Tuesday, August 18, 2026
No menu items!

புதிய செய்திகள்

பரீட்சைகளுக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பில் விசேட கலந்துரையாடல்

நாடு முழுவதும் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக, வரவிருக்கும் தேசிய பரீட்சைகளுக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மீளாய்வு செய்வதற்காக நாளை ஓகஸ்ட் 05 அன்று விசேட கலந்துரையாடல் ஒன்று நடைபெறவுள்ளதாக தினமின அரச பத்திரிகை தெரிவித்துள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம்,அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் - DMC, பரீட்சைகள் திணைக்களம் ஆகியன கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளன. வளிமண்டலவியல் திணைக்கள பணிப்பாளர் நாயகம்...

மோட்டார் சைக்கிள்களுக்கான பிரத்தியேக வீதி களுவாஞ்சிகுடியில்

இரு சக்கர வாகன விபத்துக்களை குறைக்கும் நோக்கில் நாட்டின் முதல் தனிப்பட்ட மோட்டார் சைக்கிள் வீதியை களுவாஞ்சிகுடியில் அமைக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். “100 க்கு 100” தேசிய கூட்டுறவு மோட்டார் சைக்கிள் பாதுகாப்பு திட்டத்தின் ஆரம்ப விழாவில் உரையாற்றிய அவர், மோட்டார் சைக்கிள்...

பொல்பிட்டியவில் மண்மேடு சரிந்து விழுந்ததில் 4 பேர் உயிரிழப்பு

கினிஹத்தேன மற்றும் ஹட்டன் பகுதியை அண்மித்த பொல்பிட்டிய, மொரஹேனகம பகுதியில் வீடு ஒன்றின் மீது மண்மேடு சரிந்து விழுந்த சம்பவத்தில் காணாமல் போயிருந்த 2 பெண்கள் மற்றும் 1 ஆணின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இதனுடன் இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளது. சீரற்ற காலநிலை காரணமாக வீட்டின் மீது மண்மேடு...

சீரற்ற காலநிலையால் நுவரெலியாவில் 6 பேர் காணாமல் போயுள்ளனர்

கடும் மழை மற்றும் சீரற்ற காலநிலை காரணமாக நுவரெலியா மாவட்டத்தில் 2,331 பேர்  பாதிக்கப்பட்டுள்ளனர். நுவரெலியா மாவட்டத்தில் 581 குடும்பங்களைச் சேர்ந்த 2,331 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 1,734 பேர் 7 நலன்புரி முகாம்களில்  தங்க வைக்கப்பட்டுள்ளனர் என நுவரெலியா மாவட்ட செயலாளர் துஷாரி தென்னக்கோன் தெரிவித்துள்ளார். வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாக நம்பப்படும் இருவர் மண்சரிவு காரணமாக...

சீரற்ற காலநிலை;கடற்படையின் 171 நிவாரண குழுக்கள் தயார் நிலையில்

நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக ஏற்படக்கூடிய வெள்ளம் மற்றும் திடீர் மண்சரிவுகளை எதிர்கொள்வதற்காக இலங்கை கடற்படை 171 அனர்த்த நிவாரண குழுக்களை தயார் நிலையில் வைத்துள்ளது. இந்த குழுக்களில் 700 கடற்படை வீரர்கள் உள்ளனர். அதிக ஆபத்துள்ள பகுதிகளில் இருந்து மக்களை வெளியேற்றி, தேவையேற்படின் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்வதற்கு இந்த குழுக்கள் தயாராக இருப்பதாக...

லயன் குடியிருப்புகளுக்குள் புகுந்த வெள்ளம்; போகாவத்தையில் அனர்த்தம்

கொட்டகலை பிரதேச சபைக்கு உட்பட்ட போகாவத்தை, திம்புள்ளை மற்றும் மவுண்ட்வனன் ஆகிய தோட்டங்களில் உள்ள லயன் குடியிருப்புகளில் வெள்ளநீர் புகுந்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக குறித்த மூன்று தோட்டங்களிலும் சுமார் 35 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் தற்காலிகமாக தமது உறவினர்கள் வீடுகளிலும் தெரிந்தவர்களின் வீடுகளிலும் தஞ்சம் புகுந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

சீரற்ற வானிலை; சில மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!

நாட்டில் தொடரும் பலத்த மழை காரணமாக, தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) பல மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கையை விடுத்துள்ளது. இந்த எச்சரிக்கையானது இன்று (03) காலை 9.00 மணி முதல் நாளை (04) காலை 9.00 மணி வரை செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கண்டி மாவட்டத்தின் பஸ்பாகே கோரள (Pasbage Korale) மற்றும்...

கொட்டக்கலை பகுதியில் வெள்ளம்; மக்கள் பாதிப்பு

நிலவும் சீரற்ற வானிலை காரணமாக கொட்டக்கலை பிரதேச சபைக்கு உட்பட்ட கொட்டக்கலை,லொக்கில் மற்றும் ஹெரிங்டன் ஆகிய தோட்ட பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. குறித்த பகுதிகளில் குடியிருப்புக்கு செல்லும் பாதைகள் மற்றும் சில குடியிருப்புகளை சுற்றி வெள்ள நீர் தேங்கியுள்ளது. இதனால் அந்த பகுதி மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளதோடு சிலர் அப்பகுதிகளில் இருந்து வேறு பாதுகாப்பான...

சிறை கலவரம்;”அரசாங்கத்தை குழப்பும் சதித்திட்டமாகும்”

சிறைச்சாலைகளில் இடம்பெற்று வரும் அமைதிக்கேடுகளை வன்மையாகக் கண்டிப்பதாகவும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கு முழுமையான ஆதரவு வழங்குவதாகவும் புதிய ஜனநாயக மக்கள் முன்னணியின் முன்னாள், கொழும்பு மாநகர சபை உறுப்பினர் நடராசா ரவிகுமார் தெரிவித்துள்ளார். சிறைச்சாலைகளில் அடுத்தடுத்து கலவர சம்பவங்கள் பதிவான நிலையில் அவர் தனது கட்சியின் நிலைப்பாட்டை அறிக்கை ஒன்றின் ஊடாக வெளியிட்டுள்ளார். இது தொடர்பில் குறித்த...

கண்டி, நுவரெலியா, சபரகமுவவுக்கு பலத்த மழைக்கான எச்சரிக்கை 

சபரகமுவ மாகாணத்திலும், கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மிமீ க்கு மேல் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் இன்று காலை வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. மத்திய, சபரகமுவ, ஊவா, கிழக்கு மற்றும் தெற்கு மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். இந்த பகுதிகளில் வானம்...
- Advertisement -

Latest News

ஒரு பில்லியன் டொலர் மோசடி: 4 தனியார் வங்கி முகாமையாளர்கள் கைது 

நாட்டுக்கு எந்த பொருட்களையும் இறக்குமதி செய்யாது, கொழும்பு கோட்டையைச் சேர்ந்த நாணய மாற்றுபவர் ஒருவர் ஒரு பில்லியனை மாற்றியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பான விசாரணைகளில், 4...