Saturday, May 30, 2026
No menu items!

World News

மக்காவுக்கு புனிதபயணத்திற்காக பயணித்த பேருந்து விபத்து- 42 இந்தியர்கள் பலி!

சவுதி அரேபியாவில் மக்காவுக்கு புனிதபயணத்திற்காக பயணித்த பேருந்து, டீசல் பாரவூர்தியுடன் மோதி விபத்திற்குள்ளாகியதில் 42 இந்தியர்கள் உயிரிழந்தனர் என்று இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. நள்ளிரவில் ஏற்பட்ட இந்த விபத்தில் 20 பெண்கள் மற்றும் 11 குழந்தைகள் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்துக்கான காரணம் இதுவரை அறியப்படவில்லை.

அரச செலவின சட்டமூலத்தில் கையொப்பமிட்ட டொனால்ட் ட்ரம்ப்!

அமெரிக்க பிரதிநிதிகள் சபை நிறைவேற்றிய அரச செலவின சட்டமூலத்திற்கு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கையொப்பமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சட்டமூலத்தின் மூலம் 43 நாட்கள் தொடர்ந்த அமெரிக்க அரசாங்க முடக்கம் முடிவுக்கு வருகிறது. இதன் மூலம், 700,000-க்கும் மேற்பட்ட அரச ஊழியர்கள் சம்பளம் இல்லாமல் பணிபுரிந்த நிலை மாற்றப்படுகிறது. மேலும், விமான சேவை மற்றும் பிற அரசு சேவைகளும் பாதிப்பை...

சீனாவின் சிச்சுவானில் புதிதாக கட்டிய பாலம் இடிந்து வீழ்ந்தது!

சீனாவின் தென் மேற்கு சிச்சுவான் மாகாணம் பகுதியில் புதிதாகக் கட்டப்பட்ட பாலம் நிலச்சரிவு காரணமாக பகுதியளவில் இடிந்து வீழ்ந்துள்ள சம்பவம் பரவலான அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாஎர்காங் (Maerkang) நகரில் அமைந்துள்ள 758 மீட்டர் நீளமுள்ள ஹோங்க்கி (Hongqi) பாலம் தான் இந்த விபத்தில் பாதிக்கப்பட்டது. பாலத்தின் அருகிலுள்ள வீதிகள் மற்றும் கட்டடங்களில் முன்பே விரிசல்கள் காணப்பட்டதால், அதிகாரிகள்...

தென் கொரியாவில் இலங்கைத் தொழிலாளர்கள் இருவர் உயிரிழப்பு!

தென் கொரியாவின் கோசியோங் மாவட்டத்திலுள்ள மீன் பண்ணையொன்றில், 2 இலங்கையர்கள் உட்பட 3 தொழிலாளர்கள் நீர்த் தொட்டிக்குள் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதில் 50 வயதுடைய ஒரு மேற்பார்வையாளர் மற்றும் 20, 30 வயதுடைய 2 இலங்கைத் தொழிலாளர்களே உடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். குறித்த நீர்த் தொட்டி 4 மீற்றர் அகலமும் 2...

அமெரிக்காவிற்கு போட்டியாக அமைந்த சீனாவின் புதிய கப்பல்..!!

சீனாவின் மிகவும் திறமையான விமானம் தாங்கி கப்பலான ஃபுஜியன் இன்று(7)  உத்தியோகபூர்வமாக சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளது. இது கடற்படை மேலாதிக்கத்தில் அமெரிக்காவை முந்திக்கொள்ளும் முயற்சியில் சீனாவிற்கு குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சீன ஜனாதிபதி  ஜி ஜின்பிங்  இந்த வார தொடக்கத்தில் ஹைனான்  தீவில் உள்ள துறைமுகத்தில் குறித்த கப்பலை பார்வையிட்டதுடன், அதனை இயக்கும் விழாவிலும் கலந்துகொண்டார். ஃபுஜியன்  சீனாவின்...

போஸ்னியாவில் முதியோர் இல்லத்தில் தீ விபத்து – 11 பேர் பலி, 30 பேர் காயம்!

தென்கிழக்கு ஐரோப்பிய நாடான போஸ்னியா ஹெர்சகோவினாவில் உள்ள ஒரு முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட பயங்கரமான தீ விபத்தில் குறைந்தது 11 பேர் உயிரிழந்ததுடன், 30 பேர் படுகாயமடைந்துள்ளனர் என்று வெளிநாட்டு செய்திகள் தெரிவித்துள்ளன. இவ்விபத்து, நாட்டின் வடகிழக்கு பகுதியில் உள்ள துஸ்லா நகரில் அமைந்துள்ள முதியோர் இல்லத்தின் ஏழாவது தளத்தில் இடம்பெற்றது. தீ வேகமாக பரவியதால், அங்கு...

ரஷ்யாவின் நட்புக்கான விருதை பெற்ற கலாநிதி சமன் வீரசிங்க!

இலங்கை–ரஷ்ய நட்புறவுச் சங்கத்தின் பொதுச் செயலாளரும், ரஷ்ய புவியியல் சங்கத்தின் இலங்கைக்கான தலைவருமான கலாநிதி சமன் வீரசிங்கவுக்கு, ரஷ்யாவின் மிக உயரிய சிவிலியன் விருதுகளில் ஒன்றான “நட்புக்கான விருது” (Order of Friendship) வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கைத் தூதுவராகப் பணியாற்றிய கலாநிதி சமன் வீரசிங்க, இரு நாடுகளுக்கிடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதற்காக பல...

நியூயோர்க் நகரின் முதல் முஸ்லிம் மேயராக ஸோஹ்ரான் மாம்டானி தேர்வு!

நியூயோர்க் நகரின் வரலாற்றில் முதல் முஸ்லிம் மேயராக ஸோஹ்ரான் மாம்டானி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் நியூயோர்க் நகரின் முதல் முஸ்லிம் மற்றும் தெற்காசிய வம்சாவளியைச் சேர்ந்த முதல் மேயர் என்பதோடு, மிக இளம் வயதிலேயே பதவி ஏற்ற தலைவர்களில் ஒருவராகவும் உள்ளார். உகாண்டாவில் பிறந்த ஸோஹ்ரான் மாம்டானியின் தந்தை குஜராத்தைச் சேர்ந்த முஸ்லிம், தாய் ஒடிசாவைச் சேர்ந்த...

பிலிப்பைன்ஸில் கல்மேகி சூறாவளி: 58 பேர் பலி!

பிலிப்பைன்ஸ் நாட்டை தாக்கிய “கல்மேகி” என்ற சூறாவளியால் ஏற்பட்ட கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கில் 58 பேர் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். வெள்ளத்தில் சிக்கி 300க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன மற்றும் பல வாகனங்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்டன. பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதுடன், தொலைத்தொடர்பு சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. சூறாவளி தாக்கத்தால் 180க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும்,...

இரகசிய அணு ஆயுத சோதனைகள் நடத்தும் 4 நாடுகள் – டொனால்ட் ட்ரம்ப் குற்றச்சாட்டு!

பாகிஸ்தான், சீனா, ரஷ்யா மற்றும் வடகொரியா ஆகிய நாடுகள் இரகசியமாக அணு ஆயுத சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றன என்று அமெரிக்காவின்  ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அவர் மேலும், “இத்தகைய சூழலில் அமெரிக்காவும் மீண்டும் அணு ஆயுத சோதனைகளில் ஈடுபடுவதில் தவறில்லை” எனக் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்க ஊடகமொன்றுக்கு வழங்கிய சிறப்பு நேர்காணலின் போது டொனால்ட் ட்ரம்ப் இந்தக்...
- Advertisement -

Latest News

ஜேசன் சஞ்சயின் ‘சிக்மா’ பட வெளியீட்டு திகதி அறிவிப்பு

தமிழக முதலமைச்சர் விஜய்யின் மகனான ஜேசன் சஞ்சய் முதல் முறையாக 'சிக்மா' என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகியுள்ளார். இந்த படத்தை லைக்கா மற்றும் ஜே.எஸ்.ஜே மீடியா...