Sunday, August 16, 2026
No menu items!

புதிய செய்திகள்

சீரற்ற காலநிலை; நிலச்சரிவு முன்னறிவிப்பு புதுப்பிப்பு

நிலவும் கடும் மழை காரணமாக வெளியிடப்பட்டிருந்த நிலச்சரிவு முன்னறிவிப்பு தகவலை புதுப்பிக்க தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, கண்டி, கேகாலை, நுவரெலியா ஆகிய 3 மாவட்டங்களில் உள்ள சில பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு வழங்கப்பட்டிருந்த நிலச்சரிவு சிவப்பு அறிவிப்புகள் நீக்கப்பட்டுள்ளன. அத்துடன் இந்த நிலச்சரிவு முன்னறிவிப்பு இன்று 05.08.2026 காலை 9.00 மணி...

புதிய வசதிகளுடன் கோட்டை மத்திய பேருந்து நிலைய பொறியல் பிரிவு 

கோட்டை மத்திய பேருந்து நிலையத்தின் பொறியியல் பிரிவு மேம்படுத்தப்பட்ட உட்கட்டமைப்புடன் நேற்று 04ம் திகதி அதிகாரப்பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. இலங்கையின் பொதுப் போக்குவரத்து சேவையை வலுப்படுத்தும் முக்கியமான முன்னேற்றமாக இது பார்க்கப்படுகிறது. "க்ளீன் ஶ்ரீலங்கா" தேசிய திட்டத்தின் கீழ் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டது. இலங்கை விமானப்படையினர் இதற்காக உழைத்துள்ளதுடன் தொழில்நுட்ப சேவைகளையும் வழங்கி உள்ளனர். இது குறித்து போக்குவரத்து...

புதிய “சிறுவர் உரிமைகள் சட்டம்”; அமைச்சரவை அனுமதி 

இலங்கையில் சிறுவர்களின் பாதுகாப்பு மற்றும் நலனை வலுப்படுத்தும் நோக்கில் புதிய சிறுவர் உரிமைகள் சட்டம் - Child Rights Act - வரைவை விரைவுப்படுத்துவதற்கான யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. ஐக்கிய நாடுகள் சிறுவர் உரிமைகள் மாநாட்டின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து உரிமைகளையும், தற்போதுள்ள சட்டங்களின் கீழ் வழங்கப்பட்டுள்ள பாதுகாப்புக்கு மேலதிகமாக, இந்த புதிய சட்டம்...

தித்வா பாதிப்பு: பாதிக்கப்பட்ட குடும்பங்களை மீள்குடியமர்த்த அனுமதி

தித்வா புயல் காரணமாக இடம்பெயர்ந்த குடும்பங்களை மீள்குடியமர்த்துவதற்கான கட்டமைப்புக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. குறிப்பாக வீடுகளை முழுமையாக இழந்தவர்கள் மற்றும் மண்சரிவு அபாயம் அதிகமுள்ள பகுதிகளில் வாழும் மக்களுக்கு இது பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மீள் குடியமர்வு பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. இதற்கமைய, அரசாங்க காணி அனுமதி பத்திரம் பெற்ற தனிநபர்களின் காணிகள் மீள்குடியமர்வுக்காக...

பரீட்சைகளுக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பில் விசேட கலந்துரையாடல்

நாடு முழுவதும் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக, வரவிருக்கும் தேசிய பரீட்சைகளுக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மீளாய்வு செய்வதற்காக நாளை ஓகஸ்ட் 05 அன்று விசேட கலந்துரையாடல் ஒன்று நடைபெறவுள்ளதாக தினமின அரச பத்திரிகை தெரிவித்துள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம்,அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் - DMC, பரீட்சைகள் திணைக்களம் ஆகியன கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளன. வளிமண்டலவியல் திணைக்கள பணிப்பாளர் நாயகம்...

மோட்டார் சைக்கிள்களுக்கான பிரத்தியேக வீதி களுவாஞ்சிகுடியில்

இரு சக்கர வாகன விபத்துக்களை குறைக்கும் நோக்கில் நாட்டின் முதல் தனிப்பட்ட மோட்டார் சைக்கிள் வீதியை களுவாஞ்சிகுடியில் அமைக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். “100 க்கு 100” தேசிய கூட்டுறவு மோட்டார் சைக்கிள் பாதுகாப்பு திட்டத்தின் ஆரம்ப விழாவில் உரையாற்றிய அவர், மோட்டார் சைக்கிள்...

பொல்பிட்டியவில் மண்மேடு சரிந்து விழுந்ததில் 4 பேர் உயிரிழப்பு

கினிஹத்தேன மற்றும் ஹட்டன் பகுதியை அண்மித்த பொல்பிட்டிய, மொரஹேனகம பகுதியில் வீடு ஒன்றின் மீது மண்மேடு சரிந்து விழுந்த சம்பவத்தில் காணாமல் போயிருந்த 2 பெண்கள் மற்றும் 1 ஆணின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இதனுடன் இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளது. சீரற்ற காலநிலை காரணமாக வீட்டின் மீது மண்மேடு...

சீரற்ற காலநிலையால் நுவரெலியாவில் 6 பேர் காணாமல் போயுள்ளனர்

கடும் மழை மற்றும் சீரற்ற காலநிலை காரணமாக நுவரெலியா மாவட்டத்தில் 2,331 பேர்  பாதிக்கப்பட்டுள்ளனர். நுவரெலியா மாவட்டத்தில் 581 குடும்பங்களைச் சேர்ந்த 2,331 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 1,734 பேர் 7 நலன்புரி முகாம்களில்  தங்க வைக்கப்பட்டுள்ளனர் என நுவரெலியா மாவட்ட செயலாளர் துஷாரி தென்னக்கோன் தெரிவித்துள்ளார். வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாக நம்பப்படும் இருவர் மண்சரிவு காரணமாக...

சீரற்ற காலநிலை;கடற்படையின் 171 நிவாரண குழுக்கள் தயார் நிலையில்

நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக ஏற்படக்கூடிய வெள்ளம் மற்றும் திடீர் மண்சரிவுகளை எதிர்கொள்வதற்காக இலங்கை கடற்படை 171 அனர்த்த நிவாரண குழுக்களை தயார் நிலையில் வைத்துள்ளது. இந்த குழுக்களில் 700 கடற்படை வீரர்கள் உள்ளனர். அதிக ஆபத்துள்ள பகுதிகளில் இருந்து மக்களை வெளியேற்றி, தேவையேற்படின் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்வதற்கு இந்த குழுக்கள் தயாராக இருப்பதாக...

லயன் குடியிருப்புகளுக்குள் புகுந்த வெள்ளம்; போகாவத்தையில் அனர்த்தம்

கொட்டகலை பிரதேச சபைக்கு உட்பட்ட போகாவத்தை, திம்புள்ளை மற்றும் மவுண்ட்வனன் ஆகிய தோட்டங்களில் உள்ள லயன் குடியிருப்புகளில் வெள்ளநீர் புகுந்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக குறித்த மூன்று தோட்டங்களிலும் சுமார் 35 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் தற்காலிகமாக தமது உறவினர்கள் வீடுகளிலும் தெரிந்தவர்களின் வீடுகளிலும் தஞ்சம் புகுந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
- Advertisement -

Latest News

இந்தோனேசிய நிலநடுக்கம்: துயரத்தை பகிர்ந்து கொண்ட இலங்கை

இந்தோனேசியாவின் புளோரஸ் தீவு கடற்கரையில் ஏற்பட்ட 7.7 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் மற்றும் அதைத் தொடர்ந்த அதிர்வுகளை அடுத்து, இலங்கை தனது ஒத்துழைப்பை வெளியிட்டுள்ளதோடு...