Tuesday, August 18, 2026
No menu items!

புதிய செய்திகள்

ஈரான் மீதான தாக்குதல் ரத்து; டொனால்ட் ட்ரம்ப் அறிவிப்பு 

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரான் மீது நடத்த திட்டமிடப்பட்டிருந்த தாக்குதல்களை ரத்து செய்துள்ளதாக தெரிவித்துள்ளார். தெஹ்ரானுடன் விரைவாக ஒப்பந்தம் எட்டும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார். ஈரான் மற்றும் பிற மத்திய கிழக்கு நாடுகள் பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பு அளிக்குமாறு கோரியதால், இஸ்ரேலுடன் ஒருங்கிணைந்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாக ட்ரம்ப் தனது Truth Social...

மஹர சிறை கலவரம்: 104 கைதிகள் 7 சிறைகளுக்கு மாற்றம்

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக, அங்கிருந்த 104 கைதிகள் 7 சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர். தும்பர, வெலிக்கட, பூஸ்ஸ, களுத்துறை, பதுளை, மட்டக்களப்பு மற்றும் பொலன்னறுவை ஆகிய சிறைச்சாலைகளுக்கு இந்த கைதிகள் மாற்றப்பட்டதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் (நடவடிக்கை) மற்றும் ஊடக பேச்சாளர் ஏ.சி. கஜநாயக்க தெரிவித்தார். ஒரு அறிவிப்பை வெளியிட்ட அவர், குறித்த கைதிகளின் பெயர்கள் அடங்கிய...

மஹர சிறைக்குள் பாரிய அழிவு – சேதம் தொடர்பில் மதிப்பீடு

கலவரம் ஏற்பட்டுள்ள மஹர சிறை வளாகத்தின் உள்ளே இருந்து எடுக்கப்பட்ட படங்கள் தற்போது ஊடகங்களில் வெளியாகியுள்ளன. அவை கலவரத்தில் ஏற்பட்ட பாரிய அழிவை வெளிப்படுத்தும் வகையில் காணப்படுகின்றன. சிறைச்சாலை சொத்துக்களுக்கு பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். தற்போது சேதம் தொடர்பில் முழுமையான மதிப்பீடு நடைபெற்று வருகிறது எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.  

கடல் கொந்தளிப்பு;இரவு 10.30 வரை எச்சரிக்கை அமுலில்

ஓகஸ்ட் 2 இரவு 10.30 மணி வரை செல்லுபடியாகும் வகையில் சில கடல் பகுதிகள் அவ்வப்போது கொந்தளிப்பாகவோ அல்லது மிகவும் கொந்தளிப்பாகவோ காணப்படலாம் என வளிமண்டலவியல் திணைக்களத்தினால் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, புத்தளத்திலிருந்து கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையிலான கடல் பிரதேசங்களில் மீன்பிடி மற்றும் கடற்படை நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள மீனவர்கள் இது தொடர்பில்...

மஹர சிறை கலவரம்- ராகம பகுதியில் பொலிஸ் ஊரடங்கு தொடர்கிறது

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மை தற்போது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அனைத்து கைதிகளும் தற்போது அவர்களின் செல்களுக்குள் அடைக்கப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். எனினும், ராகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட 3 கிராம அலுவலர் பிரிவுகளில் விதிக்கப்பட்ட பொலிஸ் ஊரடங்கு தொடர்ந்தும் அமுலில் உள்ளது.          

மஹர சிறைச்சாலை கலவரம்: ஒருவர் உயிரிழப்பு, பலர் காயம் 

மஹர சிறைச்சாலைக்குள் நேற்று (1)ஏற்பட்ட அமைதியின்மையில் ஒரு கைதி உயிரிழந்ததாகவும், பலர் காயமடைந்ததாகவும் வைத்தியசாலை மற்றும் சிறை வட்டாரங்கள் தெரிவித்தன. சிறைக்கைதிகளின் நலனை விசாரிப்பதற்காக உறவினர்கள் சிறைச்சாலைக்கு வந்தபோது இந்த சம்பவம் ஆரம்பமானதாக தெரிவிக்கப்படுகிறது. அதன்பின் ஒரு குழு கைதிகள் சிறைக்குள் இருந்து கல்லெறியத் தொடங்கினர். இதனால் பதற்றம் அதிகரித்தது என சிறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கலவரத்தின் போது,...

இரத்மலானையில் துப்பாக்கிச் சூடு- ஒருவர் உயிரிழப்பு

இரத்மலானை,கந்தாவல வீதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. கந்தாவல சந்தி பகுதியில் முச்சக்கரவண்டிக்கு அருகில் நின்று கொண்டிருந்த ஒருவர் மீது, ஹெல்மெட் அணிந்த அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரி துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதாக தெரியவந்துள்ளது. குறித்த துப்பாக்கிதாரி மற்றொருவருடன் மோட்டார் சைக்கிளில் வந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். காயமடைந்த நபர் சிகிச்சைக்காக களுபோவில வைத்தியசாலைக்கு அழைத்துச்...

மஹர சிறைச்சாலைக்குள் பதற்றமான நிலை – பொலிஸ் விசேட அணிகள் களத்தில்

மஹர சிறைச்சாலைக்குள் பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளதாக பொலிஸாரரால்  தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலைமையை மதிப்பீடு செய்து கட்டுப்படுத்துவதற்காக பல விசேட பொலிஸ் அணிகள் சிறைச்சாலைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அமைதியின்மைக்கான காரணம் என்ன, அல்லது எவருக்கும் காயங்கள் ஏற்பட்டதா என்பது குறித்த மேலதிக விபரங்கள் உடனடியாக வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.  

இன்று கடும் மழை மற்றும் பலத்த காற்று தொடர்பில் எச்சரிக்கை

தென்மேற்கு பருவமழை காரணமாக இன்று இலங்கையின் தென்மேற்கு பகுதிகளில் மழை,காற்றுடன் கூடிய வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல், சபரகமுவ, வடமேல் மாகாணங்கள் மற்றும் கண்டி, நுவரெலியா, காலி, மாத்தறை மாவட்டங்களில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. சில பகுதிகளில் 100 மி.மீ க்கும் அதிகமான மழைவீழ்ச்சி ஏற்பட வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. பல...

மிரிசா சந்தியில் துப்பாக்கிச் சூடு: மீனவர் காயம்

மிரிசா சந்திக்கு அருகில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 36 வயதான மீனவர் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர், F.U. வூட்லர் தெரிவித்தார். துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் தற்போது மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதேவேளை சந்தேகநபர்களை அடையாளம் காணும் மற்றும் துப்பாக்கிச் சூட்டிற்கான காரணத்தை கண்டறியும் விசாரணைகள் நடைபெற்று வருவதாக...
- Advertisement -

Latest News

ஒரு பில்லியன் டொலர் மோசடி: 4 தனியார் வங்கி முகாமையாளர்கள் கைது 

நாட்டுக்கு எந்த பொருட்களையும் இறக்குமதி செய்யாது, கொழும்பு கோட்டையைச் சேர்ந்த நாணய மாற்றுபவர் ஒருவர் ஒரு பில்லியனை மாற்றியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பான விசாரணைகளில், 4...