Sunday, August 16, 2026
No menu items!

புதிய செய்திகள்

பேருந்து விபத்தில் 8 பேர் உயிரிழப்பு;இந்தியா, இமாச்சல பகுதியில் சம்பவம்

வட இந்தியாவின் இமாச்சல பிரதேச மாநிலத்தில் பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் மேலும் 10 பேர் காயமடைந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இமாச்சல பிரதேச தலைநகரான ஷிம்லாவில் இருந்து சுமார் 393 கி.மீ வடக்கே அமைந்துள்ள சம்பா மாவட்டத்தின் மலைப்பகுதியில் இந்த விபத்து நடந்ததாக தெரிவிக்கப்படுகிறது. விபத்து நடந்த நேரத்தில் பேருந்தில்...

எம்.பிக்களின் ஊதியம் அதிகரிக்கப்பட்டதா? அமைச்சர் விளக்கம்

பாராளுமன்ற உறுப்பினர்களின் ஊதியங்கள்  அதிகரிக்கப்படவில்லை என்றும், அவர்களின் மாத வருமானத்தில் ஏதேனும் அதிகரிப்பு ஏற்பட்டிருந்தால் அது தற்போதைய எரிபொருள் விலைக்கு ஏற்ப எரிபொருள் கொடுப்பனவு சரிசெய்யப்பட்டதன் விளைவாகும் என்றும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் நிஷாந்த ஜயவீர  தெளிவுப்படுத்தினார். பாராளுமன்றத்தில் உரையாற்றிய அவர், நாட்டின் பொருளாதார நிலைமை வளர்ச்சி அடைந்ததை அடுத்து, அதற்கு தகுதியான அரச...

நாட்டின் சில பகுதிகளுக்கு கனமழைக்கான எச்சரிக்கை

நாட்டின் சில பகுதிகளில் இன்று 75 மி.மீற்றருக்கும் அதிகமான கனமான மழை பெய்யும் எனவும் பல மாகாணங்களில் பலத்த காற்று வீசும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் கணித்துள்ளது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யும். இந்த பகுதிகளில் மேகமூட்டமான...

நாளைய தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான விசேட அறிவிப்பு

இந்த வருடத்திற்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை நாளை (09) நாடு முழுவதும் உள்ள 2,723 பரீட்சை நிலையங்களில் நடைபெறும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார். இவ்வருடம் மொத்தம் 294,089 பரீட்ச்சார்த்திகள் பரீட்சைக்கு தோற்றுகின்றனர். இவர்களில் சிங்கள மொழி மூலம் 220,366 பேரும், தமிழ் மொழி மூலம் 73,723 பேரும்...

அஸ்வெசும பணம் மோசடி; தலவாக்கலை பிரதேச செயலக அதிகாரி மீது முறைப்பாடு

தலவாக்கலை பிரதேச செயலகத்தின் அதிகாரி ஒருவர் அஸ்வெசும பயனாளிகளுக்குச் சேர வேண்டிய 916,000 ரூபாவை பயனாளிகளுக்கு வழங்காது, வேறு ஒருவரின் கணக்கிற்கு மாற்றியுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பில், தலவாக்கலை பதில் பிரதேச செயலாளர் சமீரா கம்லத்தால், இன்று(07) தலவாக்கலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது. அஸ்வெசும பயனாளிகள் தமக்குரிய கொடுப்பனவு கிடைக்கப்பெறவில்லை என பிரதேச...

நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயது தொடர்பில் வெளியானது அதிவிசேட வர்த்தமானி

உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயது மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை தொடர்பான மாற்றங்களை முன்மொழியும் அரசியலமைப்பின் 22 ஆவது திருத்த மசோதாவை இலங்கை அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக அரசிதழில் பிரசுரித்துள்ளது. வெள்ளிக்கிழமை (7) அதிவிசேட வர்த்தமானியில் வெளியிடப்பட்ட மசோதாவின்படி, உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயது 67 ஆக உயர்த்தப்படும். அதேவேளை...

நாட்டின் சில பகுதிகளில் அடுத்த 36 மணி நேரத்தில் கடும் மழை!

நாட்டின் பல பகுதிகளில் அடுத்த 36 மணி நேரத்தில் மழையும் பலத்த காற்றும் எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் கணித்துள்ளது. இன்று (7) பிற்பகல் 4:00 மணிக்கு வெளியிடப்பட்ட வானிலை முன்னறிவிப்பின்படி, மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யும். இந்த...

பல்லன்சேன சிறைச்சாலையில் அமைதியின்மை; பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது

கைதிகள் குழுவொன்று கூரையின் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டதை அடுத்து, நீர்கொழும்பு, தலுபொத, பல்லன்சேன திறந்த சிறைச்சாலை சுற்றுவட்டாரத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அதற்காக பொலிஸார், பொலிஸ் விசேட அதிரடிப் படையினர், கலவர தடுப்புப் பிரிவினர் மற்றும் விமானப்படையினர் அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கைதிகள் குழுவொன்று இன்று (07) காலை கூரையின் மீது போராட்டத்தை ஆரம்பித்ததை அடுத்து அங்கு அமைதியின்மை...

கோடிக்கணக்கான சொத்து கொள்ளை; ஹட்டன், பத்தனையை சேர்ந்தோர் கைது!

கோடிக்கணக்கான பெறுமதியான சொத்துக்கள்  கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த 2 பெண் சந்தேக நபர்கள், அதற்கு உடந்தையாக இருந்த ஒரு ஆண் சந்தேக நபர் மற்றும் மற்றொரு பெண் சந்தேக நபர் ஆகியோர் கல்கிசை பிரிவு குற்றப் புலனாய்வு பணியகத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஜூலை மாதம் 18 ஆம் திகதி ஒரு வீட்டை உடைத்து...

புதிய மெகசிகன் சிறைச்சாலையில் அமைதியின்மை;11 பேருக்கு காயம்

புதிய மெகசின் சிறைச்சாலையில் நேற்று (07) இரவு ஏற்பட்ட அமைதியின்மை நிலைமை காரணமாக 11 கைதிகள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஊடக பேச்சாளர் ஏ.சி. கஜநாயக்க தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், தற்போது அங்கு நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும், 9 கைதிகளை வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். தற்போது சிறைச்சாலையின்...
- Advertisement -

Latest News

இந்தோனேசிய நிலநடுக்கம்: துயரத்தை பகிர்ந்து கொண்ட இலங்கை

இந்தோனேசியாவின் புளோரஸ் தீவு கடற்கரையில் ஏற்பட்ட 7.7 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் மற்றும் அதைத் தொடர்ந்த அதிர்வுகளை அடுத்து, இலங்கை தனது ஒத்துழைப்பை வெளியிட்டுள்ளதோடு...