Wednesday, July 1, 2026
No menu items!

புதிய செய்திகள்

சாரதிக்கு திடீர் உடல்நலக்குறைவு; விபத்தில் சிக்கிய பேருந்து

அம்பாறைக்குச் செல்லும் பயணிகள் பேருந்தை செலுத்தி சென்ற சாரதிக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், இன்று காலை குறித்த பேருந்து வெல்லம்பிட்டிய வீதியிலிருந்து விலகிச் சென்று விபத்துக்குள்ளானது. இந்த சம்பவத்தில் பேருந்து சாரதி உயிரிழந்தார் என காவல்துறை தெரிவித்துள்ளது. அம்பாறை SLTB பணிமனையில் பணியாற்றும் 44 வயதான சாரதி என அடையாளம் காணப்பட்ட அவர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட...

பெண் இயன் மருத்துவரின் சடலம்; பிரதான சந்தேக நபர்கள் யாழில் கைது!

தெல்தெனிய பகுதியில் கைவிடப்பட்டிருந்த காரொன்றிலிருந்து மீட்கப்பட்ட பெண்ணின் சடலம் தொடர்பில் பிரதான சந்தேக நபர் என நம்பப்படும் நபர் மற்றும் அவரது மனைவி குழந்தை ஆகியோர் யாழ்ப்பாணத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று கொழும்பு வெள்ளவத்தையிலிருந்து யாழ்ப்பாணம் சாவகச்சேரி நோக்கி பஸ் மூலம் பயணித்துக் கொண்டிருந்தபோது இன்று அதிகாலை இந்த கைது மேற்கொள்ளப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டிருந்த சந்தர்ப்பத்தில்...

கைதை தடுக்குமாறு கோரி கோட்டாபய முன்வைத்த மனு தொடர்பில் விசாரணை

ஈஸ்டர் ஞாயிறு குண்டு தாக்குதல் சம்பவங்கள் தொடர்பான விசாரணைகளில் தன்னை கைது செய்வதை தடுக்கும் உத்தரவை பிறப்பிக்குமாறு கோரி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இந்த நிலையில் குறித்த மனு இன்று புதன்கிழமை நீதிமன்றில் விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட உள்ளது. குறித்த மனுவில் உள்ள முக்கியமான கோரிக்கைகள் மற்றும் நீதிமன்றத்தின் நடவடிக்கைகள்...

ஞானசார தேரரின் கடூழிய சிறை தண்டனை உறுதியானது

பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தாக்கல் செய்த மேன்முறையீட்டை கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்ன இன்று நிராகரித்துள்ளார். 2016- ஆம் ஆண்டு கிருலப்பனையில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இஸ்லாம் மதத்தை அவமதிக்கும் வகையிலும், இன நல்லிணக்கத்துக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையிலும் கருத்து வெளியிட்ட குற்றச்சாட்டில்,...

2 கோடி மதிப்புள்ள கஜமுத்துக்கள் கடத்தல்: 3 பேர் கைது

அராவ கரந்தகஹமட பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப்படை மேற்கொண்ட சுற்றிவளைப்பில் 2 கோடி ரூபாவிற்கு விற்பனை செய்ய தயாராக இருந்த 4 கஜமுத்துக்களுடன் 3 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பிபிலை, மாத்தளை, பக்கமுன பகுதிகளை சேர்ந்த 49, 31, 29 வயதுடைய நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டனர். இரகசிய தகவலின் அடிப்படையில், நேற்று 22ம் திகதி ஹாலி...

கொட்டாவ, மகரகம பகுதிகளில் 24 மணி நேர நீர் வெட்டு!

லபுகம மற்றும் களத்துவாவவிலிருந்து மகரகமைக்கு நீர் கொண்டு செல்லும் பிரதானக் குழாயில் மேற்கொள்ளப்படும் பராமரிப்புப் பணிகள் காரணமாக, நாளை (24) மாலை முதல் பல பகுதிகளுக்கு 24 மணி நேரத்திற்கு நீர் விநியோகம் நிறுத்தப்படுவதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் சபை அறிவித்துள்ளது. குறித்த நீர் விநியோக நிறுத்தம் நாளை (24) மாலை 6.00...

அவசர நாடாளுமன்ற விவாதம் நடத்தக் கோரும் எதிர்க்கட்சி!

அவசர நாடாளுமன்ற விவாதம் நடத்தக் கோரி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கையெழுத்திட்ட கடிதம் ஒன்று இன்று (23) நாடாளுமன்ற சபாநாயகரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. நீதித்துறையில் எழுந்துள்ள கட்டமைப்புச் சிக்கல்களுக்கு உடனடியாகத் தீர்வு காண நாடாளுமன்றம் தலையிட வேண்டும் என்றும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கிராமிய வங்கியின் பாதுகாப்பு பெட்டகம் உடைக்கப்பட்டு நகைகள் களவு!

களுத்துறை மொரகஹஹேன காவல் பிரிவின் கோரலைமா பகுதியில் உள்ள ஒரு கிராமப்புற வங்கியில் இன்று அதிகாலை, மூன்று சந்தேக நபர்கள் பாதுகாப்புப் பெட்டகத்தை உடைத்து, அதில் இருந்த தங்க நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். அதிகாலை சுமார் 1.00 மணியளவில், குறித்த கும்பல் வங்கி வளாகத்திற்குள் நுழைந்து, பணியில் இருந்த பாதுகாப்பு அதிகாரிகளைக் கயிற்றினால் கட்டியுள்ளதோடு, கட்டிடத்தின்...

பிறந்த நாள் கொண்டாடும் விஜய்க்கு பிரபலங்கள் வாழ்த்து

நடிகராக இருந்து அரசியல்வாதியாக உருவெடுத்து தற்பொழுது தமிழக முதலமைச்சராக பதவி வகித்து வரும் விஜய் இன்று தனது 52 வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவரது பிறந்த நாளை முன்னிட்டு தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் உள்ள ரசிகர்கள்  கொண்டாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். கோவில்களில் சிறப்பு வழிபாடு, அன்னதானம், நலத்திட்ட உதவிகள், ரத்ததான முகாம்கள் உள்ளிட்ட...

அஸ்வெசும கொடுப்பனவு;ஜூன் மாத 2ம் கட்ட பணம் தொடர்பில் அறிவிப்பு

அஸ்வெசும நலத்திட்ட கொடுப்பனவின் ஜூன் மாதத்துக்கான 2ம் கட்ட பணம் நாளை (23) முதல்  கிடைப்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய 2,70,025 குடும்பங்களுக்கான 328 கோடி ரூபாய் (3,287,163,750/=) கொடுப்பனவு அஸ்வெசும பயனாளிகளின் கணக்கில் வரவு வைக்கப்படும் என நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.
- Advertisement -

Latest News

வில்பத்து தேசிய பூங்காவில் கரை ஒதுங்கிய டொல்பின்

வில்பத்து தேசிய பூங்காவின் கொல்லன்கனட்ட பகுதியில் நேற்று மாலை (30) உயிரிழந்த நிலையில் டொல்பின் ஒன்று கரை ஒதுங்கியதாக வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர். வில்பத்து தேசிய...