் ரயில் சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. குறித்த ரயில் தடம் புரண்டமை இரு தண்டவாளங்களையும்...

திறைசேரி கணினி அமைப்பிற்குள் புகுந்து 2.5 மில்லியன் டொலர் கொள்ளை!

2025 ஆம் ஆண்டு டிசம்பர் முதல் ஜனவரி 2026 வரை திறைசேரியின் மின்னஞ்சல் அமைப்பில் ஊடுருவி, அவுஸ்திரேலிய கடன் செலுத்துதலுக்காக ஒதுக்கப்பட்ட 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்களை ஹேக்கர்கள் கொள்ளை அடித்துள்ளமை தெரியவந்துள்ளது. அரசாங்கம், பல மாதங்களுக்குப் பிறகே இதைக் கண்டறிந்துள்ளதோடு, மார்ச் மாதம் காவல்துறையிடம் முறைப்பாடு பதிவு செய்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக சில அதிகாரிகள்...

இலங்கை கிரிக்கெட் சபை தலைவரை பதவி விலகுமாறு உத்தரவிட்ட ஜனாதிபதி?

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க இலங்கை கிரிக்கெட் சபையின் (SLC) சுழற்சி சர்வாதிகாரியான ஷம்மி சில்வாவை பதவியில் இருந்து வெளியேறுமாறு உத்தரவிட்டுள்ளார் என டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது. ஷம்மி சில்வாவிற்குப் பதிலாக, முன்னாள் ரோயல் கல்லூரி கிரிக்கெட் வீரரும் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினருமான எரான் விக்ரமரத்ன கிரிக்கட் சபையை நிர்வகிக்கும் இடைக்காலக் குழுவிற்கு தலைமை...

கையூட்டல் பெற்ற சுகாதார அதிகாரி கைது!

சுகாதார அமைச்சின் ஓய்வுபெற்ற பிரதம சட்ட அதிகாரி ஒருவரை இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பான விசாரணை ஆணைக்குழு (CIABOC) இன்று (22) கைது செய்துள்ளது. கட்டிட வாடகை ஒப்பந்தம் தொடர்பாக கையூட்டல் கோரியமை மற்றும் பெற்றமை தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டார். நபர் ஒருவர் வழங்கிய முறைப்பட்டுக்கமைய ஆணைக்குழு விசாரணையை மேற்கொண்டு கைது செய்துள்ளது. வாடகை ஒப்பந்தங்கள் எழுதுவதற்காக...

நாளை அபாயகரமான வெப்பம் நிலவும்; இலங்கை மக்களுக்கு எச்சரிக்கை

இலங்கையின் பெரும்பாலான பகுதிகளில் நாளை (22) அபாயகரமான வெப்பம் நிலவும் எனவும் நீண்ட நேரம் பொது வெளியில் இருப்பவர்கள் அவதானமாக இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. வடக்கு, வடமத்திய, வடமேற்கு, மேற்கு, சபரகமுவ, தெற்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் மற்றும் மொனராகலை மாவட்டத்தில் இவ்வாறு வெப்பமான வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதற்கமைவாக...

தொடர் குண்டுத் தாக்குதல் குறித்து வெளியான செய்தி ; காவல்துறை விளக்கம்

கொழும்பு மற்றும் ஏனைய மக்கள் கூடும் பகுதிகளில் நபர் ஒருவரால் தொடர் குண்டுத் தாக்குதல்களை நடத்த திட்டமிடப்படுவதாக சமூக ஊடகங்களிலும் சில இணையதளங்களிலும் பரவி வரும் விடயத்தை இலங்கை காவல்துறை நிராகரித்துள்ளது. குறித்த தகவல்கள் "முற்றிலும் பொய்யானவை" என்றும், அத்தகைய சம்பவம் எதுவும் பதிவாகவில்லை என்றும் காவல்துறை ஊடகப் பேச்சாளர் எஃப். யு. வூட்லர் உறுதிப்படுத்தியுள்ளார். இந்தச் சம்பவம்...

நாட்டில் விசேட தேவைக்குரியவர்களுக்கான தாழ்தள பேருந்து சேவைகள் அறிமுகம்!

விசேட தேவைக்குரியவர்களுக்கு பாதுகாப்பான, வசதியான மற்றும் நம்பகமான போக்குவரத்தை வழங்கும் நோக்கில், மாகும்புர பல்நோக்கு போக்குவரத்து மையத்தில் இன்று (21) தாழ்தள (Low-floor) பேருந்துச் சேவை தொடங்கப்பட்டுள்ளது. அரசாங்கதத்தின் “கிளீன் ஸ்ரீலங்கா” திட்டத்தின் கீழ், நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள இந்த திட்டம், போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்கவின் தலைமையில் தொடங்கி வைக்கப்பட்டது. இந்த முன்னோட்டத் திட்டத்தில், சக்கர நாற்காலிப் பயனாளர்கள்,...

நிலக்கரி இறக்குமதி விவகாரம்; கணக்காளர் நாயகத்தின் அறிக்கையை நிராகரிக்கும் அமைச்சர்

சர்ச்சைக்குரிய நிலக்கரி இறக்குமதி தொடர்பாக கணக்காளர் நாயகத்தின் அறிக்கையின் சில பகுதிகளுடன் தாம் உடன்படவில்லை என அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். “அறிக்கையில் உள்ள சில விடயங்களை ஏற்றுக்கொள்ள முடியாது.” ஆனால், முழு அறிக்கையும் தவறானது என கூறவில்லை என அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார். தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். நிலக்கரியைக் கொள்முதல் செய்வதில் எந்த...
- Advertisement -

Latest News

பஸ் கட்டண திருத்தத்தில் சிக்கல்;தனியார் பஸ் உரிமையாளர் சங்கம்

தேசிய போக்குவரத்து  ஆணைக்குழுவின் அறிவிப்பிற்கமைய, திருத்தப்பட்ட பஸ் கட்டண தொகை நாளை (6) முதல் நாடு முழுவதும் அமுலுக்கு வருகிறது. இந்த புதிய கட்டணங்கள் தனியார் மற்றும்...