Saturday, May 16, 2026
No menu items!

புதிய செய்திகள்

LAUGFS எரிவாயு விலை மாற்றத்தை அடுத்து உணவு பொருள் விலை அதிகரிப்பு

லாஃஸ்  எரிவாயுவைப் பயன்படுத்தும் உணவகங்களில் உணவு மற்றும் பானங்களின் விலைகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக உணவக உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. அரிசி, பிரியாணி மற்றும் நாசி கோரெங் ஆகியவற்றின் விலை நேற்று இரவு (07) முதல் 25 ருபாய்அதிகரிக்கப்பட்டுள்ளது என சங்கத்தின் தலைவர் ஹர்ஷன ருக்ஷன் கூறியுள்ளார். எல்பிஜி (லாஃஸ்) எரிவாயு விலை அதிகரிப்பால் அதனை பயன்படுத்தும் சுமார்...

இலங்கை நாடாளுமன்றம் வந்தடைந்த வியட்நாம் ஜனாதிபதி

வியட்நாம் சோசலிசக் குடியரசின் ஜனாதிபதியும், வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளருமான டோ லாம், இன்று காலை இலங்கை நாடாளுமன்றத்தை வந்தடைந்தார். இலங்கையில் அவர் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள நிலையில் நாடாளுமன்ற வளாகத்தில் அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் CEO தற்கொலை?

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம அதிகாரி கபில சந்திரசேன,கொல்லுபிட்டியில் உள்ள தனது இல்லத்தில் சந்தேகத்திற்கிடமான வகையில் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். கொல்லுபிட்டி, பெட்ரிஸ் பிளேஸ், எண் 37-இல் சந்திரசேனவின் உடல் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ஏ.எஸ்.பி. எஃப்.யு. வூட்லர் தெரிவித்தார். அவர் குறித்த வீட்டிற்குள் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார் என...

நிதியமைச்சை கடுமையாக குற்றம் சாட்டும் பொது அமைப்புக்கள்

ஏப்ரல் மாதத்தில் அஸ்வெசும பயனாளிகளுக்கு இருமுறை பணம் வழங்கப்பட்டமை தொடர்பாக நலன்புரி நன்மைகள் சபை வெளியிட்டுள்ள அறிவிப்பு, பொது நிதிக் கட்டுப்பாடு சீர்குலைந்துவிட்டதற்கான தெளிவான அறிகுறி என சுதந்திர சட்டத்தரணிகள் சங்கம் கூறியுள்ளது. அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், நிதியமைச்சின் கீழ் உள்ள நலன்புரி நன்மைகள் சபை மூலம் மேலதிகமாக சுமார் 50 கோடி ரூபாய்...

மக்களின் 7 பில்லியன் ரூபாய் பணம் வீணடிக்கப்படுகிறது; கெமுனு விஜேரத்ன குற்றசாட்டு

அரசாங்கத்தின் புதிய மெட்ரோ பேருந்துத் திட்டத்திற்காக 7 பில்லியன் ரூபாய் பொதுமக்களின் பணம் வீணடிக்கப்படுவதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது. சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன, மெட்ரோ பேருந்துத் திட்டம் இலங்கை போக்குவரத்துச் சபையால் (SLTB) வேறு பெயரில் செயல்படுத்தப்படுவதாகக் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், இது நாட்டின் பயணிகள் போக்குவரத்து அமைப்பை...

முதலமைச்சராக நியமியுங்கள் பெரும்பான்மையை நிரூபிக்கிறேன்; விஜய்

தமிழக சட்டசபை தேர்தலில் விஜய்யின் தமிழக வெற்றி கழகம் 108 இடங்களை கைப்பற்றியது. ஆட்சி அமைக்க தமிழக வெற்றி கழகத்திற்கு காங்கிரஸ் ஆதரவு கொடுத்துள்ள நிலையில் தற்போது அதன் பலம் 112 ஆக உள்ளது. ஆட்சி அமைக்க 118 இடங்கள் தேவை என்ற நிலையில் ஏனைய கட்சிகள் விஜய்யின் கட்சிக்கு இன்னும் ஆதரவு அளிக்கவில்லை. முன்னதாக கட்சியின் தலைவர்...

மோசடியில் ஈடுபட்ட 74 வியட்நாம் பிரஜைகள் கைது!

கொல்பிட்டி பகுதியில் நடத்தப்பட்ட ஒரு சோதனையின் போது, ​​விசா விதிமுறைகளை மீறியமை மற்றும் நிதி மோசடியில் ஈடுபட்டமை தொடர்பில் சந்தேகிக்கப்படும் 74 வெளிநாட்டு பிரஜைகளை இலங்கை பொலிஸ் கைது செய்துள்ளது. இலங்கை பொலிஸ் மற்றும் கொல்பிட்டி பொலிஸ் நிலைய அதிகாரிகளால் கொல்பிட்டி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட உத்தரானந்த மாவத்தையில் உள்ள ஒரு குடியிருப்பு வளாகம் சோதனைக்கு...

விசா வழங்குவதாக தெரிவித்து 35.8 மில்லியன் ரூபா மோசடி

வெளிநாட்டுப் பயணங்களுக்கான விசாக்களை வழங்குவதாக வாக்குறுதியளித்து, தனிநபர்களிடமிருந்து 35.8 மில்லியன் ரூபாய் மோசடி செய்ததாகக் கூறப்படும் ஒரு தனியார் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர், கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவால் கைது செய்யப்பட்டுள்ளார். 21 தனித்தனி முறைப்பாடுகள் மீதான விசாரணையைத் தொடர்ந்து, பாணந்துறையைச் சேர்ந்த 41 வயதான சந்தேக நபர் புதன்கிழமை (06) காவலில் எடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். சந்தேக...

ட்ரம்பின் அறிவிப்பை அடுத்து குறைவடையும் எண்ணெய் விலை!

ஹோர்முஸ் நீரிணையிலிருந்து கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளித்து வெளியேற்றும் கடற்படை திட்டத்தை டிரம்ப் இடைநிறுத்தியதை தொடர்ந்து இரண்டாவது நாளாக மசகெண்ணை விலை குறைவடைந்துள்ளது. இந்தச் செய்தி, சமாதான ஒப்பந்தம் உருவாகக்கூடும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளதால் பிரென்ட் கச்சா எண்ணெய் விலை 107 டொலருக்கு குறைவாகவும், வெஸ்ட் டெக்சாஸ் இன்டர்மீடியட் (WTI) விலை 100 டொலருக்கு குறைவாகவும் சரிந்தது. தற்பொழுது...

626,000 டொலர்களை மோசடியாளர்களுக்கு செலுத்தியுள்ள தபால் திணைக்களம்

நாட்டின் தபால் திணைக்களம், அமெரிக்க தபால் பிரிவுக்குச் சேர வேண்டிய 626,000 அமெரிக்க டொலருக்கும் அதிகமான தொகையை இரண்டு முறை மூன்றாம் தரப்பினருக்கு அனுப்பியுள்ளமை தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவு (CID) இன்று (6)கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்தது. மூன்று போலி மின்னஞ்சல்கள் மூலம் பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் தபால் திணைக்களம் இந்த நிதியை...
- Advertisement -

Latest News

இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு 50 வீத வரிவிதிப்பு!

இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு ஏற்கனவே உள்ள 30% சுங்க வரியுடன் மேலதிகமாக 50% மேலதிக வரியை அரசாங்கம் விதித்துள்ளது. ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்ட ஒரு...