Wednesday, July 1, 2026
No menu items!

புதிய செய்திகள்

அஸ்வெசும கொடுப்பனவு;ஜூன் மாத 2ம் கட்ட பணம் தொடர்பில் அறிவிப்பு

அஸ்வெசும நலத்திட்ட கொடுப்பனவின் ஜூன் மாதத்துக்கான 2ம் கட்ட பணம் நாளை (23) முதல்  கிடைப்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய 2,70,025 குடும்பங்களுக்கான 328 கோடி ரூபாய் (3,287,163,750/=) கொடுப்பனவு அஸ்வெசும பயனாளிகளின் கணக்கில் வரவு வைக்கப்படும் என நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.

மே மாதத்தில் பணவீக்கம் 5.4 விகிதமாக அதிகரிப்பு!

தேசிய நுகர்வோர் விலைக் சுட்டேன் NCPI) மூலம் கணக்கிடப்படும் ஒட்டுமொத்த பணவீக்க விகிதம், மே 2026-ல் 5.4% ஆக அதிகரித்துள்ளது என மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த வருடம் ஏப்ரல் மாதத்தில் பதிவான 4.7 வீதத்துடன் ஒப்பிடும்போது இவ்வாறு பணவீக்க விகிதம் அதிகரித்துள்ளது என்று அத்துறை குறிப்பிடுகிறது. உணவுப் பணவீக்கமும் ஏப்ரல்...

கிரிக்கட் சபை தொடர்பான செய்தி அடிப்படையற்றது; ஜனாதிபதி ஊடக பிரிவு

'இலங்கை கிரிக்கெட் (SLC) சபை ஜூலை 31 ஆம் திகதிக்கு முன் தேர்தல்களை நடத்த வேண்டும் அல்லது கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்படும்' என சர்வதேச கிரிக்கெட் சபை (ICC) இலங்கையை எச்சரித்ததாகக் கூறும் ஒரு பத்திரிகைச் செய்தியை அரசாங்கம் நிராகரித்துள்ளது. இன்று வெளியிடப்பட்ட ஓர் அறிக்கையில், ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு (PMD), அந்தச் செய்திக்கு எந்தவொரு...

அமெரிக்க-ஈரான் பேச்சுவார்த்தைகள்; எண்ணெய் விலைகளில் சரிவு

சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற அமெரிக்க-ஈரான் பேச்சுவார்த்தைகள் ஊடாக எண்ணெய் மற்றும் பெட்ரோலிய வேதிப்பொருட்கள் ஏற்றுமதிக்கு விலக்குகள் பெற்றதாக தெஹ்ரான் அறிவித்ததைத் தொடர்ந்து, மககெண்ணை விலைகள் சரிந்தன. இதற்கமைய பிரென்ட் மசகு எண்ணெய் 2.09% சரிந்து ஒரு பீப்பாய் $78.89 ஆகக் குறைந்தது. WTI ரக எண்ணெய் 60 சென்ட்கள் குறைந்து ஒரு பீப்பாய் 76 டொலர்களாக குறைந்துள்ளது....

ஆறு வாகனங்களை மோதிய பஸ்: பெண் ஒருவர் உயிரிழப்பு, 11 பேர் காயம்

கொழும்பு பிரதான வீதியில் மொலகொடை பகுதியில் இன்று பிற்பகல் பல வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் ஒரு பெண் உயிரிழந்துள்ளார். 11 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கண்டியிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த பஸ் ஒன்று எதிர் திசையில் வந்த இரண்டு முச்சக்கர வண்டிகள், இரண்டு வேன்கள், ஒரு லொறி மற்றும் ஒரு மோட்டார் சைக்கிள்...

தயா குழுமக் கடன் வழக்கில் நீதிமன்றத் தீர்ப்பை வரவேற்றுள்ள சாணக்கியன்!

மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான சாணக்கியன் ராசமாணிக்கம், தயா குழுமக் கடன் வழக்கின் நீதிமன்றத் தீர்ப்பு குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். தயா குழுமம் லிமிடெட் மற்றும் தயா அப்பேரல் எக்ஸ்போர்ட் ஆகிய நிறுவனங்களின் அடமானம் வைக்கப்பட்ட சொத்துக்களை மக்கள் வங்கி விற்பனை செய்யலாம் (ஏலத்தில் விடலாம்) என மேல்முறையீட்டு நீதிமன்றம் தெரிவித்துள்ளது. குறித்த நிறுவனங்கள் 1.42 மில்லியன்...

அவுஸ்திரேலியாவை உலுக்கியுள்ள மிகப்பெரிய கொக்கைன் பதுங்கு குழி!

அவுஸ்திரேலிய வரலாற்றிலேயே மிகப்பெரிய கொக்கைன் பறிமுதல் நடவடிக்கையில், காவல்துறை 2.7 டொன் போதைப்பொருளைப் பறிமுதல் செய்துள்ளதோடு எட்டு பேரைக் கைது செய்துள்ளது. மேற்கு சிட்னியில் கடந்த வெள்ளிக்கிழமை நடத்தப்பட்ட சோதனை தொடர்பான விபரங்களை அவுஸ்திரேலிய காவல்துறை இன்று அறிவித்தது. குறித்த அறிவிப்பிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தச் சோதனையின் விளைவாக, ஒரு ரகசிய பதுங்குக்குழியில் உள்ள கொள்கலன்களில்...

சோள வரி, அரிசி இறக்குமதி தொடர்பில் அரசாங்கம் மீது விமர்சனம்!

நுகர்வோர் மற்றும் விவசாயிகள் இருவருக்கும் ஒரே நேரத்தில் சுமையை ஏற்படுத்தும் கொள்கைகளை அரசாங்கம் பின்பற்றுவதாக எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா குற்றம் சாட்டியுள்ளார். அரசாங்கத்தின் சில செயற்பாடுகள் இலங்கையின் ஏழை மக்களையே அதிகம் பாதிப்பதாக அவர் எச்சரித்துள்ளார். ‘X’ தளத்தில் வெளியிட்ட பதிவொன்றில், நாடாளுமன்ற உறுப்பினர் டி சில்வா சமீபத்திய இரண்டு முடிவுகளைச் சுட்டிக்காட்டினார், சோள...

 டெங்கு நோயாளர் எண்ணிக்கை 46,000ஐ கடந்தது: தினமும் 650 பேர் பாதிப்பு

நாட்டில் இந்த வருடம் ஜனவரி முதல் இன்று வரை பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 46,037ஆக காணப்படுவதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் பிரதி பணிப்பாளர் வைத்தியர் கபில கண்ணங்கர தெரிவித்துள்ளார். தற்போது தினமும் 600 முதல் 650 பேர் வரை டெங்கு நோயாளிகளாக அடையாளம் காணப்படுகின்றனர் எனவும் ஜூன் 1ஆம் திகதி முதல் இன்று...

வருடாந்த பஸ் கட்டண திருத்தம் ஜூலை 3 முதல்: தனியார் பஸ் உரிமையாளர் சங்கம் 

வருடாந்த பஸ் கட்டண திருத்தம் எதிர்வரும் ஜூலை 3ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார். ஒவ்வொரு வருடமும் ஜூலை 1 ஆம் திகதி பஸ் கட்டணம் திருத்தம் மேற்கொள்ளப்படும் நிலையில் மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்தை கருத்தில் கொண்டு, இம்முறை ஜூலை...
- Advertisement -

Latest News

பாகிஸ்தானில் பயிற்சி வகுப்பு கூரை இடிந்து விபத்து: 14 மாணவர்கள் உயிரிழப்பு

பாகிஸ்தானின் கிழக்கு பகுதியில் உள்ள லாகூர் நகரில் ஒரு தனியார் பயிற்சி வகுப்பின் கூரை இடிந்து விழுந்ததில் குறைந்தது 14 பாடசாலை மாணவர்கள் உயிரிழந்ததாக அதிகாரிகள்...