Saturday, May 16, 2026
No menu items!

புதிய செய்திகள்

ட்ரம்பின் அறிவிப்பை அடுத்து குறைவடையும் எண்ணெய் விலை!

ஹோர்முஸ் நீரிணையிலிருந்து கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளித்து வெளியேற்றும் கடற்படை திட்டத்தை டிரம்ப் இடைநிறுத்தியதை தொடர்ந்து இரண்டாவது நாளாக மசகெண்ணை விலை குறைவடைந்துள்ளது. இந்தச் செய்தி, சமாதான ஒப்பந்தம் உருவாகக்கூடும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளதால் பிரென்ட் கச்சா எண்ணெய் விலை 107 டொலருக்கு குறைவாகவும், வெஸ்ட் டெக்சாஸ் இன்டர்மீடியட் (WTI) விலை 100 டொலருக்கு குறைவாகவும் சரிந்தது. தற்பொழுது...

626,000 டொலர்களை மோசடியாளர்களுக்கு செலுத்தியுள்ள தபால் திணைக்களம்

நாட்டின் தபால் திணைக்களம், அமெரிக்க தபால் பிரிவுக்குச் சேர வேண்டிய 626,000 அமெரிக்க டொலருக்கும் அதிகமான தொகையை இரண்டு முறை மூன்றாம் தரப்பினருக்கு அனுப்பியுள்ளமை தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவு (CID) இன்று (6)கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்தது. மூன்று போலி மின்னஞ்சல்கள் மூலம் பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் தபால் திணைக்களம் இந்த நிதியை...

ஈரானுக்கு மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ள ட்ரம்ப்

அமெரிக்காவின் நிபந்தனைகளை ஈரான் ஏற்று கொண்டால் "எபிக் ஃபியூரி" (போர் நடவடிக்கை) முடிவுக்கு வரும் எனவும் ஈரானிய கப்பல்கள் உட்பட அனைத்து கப்பல்களுக்கும் ஹோர்முஸ் நீரிணை திறந்தே இருக்கும் எனவும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இதேவேளை ஈரான் மறுக்குமாக இருந்தால் குண்டுவீச்சு முன்பை விட பாரிய அளவிலும் தீவிரமாகவும் இருக்கும் என அவர் எச்சரித்துள்ளார். ஈரானின்...

வித்யா வழக்கு; மரண தண்டனையை உறுதி செய்த உச்ச நீதிமன்றம்

யாழ்ப்பாணம் புங்குடுதீவில் 2015ஆம் ஆண்டு மாணவி சிவலோகநாதன் வித்யா கூட்டு வன்புணர்வு செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட வழக்கில், சுவிஸ் குமார் உள்ளிட்ட நால்வருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை உச்ச நீதிமன்றம் இன்று (மே 6) உறுதி செய்துள்ளது. தலைமை நீதிபதி பிரீத்தி பத்மன் சுரசேன தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற குழு, தங்களை...

கணிசமாக அதிகரித்த தங்கத்தின் விலை

சர்வதேச சந்தைகளில் ஏற்பட்ட மாற்றத்தைத் தொடர்ந்து, இலங்கையில் தங்கத்தின் விலை இன்று (06) கணிசமான அளவு அதிகரித்துள்ளது. சர்வதேச சந்தைகளில் தங்கத்தின் விலை 4,648 அமெரிக்க டொலராக அதிகரித்தது. கொழும்பு கோட்டை தங்கச் சந்தையில் இன்று காலை 8.00 மணி வரையான நிலவரப்படி 7,000 ரூபாய் அதிகரித்துள்ளது. இதற்கமைய 22 காரட் தங்க பவுனின் விலை ரூ. 363,400...

ஜனவரி முதல் 628 வெளிநாட்டுப் பிரஜைகள் கைது!

சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்காக, 2026 ஜனவரி 1 முதல் நாடு முழுவதும் 628 வெளிநாட்டுப் பிரஜைகளை இலங்கை பொலிஸ் கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர், உதவி பொலிஸ் மா அதிபர் எஃப். யூ. வூட்லர் தெரிவித்தார். நேற்று (05) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே உதவி பொலிஸ் மா அதிபர் வூட்லர், இதனை தெரிவித்தார். குடிவரவு...

வைத்தியர் போல நடித்தவர் கைது; பல்வேறு குற்றச்சாட்டுக்கள் பதிவு

பொலன்னறுவையில் வைத்தியர் போல் நடித்து வந்த 59 வயது நபர் ஒருவர், தொடர் சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலன்னறுவை குற்றப் புலனாய்வுப் பிரிவு உறுதிப்படுத்தியுள்ளது. குருணாகலை, பன்னால பகுதியைச் சேர்ந்த சந்தேக நபர், செவ்வாய்க்கிழமை இரவு (05) பொலன்னறுவையில் உள்ள தீப உயன அருகே கைது செய்யப்பட்டார் என...

சிறுமியை வன்புணர்வு செய்த தலைமை பிக்கு; தொடரும் விசாரணைகள்

15 வயது சிறுமியை, தலைமை பிக்கு ஒருவர் உட்பட மூவர் பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் அனுராதபுரம் நீதவான் நீதிமன்றம் புதிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. வழக்கு விபரங்களை ஆய்வுக்காக அரசாங்க ஆய்வாளரிடம் சமர்ப்பித்து நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டுள்ள நீதிபதி சியபத் சசிந்து விக்ரமரத்ன, விசாரணையின் முன்னேற்ற அறிக்கையைச் சமர்ப்பிக்குமாறும் கம்பஹா காவல்துறையிடம்...

வேலைவாய்ப்பு மோசடி ;பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் கைது

ருமேனியா நாட்டில் வேலைவாய்ப்பு வழங்குவதாக வாக்குறுதியளித்து மோசடி செய்தமை தொடர்பாக, ஹங்குரங்கெத்த பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் (SLBFE) தெரிவித்துள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் தொடர்புடைய குறித்த சந்தேக நபர், பணியகத்தின் சிறப்பு புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளால் கடந்த மே 01 ஆம் திகதி அன்று...

கைதி உயிரிழப்பு தொடர்பில் மூன்று சிறை காவலர்கள் கைது!

விசாரணை செய்யப்பட்டு வந்த கைதி ஒருவரின் மரணம் தொடர்பாக வெலிக்கடை சிறைச்சாலையின் மூன்று சிறைக் காவலர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்தார். இன்று (05) நடைபெற்ற ஊடக சந்திப்பில் உரையாற்றிய அமைச்சர் ஜெயதிஸ்ஸ, இந்தக் கைதுகளை உறுதிசெய்ததோடு, இச்சம்பவம் தொடர்பாக இரண்டு கைதிகள் மற்றும் பொதுமக்களிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும்...
- Advertisement -

Latest News

இறக்குமதி வரியினால் வாகனத்தின் விலை 1.5 மில்லியன் வரை அதிகரிப்பு!

வாகன இறக்குமதிகள் மீது அரசாங்கம் புதிதாக விதித்துள்ள 50% மேலதிக வரியானது, வாகன விலைகளை குறைந்தபட்சம் 1.5 மில்லியன் வரை அதிகரித்து நுகர்வோரின் கொள்வனவு திறனை...