Friday, July 3, 2026
No menu items!

உள்நாட்டுச்செய்திகள்

இளைஞர் விவசாய தொழில் முனைவோர் கிராம அங்குரார்ப்பண நிகழ்வு..!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களின் ஆலோசனையின் பிரகாரம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முன்மொழிவுக்கு அமைவாக நாடளாவிய ரீதியில் மாவட்டத்திற்கு ஒரு கிராமம் என்பதன் அடிப்படையில் கிளிநொச்சி மாவட்டத்தில் தெரிவாகியுள்ள கண்ணகிபுரம் இளைஞர் விவசாய தொழில் முனைவோர் கிராமம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட கண்ணகிபுரம் பகுதியில்...

கிளப் வசந்த கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய இளம் பெண்ணொருவர் கைது…!!

21 வயதுடைய யுவதியொருவர் கிளப் வசந்த கொலைச் சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த 8ஆம் திகதி அத்துருகிரிய நகரில் பச்சை குத்தும் நிலைய திறப்பு விழாவில் கலந்து கொண்ட கிளப் வசந்த உள்ளிட்ட இருவர் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தனர். இந்நிலையில் சம்பவத்துடன் தொடர்புடைய பலர் கைது செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

எமது கட்சியை நல்லதொரு கட்சியாக உருவாக்கி இளையோரிடம் கையளிக்கவுள்ளேன் என சி.வி விக்னேஸ்வரன் தெரிவிப்பு..!

எமது கட்சி இளையோரின் கட்சி. ஒரு ஆரோக்கியமான குழந்தையை பெறுவதற்கு ஒரு செவிலி தாய் எவ்வாறு பார்த்து கொள்வாரோ அதே போல் இந்த கட்சியை நல்லதொரு கட்சியாக உருவாக்கி இளையோரிடம் கையளிக்கவுள்ளேன் என தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் சனிக்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும்...

தேசிய பாதுகாப்பு கற்கை நிறுவகத்தின் முன்னாள் பணிப்பாளர் அசங்க அபேகுணசேகர கைது…!!

தேசிய பாதுகாப்பு கற்கை நிறுவகத்தின் முன்னாள் பணிப்பாளர் அசங்க அபேகுணசேகர கைது செய்யப்பட்டுள்ளார். கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உள்நாட்டு இறைவரி திணைக்களத்தினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு தொடர்பில் அவருக்கு எதிராக திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

யாத்திரிகர்களை ஏற்றிச் சென்ற வேன் விபத்து ; 7பேர் காயம்….!!

யாத்திரிகர்களை ஏற்றிச் சென்ற வேன் ஒன்று பிரிமத்தலாவ நகருக்கு அண்மித்த பகுதியில் விபத்துக்குள்ளானதில் 7 பேர் காயமடைந்து பேராதனை மற்றும் கண்டி வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கண்டி திசையிலிருந்து கொழும்பு திசை நோக்கி பயணித்த இந்த வேன் உயர் மின்னழுத்த தூணில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. யாத்திரை சென்று திரும்பிய எரவ்வல பகுதியை சேர்ந்தவர்களே விபத்திற்கு முகம் கொடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பான...

அச்சுவேலி பத்தமேனி ஶ்ரீ வட பத்திரகாளி அம்பாள் கோவில் தேர் திருவிழா

அச்சுவேலி பத்தமேனி ஶ்ரீ வட பத்திரகாளி அம்பாள் தேவஸ்தானத்தின் வருடாந்த மஹோற்சவத்தில் நேற்றைய தினம் இரதோற்சவம் இடம்பெற்றது. வசந்த மண்டப பூசையை தொடர்ந்து காலை 11 மணியளவில் அம்பாள் இரதத்தில் எழுந்தருளினார். இதன்போது பெருமளவு பக்தர்கள் பங்கேற்றதுடன் அங்கப்பிரதட்சணம் மற்றும் நேர்த்திக்கடன்களை நிறைவேற்றினர். ஆலய மஹோற்சவம் கடந்த 11ம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி இன்று  தீர்த்தோற்சவத்துடன் நிறைவுக்கு வந்தது....

திருகோணமலையில் எரிந்த நிலையில் ஆணொருவரின் சடலம் மீட்பு…!!

திருகோணமலை – தம்பலகாமம் பகுதியில் எரிந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தம்பலகாமம் - கூட்டாம்புளி பகுதியில் சடலம் காணப்படுவதாக அப்பகுதி விவசாயிகள் பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் குறித்த சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சடலத்துக்கு அருகே அடையாள அட்டை ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ள நிலையில் உயிரிழந்த நபர் தம்பலகாமத்தைச் சேர்ந்த அன்புவழிபுரத்தில் திருமணம் முடித்தவர் என்பதோடு சமீப...

கடற்றொழிலுக்காகச் சென்ற நான்கு மீனவர்கள் மாயம் ; தேடுதல் தீவிரம்…!!

பருத்தித்துறை துறைமுகத்தில் இருந்து கடற்றொழிலுக்காகச் சென்ற நான்கு மீனவர்களும் ஒரு வாரமாகியும் கரைதிரும்பாத நிலையில், நேற்றுத் தீவிரமான தேடுதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பருத்தித்துறை துறைமுகத்திலிருந்து கடந்த ஏழாம் திகதி புறப்பட்ட மீனவர்களையே காணவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வல்வெட்டித்துறை, கல்முனை, திருகோணமலை மற்றும் முள்ளியானைச் சேர்ந்த மேற்படி நான்கு மீனவர்களும், புறப்பட்ட தினத்திலிருந்து ஒரு வாரத்துக்குள் கரைதிரும்பியிருக்க வேண்டும். ஆனால்,...

நிமோனியாவால் பச்சிளம் குழந்தை உயிரிழப்பு…!!

நிமோனியாவால் பாதிக்கப்பட்டிருந்த பச்சிளம் குழந்தை நேற்றுக் காலை பரிதாபகரமாக உயிரிழந்துள்ளது. யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணையைச் சேர்ந்த, பிறந்து மூன்றரை மாதங்களேயான சிவதாசன் றக்ஸ்மி எனும் சிசுவே  இவ்வாறு உயிரிழந்துள்ளது. நேற்றுக்காலை 6 மணியளவில் பால் குடித்துக் கொண்டிருந்தபோது குழந்தை மயக்கமடைந்துள்ளதையடுத்து யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டபோது அந்தக் குழந்தை உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். நிமோனியாவே குழந்தையின் இறப்புக்குக் காரணம்...

எரிபொருள் ஏற்றிச் சென்ற பௌசர் முச்சக்கரவண்டியுடன் மோதி விபத்து ; நான்கு பேர் காயம்…!!

ஏ9 வீதியில் அநுராதபுரம் இகிரிகொல்லாவை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் நான்கு பேர் காயமடைந்துள்ளதாக மதவாச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர். எரிபொருள் ஏற்றிச் சென்ற பௌசர் ஒன்று முச்சக்கரவண்டியுடன் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தின் போது எரிபொருள் ஏற்றிச் சென்ற பௌசர் வீதியை விட்டு விலகி அருகிலிருந்த வயலிற்குள் கவிழ்ந்து வீழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் விபத்துக்குள்ளான பௌசரில்...
- Advertisement -

Latest News

நாட்டில் 46000 சிறுவர்கள் துஷ்பிரயோகம்;நடவடிக்கை எடுக்க கோரும் சஜித்!

நாட்டில் 46,000 குழந்தைகள் துஷ்பிரயோகம் மற்றும் பாதிப்புக்கு உள்ளாகியும் இன்னும் நீதிக்காக காத்திருக்கின்றனர் எனவும் அரசு சட்ட நடவடிக்கைகளை தாமதமின்றி விரைவுபடுத்த வேண்டும் எனவும் எதிர்க்கட்சி...