Sunday, August 16, 2026
No menu items!

புதிய செய்திகள்

காசல்ரி மற்றும் மவுசாகலை நீர்த்தேக்கங்கள் நிரம்பின – மக்களுக்கு எச்சரிக்கை

நுவரெலியா மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக காசல்ரி மற்றும் மவுசாகலை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கடும் மழையின் காரணமாக, இன்று  ஒகஸ்ட் 10 காலை நிலவரப்படி காசல்ரி மற்றும் மவுசாகலை நீர்த்தேக்கங்கள் இரண்டும் வான் கசிவு மட்டத்தை அடைந்துள்ளதாக குறித்த நீர்த்தேக்கங்களின் பொறுப்பு பொறியியலாளர்கள் தெரிவித்தனர். காசல்ரி நீர்த்தேக்கம் வான் கசிவு மட்டத்தை விட...

ஐ.ஜி.பி படுகொலை தொடர்பான கருத்து: சாகர காரியவசம் அதிரடி கைது

இலங்கை பொலிஸ் மா அதிபரை படுகொலை செய்வதற்காக சதி திட்டம் இடம்பெற்றதாக வெளியிட்ட கருத்து தொடர்பில், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) பொதுச் செயலாளர் சாகர காரியவசம் மத்திய குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று காலை 10.30 மணிக்கு குறித்த கருத்து தொடர்பில் வாக்குமூலம் அளிப்பதற்காக புலனாய்வு பணியகம் முன் ஆஜராகுமாறு...

ஹெட்டிபொலவில் 3 மோட்டார் சைக்கிள் விற்பனை நிலையங்களுக்கு அபராதம்

ஹெட்டிபொல பகுதியில் விலைகளை காட்சிப்படுத்தாமை மற்றும் அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தரின் விலைக்கு மேல் மோட்டார் சைக்கிள்களை விற்ற குற்றச்சாட்டில் 3 மோட்டார் சைக்கிள் வியாபாரிகளுக்கு நுகர்வோர் விவகார அதிகார சபை அபராதம் விதித்துள்ளது. ஹெட்டிபொல பகுதியில் கடந்த ஜூலை 27 அன்று நுகர்வோர் விவகார அதிகார சபையின் விசாரணை அதிகாரிகள் நடத்திய விசேட சோதனையின் பின்னர் இந்த...

பிலிப்பைன்ஸில் பருவமழை மற்றும் புயல் பாதிப்பு: 3.8 லட்சம் பேர் பாதிப்பு

பருவமழை மற்றும் வெப்பமண்டல புயல்களின் தாக்கம் காரணமாக பிலிப்பைன்ஸில் 3 லட்சத்து 80 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். வெளிநாட்டு ஊடகங்களின் செய்தி அறிக்கைகளுக்கு அமைய, அந்நாட்டின் 8 பிராந்தியங்களில் 1 லட்சத்து 10 ஆயிரம் குடும்பங்களைச் சேர்ந்த 3 லட்சத்து 82 ஆயிரம் பேர் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். சீரற்ற வானிலையால் ஏற்பட்ட பாதிப்புகளில் பலியானோர் எண்ணிக்கை 6 ஆக...

ட்ரம்பின் 15 அம்ச அமைதி திட்டத்தை நிராகரித்தது இஸ்ரேல்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முன்வைத்த 15 அம்ச காசா அமைதி திட்டத்தை இஸ்ரேல் நிராகரித்துள்ளது. ஹமாஸ் முழுமையாக ஆயுதங்களை களையும் வரை இஸ்ரேலிய படைகள் காசாவில் இருந்து வாபஸ் பெறப்படாது என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இன்று (ஞாயிறு)  தெரிவித்துள்ளார். ஓகஸ்ட் 9 அன்று அமைச்சரவை கூட்டத்தில் பேசிய நெதன்யாகு, இதனை "போலியான" ஆயுத...

நாட்டின் நிதி கையிருப்பு 6.59 பில்லியன் டொலராக அதிகரிப்பு

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள சமீபத்திய தரவுகளின்படி, 2026 ஜூலை மாதத்தில் இலங்கையின் மொத்த உத்தியோகபூர்வ நிதி கையிருப்பு 6.591 பில்லியன் அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது. ஜூன் மாதத்தில் இந்த கையிருப்பு 6.458 பில்லியன் அமெரிக்க டொலராக காணப்பட்ட நிலையில் அதனுடன் ஒப்பிடுகையில் ஜூலை மாதத்தில் 133 மில்லியன் அமெரிக்க டொலர் அதிகரிப்பு பதிவாகியுள்ளது. இது முந்தைய...

கடல் பகுதிகளில் பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பு குறித்து எச்சரிக்கை

கடல் பகுதிகளில் பலத்த காற்றும் கடல் கொந்தளிப்பும் ஏற்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி, மாத்தறையில் இருந்து ஹம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரையிலான கடலோரப் பகுதிகளில் காற்றின் வேகம் அவ்வப்போது மணிக்கு 60 கி.மீ.க்கும் அதிகமாக வீசக்கூடும். இதனால் குறித்த கடற்பகுதிகள் அவ்வப்போது மிகவும் கொந்தளிப்பாக காணப்படும். எனவே, அடுத்த அறிவிப்பு வரும் வரை...

121 ஆண்டுகளுக்குப் பிறகு ஸ்பெயினில் முழு சூரிய கிரகணம்

ஸ்பெயினில் 121 ஆண்டுகளுக்குப் பிறகு முழுமையான சூரிய கிரகணம் தெரியவுள்ளதாக அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா அறிவித்துள்ளது. 1905-ம் ஆண்டுக்குப் பிறகு ஸ்பெயினில் ஏற்படவுள்ள இந்த முழு சூரிய கிரகணம், எதிர்வரும் ஓகஸ்ட் 12-ம் திகதி வானில் தோன்றும் என சர்வதேச ஊடகங்கள் நாசா வெளியிட்ட அறிக்கையை மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டுள்ளன. இந்த கிரகணம்...

மெகசின் சிறை கைதிகளுக்கு போதைப்பொருள் கொடுக்க முயன்றோர் கைது!

மெகசின் சிறைச்சாலையில் உள்ள கைதிகளுக்கு போதைப்பொருள் வழங்க சென்ற 2 சந்தேகநபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். இன்று (08) பகல் பேஸ்லைன் வீதி மெகசின் சிறைச்சாலையின் பக்க சுவர் அருகில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது இந்த 2 சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் குறித்த இடத்தில் இருந்து சிறைச்சாலைக்குள் 02 பொதிகளை வீச முயன்ற போது, இருவரும்...

இலங்கை-குவைத் விமான சேவைகள் மீண்டும் ஆரம்பம்

கொழும்பு மற்றும் குவைத் இடையேயான விமான சேவைகள்  இன்று (08) பிற்பகல் முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது. மத்திய கிழக்கில் நிலவிய நெருக்கடி நிலை காரணமாக குறித்த விமான சேவைகள் இடைநிறுத்தப்பட்டிருந்தன. எவ்வாறாயினும், தற்போது போர் நிலைமை ஓரளவு தணிந்துள்ளதன் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.    
- Advertisement -

Latest News

இந்தோனேசிய நிலநடுக்கம்: துயரத்தை பகிர்ந்து கொண்ட இலங்கை

இந்தோனேசியாவின் புளோரஸ் தீவு கடற்கரையில் ஏற்பட்ட 7.7 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் மற்றும் அதைத் தொடர்ந்த அதிர்வுகளை அடுத்து, இலங்கை தனது ஒத்துழைப்பை வெளியிட்டுள்ளதோடு...