Sunday, August 16, 2026
No menu items!

புதிய செய்திகள்

குருவிட்ட சிறைச்சாலையில் மோதல்; இருவர் உயிரிழப்பு

குருவிட்ட சிறைச்சாலையில் கைதிகள் குழுவொன்றுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் நால்வர் காயமடைந்துள்ளதாகவும், அவர்களில் இருவர் உயிரிழந்துள்ளதாகவும் குருவிட்ட பொலிஸார் தெரிவித்தனர். சிறைச்சாலையில் இன்று (07) காலை இந்த அமைதியின்மை ஏற்பட்டது. அதனை கட்டுப்படுத்துவதற்காக சிறைச்சாலை அதிகாரிகள் கண்ணீர்ப்புகை தாக்குதலையும் நடத்தினர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஓகஸ்ட் மாதத்துக்கான லாஃப் கேஸ் விலையில் மாற்றம் இல்லை

லாஃப்  கேஸ் நிறுவனம் ஓகஸ்ட் மாதத்திற்கான உள்நாட்டு LPG சிலிண்டர்களின் விலையில் மாற்றம் இல்லை என அறிவித்துள்ளது. தற்போதுள்ள விலை அமைப்பில் எந்த மாற்றமும் இன்றி, லாஃப்ஸ் உள்நாட்டு எரிவாயு சிலிண்டர்கள் தற்போதைய விலைகளிலேயே தொடர்ந்து விற்பனை செய்யப்படும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.    

நீர்கொழும்பு சிறைக்கலவரம்; விசாரணை குழு அறிக்கை ஜனாதிபதியிடம்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற வன்முறை சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்திய குழுவின் அறிக்கை ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவிடம் கையளிக்கப்பட்டுள்ளது. தேசிய ஒருமைப்பாடு மற்றும் நீதி அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார இன்று (06) பாராளுமன்றத்தில் இதனை தெரிவித்தார். கடந்த மாதம் 05 ஆம் திகதி நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதல் காரணமாக 22 கைதிகளும் 10 அதிகாரிகளும்...

சீரற்ற காலநிலையால் சுமார் 20 இலட்சம் ரூபாய் இழப்பு; ஹட்டன் டிப்போ

நிலவும் கடுமையான சீரற்ற காலநிலை காரணமாக ஹட்டன் இலங்கை போக்குவரத்து சபையின் தினசரி வருமானம் ரூபாய் 33 லட்சத்தில் இருந்து ரூபாய் 10-12 லட்சமாக வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளில் நிலவும் சீரற்ற வானிலை மற்றும் பிரதான வீதிகளில் வாகனப் போக்குவரத்திற்கு ஏற்பட்ட தடைகள் காரணமாக ஹட்டன்-இலங்கை போக்குவரத்து சபை டிப்போவின்...

பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை பதிவு செய்யும் பணி ஆரம்பம்

2025 உயர்தர பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் சாதாரண அனுமதி செயல்முறையின் கீழ் பல்கலைக்கழகங்களுக்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்களின் பதிவு தற்போது திறக்கப்பட்டுள்ளது. குறித்த பணிகள் ஓகஸ்ட் 14 ஆம் திகதியுடன் நிறைவடையும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவிக்கிறது. மேன்முறையீடுகளை ஏற்றுக்கொள்ளல் ஓகஸ்ட் 21 ஆம் திகதி வரை நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலதிக விபரங்களுக்கு http://www.ugc.lk ஐ...

ஹட்டன் – கொழும்பு பிரதான பாதையில் மண்சரிவு அபாயம்

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக, ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியின் வட்டவல ரொசெல்ல பகுதியில் பிரதான வீதியின் ஒரு பகுதி சரிந்து விழும் அபாயத்தில் உள்ளதாக நோர்வுட் பெருவீதி அலுவலகத்தின் நிறைவேற்றுப் பொறியியாளர் ஏ.எம்.சாதிக் தெரிவித்தார். சரிந்து விழும் அபாயம் உள்ள இடத்தில் வாகனப் போக்குவரத்து ஒரு...

டெங்கு உரியிழப்புக்களின் எண்ணிக்கை 63 ஆக அதிகரிப்பு

இந்நாட்டில் பதிவாகியுள்ள டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 63 ஆக அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவிக்கிறது. இந்த ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 88,000ஐ நெருங்கியுள்ளது. அதன்படி நேற்று (05) வரை இந்நாட்டில் பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்து 88,088 நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும் அந்தப் பிரிவு குறிப்பிட்டது. இந்த மாதம்...

மத்திய மாகாணத்தின் புதிய ஆளுநர் பதவிப்பிரமாணம்

ஓய்வு பெற்ற சமூக சுகாதார நிபுணர் டொக்டர் ஹர்ஷ சுரங்க பெர்னாண்டோ இன்று, புதன்கிழமை ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க முன்னிலையில் மத்திய மாகாணத்தின் புதிய ஆளுநராக பதவிப்பிரமாணம் செய்து கொண்டார். டொக்டர் ஹர்ஷ சுரங்க பெர்னாண்டோ உலக சுகாதார நிறுவனத்தில் தடுப்பூசி நிபுணராக பணியாற்றியுள்ளார். அத்துடன் கண்டி மாவட்டத்தின் சமூக வைத்திய அதிகாரியாகவும் பணியாற்றியுள்ளார் தற்போது...

அரச பணியாளர்களை தனிப்பட்ட வேலைக்கு பயன்படுத்திய அகிலவுக்கு விளக்கமறியல்

ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் அலுவலகத்திற்கு 4 பணியாளர்களை நியமித்து அவர்களை தனிப்பட்ட வேலைகளுக்கு பயன்படுத்திய குற்றச்சாட்டு தொடர்பில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் இந்த மாதம் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இலஞ்சம், மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு இன்று 05 பகல் வேளையில் அவரை கைது செய்தது. பின்னர்...

கடுவலை பேருந்து தீ வைப்பு: சிசிடிவி காட்சிகள் வெளியானது

கடுவலை மத்திய பேருந்து நிலையத்தில் இன்று புதன்கிழமை அதிகாலை இடம்பெற்ற சந்தேகத்திற்கிடமான தீ வைப்பு தாக்குதலின் CCTV காட்சிகள் ஊடகங்களுக்கு வெளியிடப்பட்டுள்ளன. குறித்த காட்சிகளில், முகமூடி அணிந்த இருவர் தெற்கு அதிவேக நெடுஞ்சாலை வழியாக செல்லும் கடுவலை - மாத்தறை சொகுசு பேருந்தை நோக்கி சென்று தீ வைத்துவிட்டு அமைதியாக நடந்து செல்வது பதிவாகியுள்ளது. சம்பவம் அதிகாலை...
- Advertisement -

Latest News

இந்தோனேசிய நிலநடுக்கம்: துயரத்தை பகிர்ந்து கொண்ட இலங்கை

இந்தோனேசியாவின் புளோரஸ் தீவு கடற்கரையில் ஏற்பட்ட 7.7 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் மற்றும் அதைத் தொடர்ந்த அதிர்வுகளை அடுத்து, இலங்கை தனது ஒத்துழைப்பை வெளியிட்டுள்ளதோடு...