Sunday, August 16, 2026
No menu items!

புதிய செய்திகள்

சிறைச்சாலைகளில் கலவரம்: சேதங்களினால் 255 மில்லியனுக்கும் மேல் இழப்பு

நீர்கொழும்பு, மஹர, மெகசின், பல்லன்சேன மற்றும் குருவிட்ட ஆகிய 5 சிறைச்சாலைகளில் கடந்த நாட்களில் இடம்பெற்ற அமைதியின்மையால் , ஏற்பட்ட சொத்து சேதம் ரூ. 255 மில்லியனுக்கும் அதிகம் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த விவரம் நேற்று (10) ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலைமையில் நடைபெற்ற 'ரட்டம எக்கட்ட' தேசிய நடவடிக்கை பேரவை கூட்டத்தில் வெளியிடப்பட்டது. சிறைச்சாலை...

இடைக்கிடையே மழை பெய்யும் சாத்தியம்; வெள்ள அபாயம் இல்லை

சபரகமுவ மாகாணத்திலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல்  திணைக்களம் தெரிவிக்கிறது. மேல் மாகாணம் மற்றும் வடமேல் மாகாணங்களில் சில தடவைகள் மழை பெய்யக்கூடும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும், முல்லைத்தீவு மாவட்டத்திலும் சில இடங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பிறகு மழை அல்லது...

கொலம்பியாவை உலுக்கிய நிலநடுக்கம்; இதுவரை 132 பேர் உயிரிழப்பு 

மேற்கு கொலம்பியாவில் ஏற்பட்ட 7.4 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் இதுவரை குறைந்தது 132 பேர் உயிரிழந்துள்ளனர். 570க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என கொலம்பிய தலைநகரங்களின் சங்கம் தெரிவித்துள்ளது. சம்பவம் தொடர்பான நேரலை தகவல்கள், வரைபடங்கள் மற்றும் விவரங்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்க அவசர மீட்பு குழுவினர் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர். இந்த...

ஐ.ஜி.பி தொடர்பான கருத்து: சாகர காரியவசம் பிணையில் விடுதலை

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசத்தை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியதை அடுத்து, கடுவலை நீதவான் அருண புத்ததாச  அவரை பிணையில் விடுதலை செய்ய உத்தரவிட்டுள்ளார். இந்த சட்ட நடவடிக்கையின் போது இரு தரப்பினரின் வாதங்களும் இன்று பிற்பகல் 4.30க்கு முடிவடைந்ததை தொடர்ந்து, பிணை உத்தரவை வெளியிடுவதை நீதவான் ஒத்திவைத்தார். அதன்படி, ஏறக்குறைய 3...

“மரண தண்டனையை ஏற்றுக்கொள்ள முடியாது” – கர்தினால் ஆண்டகை தெரிவிப்பு

கத்தோலிக்க திருச்சபையின் மறைக்கோட்பாடு எண் 2267 இன் படி, மரண தண்டனையை ஏற்றுக்கொள்ள முடியாது என கொழும்பு பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான கடமையை தவறிய குற்றச்சாட்டில் முன்னாள் பொலிஸ் மா அதிபர் மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஆகியோருக்கு வழங்கப்பட்ட மரண தண்டனை தொடர்பில் தனது...

போதைப்பொருள் குற்றவாளிகளில் 1,506 பேருக்கு மாத்திரமே புனர்வாழ்வு

நீதிமன்றத்தால் போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்காக தண்டிக்கப்பட்ட 4,962 கைதிகளில், தற்போது 1,506 பேருக்கு மாத்திரமே புனர்வாழ்வு திட்டங்கள் வழங்கப்படுவதாக சிறைச்சாலைகள் திணைக்களம், பாராளுமன்ற குழு ஒன்றுக்கு தெரிவித்துள்ளது. சிவில் பாதுகாப்பு துறை கண்காணிப்பு குழுவின் கூட்டத்தில் இந்த புள்ளிவிபரங்கள் வெளியிடப்பட்டன. குழுவின் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் நஜித் இந்திக்க செயற்பட்டார். நீதிமன்ற உத்தரவின் பேரில் பரிந்துரைக்கப்படுபவர்களுக்கும் தாமாக...

கொழும்பு துறைமுக நகர மக்களின் வாக்குரிமை பிரச்சினை: மரிக்கார் எம்.பி கேள்வி

உள்ளூராட்சி சபை தேர்தல்களில் கொழும்பு துறைமுக நகரில் வசிப்பவர்கள் வாக்களிக்க முடியாத நிலையில் இருப்பதாகவும் அந்த வகையில் அவர்களின் அடிப்படை உரிமைகள் மீறப்படுவதாகவும், உட்கட்டமைப்பு மற்றும் மூலோபாய அபிவிருத்தி துறை கண்காணிப்பு குழுவின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான எஸ்.எம். மரிக்கார் எச்சரித்துள்ளார். அதிகாரிகளுடனான சமீபத்திய சந்திப்பின் போது பேசிய மரிக்கார், துறைமுக நகர வாழ் மக்கள்...

காசல்ரி மற்றும் மவுசாகலை நீர்த்தேக்கங்கள் நிரம்பின – மக்களுக்கு எச்சரிக்கை

நுவரெலியா மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக காசல்ரி மற்றும் மவுசாகலை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கடும் மழையின் காரணமாக, இன்று  ஒகஸ்ட் 10 காலை நிலவரப்படி காசல்ரி மற்றும் மவுசாகலை நீர்த்தேக்கங்கள் இரண்டும் வான் கசிவு மட்டத்தை அடைந்துள்ளதாக குறித்த நீர்த்தேக்கங்களின் பொறுப்பு பொறியியலாளர்கள் தெரிவித்தனர். காசல்ரி நீர்த்தேக்கம் வான் கசிவு மட்டத்தை விட...

ஐ.ஜி.பி படுகொலை தொடர்பான கருத்து: சாகர காரியவசம் அதிரடி கைது

இலங்கை பொலிஸ் மா அதிபரை படுகொலை செய்வதற்காக சதி திட்டம் இடம்பெற்றதாக வெளியிட்ட கருத்து தொடர்பில், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) பொதுச் செயலாளர் சாகர காரியவசம் மத்திய குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று காலை 10.30 மணிக்கு குறித்த கருத்து தொடர்பில் வாக்குமூலம் அளிப்பதற்காக புலனாய்வு பணியகம் முன் ஆஜராகுமாறு...

ஹெட்டிபொலவில் 3 மோட்டார் சைக்கிள் விற்பனை நிலையங்களுக்கு அபராதம்

ஹெட்டிபொல பகுதியில் விலைகளை காட்சிப்படுத்தாமை மற்றும் அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தரின் விலைக்கு மேல் மோட்டார் சைக்கிள்களை விற்ற குற்றச்சாட்டில் 3 மோட்டார் சைக்கிள் வியாபாரிகளுக்கு நுகர்வோர் விவகார அதிகார சபை அபராதம் விதித்துள்ளது. ஹெட்டிபொல பகுதியில் கடந்த ஜூலை 27 அன்று நுகர்வோர் விவகார அதிகார சபையின் விசாரணை அதிகாரிகள் நடத்திய விசேட சோதனையின் பின்னர் இந்த...
- Advertisement -

Latest News

காலி முகத்திடல் அருகே அடையாளம் தெரியாத ஆணின் சடலம் மீட்பு

கொழும்பு காலி முகத்திடல் அருகே அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம்  கரையொதுங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். நேற்று (15) காலை கோட்டை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில்,...