Saturday, June 13, 2026
No menu items!

சர்வதேச ஊடகங்கள்

ஈராக்கில் பல்பொருள் அங்காடியில் பெரும் தீவிபத்து: 50 பேர் உயிரிழப்பு!

ஈராக்கில் உள்ள ஒரு பல்பொருள் அங்காடியில் ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் 50 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. மேலும், இதன் ஆரம்ப விசாரணை முடிவுகள் 48 மணி நேரத்திற்குள் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈராக்கின் அல்-குட் நகரில் உள்ள ஒரு பல்பொருள் அங்காடியில் இன்று (17) தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில், சுமார் 50...

சிங்கப்பூரில் அதிகரித்து வரும் கொவிட்-19 தொற்றாளர்களின் எண்ணிக்கை!

சிங்கப்பூரில் கொவிட்-19 தொற்றாளர்களின் எண்ணிக்கை அண்மைய நாட்களில் மீண்டும் அதிகரித்துள்ளது. கடந்த வாரத்தில் மாத்திரம் சுமார் 14,200 கொவிட்-19 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அந்த நாட்டு சுகாதார அதிகாரிகளை மேற்கோள் காட்டி சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த அதிகரிப்புக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவதும், புதிய திரிபுகள் பரவுவதும் காரணமாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. LF.7 மற்றும் NB.1.8...

திபெத் நாட்டில் சக்தி வாய்ந்த நில அதிர்வு..!

திபெத் நாட்டில் 5.7 மெக்னிடியூட் அளவில் சக்தி வாய்ந்த நில அதிர்வு ஒன்று பதிவாகியுள்ளது. இன்று அதிகாலை 2.41 அளவில் இந்த நில அதிர்வு பதிவாகியுள்ளதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பூமிக்கு 10 கிலோமீற்றர் ஆழத்தில் இந்த நில அதிர்வு உணரப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. குறித்த நில அதிர்வில் சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை எனக் கூறப்படுகின்றது.

இரு நாட்டுக் கடல் எல்லைகளிலும் இந்தியா – பாகிஸ்தான் கப்பல்களுக்குத் தடை..!

இந்தியாவிற்குள் பாகிஸ்தான் கப்பல்களும், பாகிஸ்தானுக்குள் இந்தியக் கப்பல்களும் நுழைவதற்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் கொடியுடன் கூடிய கப்பல்கள் இந்தியத் துறைமுகங்களுக்குள் நுழைவதற்கு இந்தியா இன்று (3) அதிகாரப்பூர்வமாகத் தடை விதித்துள்ளது. இந்தியக் கொடியுடன் கூடிய கப்பல்கள் பாகிஸ்தானில் உள்ள துறைமுகங்களில் நிறுத்துவதற்கும் இந்தியா தடை விதித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இஸ்ரேலில் பாரிய காட்டுத்தீ!

இஸ்ரேலில் உள்ள வனப்பகுதியில் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. காட்டுத்தீயினால் குறைந்தது 13 பேர் காயமடைந்துள்ளனர். உயிரிழப்புகள் தொடர்பில் இதுவரை எந்தத் தகவலும் வெளியாகவில்லை. தீப்பரவல் ஏற்பட்டுள்ள பகுதியில் வசிக்கும் குடியிருப்பாளர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தீயணைப்பு வாகனங்கள், உலங்கு வானூர்திகள் என்பன தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன. அந்தப் பகுதியில் உள்ள...

இஸ்ரேலின் தொடர்ச்சியான தாக்குதலினால் காசாவில் இன்று 21 பேர் பலி!

இஸ்ரேலின் தொடர்ச்சியான தாக்குதலினால் இன்று அதிகாலை முதல் காசாவில் குறைந்தது 21 பேர் கொல்லப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. வடக்கு காசா பகுதியில் இஸ்ரேலியப் படைகள் தொடர்ச்சியாகத் தாக்குதல் நடத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.    

தெற்கு ஈரானில் தீப்பரவல்; உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 28 ஆக உயர்வு!

தெற்கு ஈரானின் பண்டார் அப்பாஸ் துறைமுக பகுதியில் ஏற்பட்ட வெடிப்பு மற்றும் தீப்பரவல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 28 ஆக உயர்ந்துள்ளது. குறித்த தீப்பரவலில் 800 பேர் காயமடைந்துள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. மேலும் காணாமல் போயுள்ள 6 பேரை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அந்தநாட்டு உள்துறை அமைச்சு குறிப்பிட்டுள்ளது. குறித்த துறைமுகம் முக்கியமாகக் கொள்கலன் போக்குவரத்தை...

ஏமன் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலில் நால்வர் பலி!

ஏமனின் ஹொடைடா பகுதியில் அமெரிக்கா நடத்திய தாக்குதலில் நால்வர் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நேற்றிரவு இந்தத் தாக்குதல் இடம்பெற்றதாக ஹவுதி சுகாதார அமைச்சின் ஊடகப்பேச்சாளர் அனீஸ் அலஸ்பாஹி தெரிவித்தார். இந்தத் தாக்குதலில் மேலும் இருவர் காயமடைந்துள்ளதாக அனீஸ் அலஸ்பாஹி கூறினார். கடந்த மாதம் 15 ஆம் திகதி முதல் ஹவுதி படைகளுக்கு எதிராக அமெரிக்க இராணுவம்...

காசா மீது இன்று நடத்திய தாக்குதலில் ஹமாஸின் பேச்சாளர் உட்பட 9 பேர் பலி!

இஸ்ரேலிய படைகள் காசா மீது இன்று (27) அதிகாலை நடத்திய தாக்குதலில் ஹமாஸின் பேச்சாளர் ஒருவர் உட்பட 9 பேர் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. காசா மீதான இஸ்ரேலிய தாக்குதலில் கடந்த வாரத்தில் மாத்திரம் சுமார் ஒரு இலட்சத்து 42 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் காசாவிலிருந்து இடம்பெயர்ந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. இதேவேளை,...

போர் நிறுத்தம் தொடர்பில் ரஷ்ய மற்றும் யுக்ரைன் பிரதிநிதிகளிடையே கலந்துரையாடல்!

யுக்ரைன் மற்றும் அமெரிக்க பிரதிநிதிகள் நேற்றைய தினம் எரிசக்தி வசதிகள் மற்றும் முக்கியமான உட்கட்டமைப்பைப் பாதுகாப்பதற்கான திட்டங்கள் குறித்து சவூதி அரேபியாவில் கலந்துரையாடியதாக யுக்ரைனின் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார். மூன்று ஆண்டுகால போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் இராஜதந்திர உந்துதலின் ஒரு பகுதியாக இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. இரண்டாம் உலக மகா...
- Advertisement -spot_img

Latest News

ஈஸ்டர் தாக்குதல்: பூஜித் ஜயசுந்தரவுக்கு ஜூலை 31 இல் தீர்ப்பு

2019 ஈஸ்டர் ஞாயிறன்று நடாத்தப்பட்ட தாக்குதல்கள் தொடர்பான வழக்கில், முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜெயசுந்தரவுக்கு எதிரான தீர்ப்பு எதிர்வரும் ஜூலை 31 அன்று...
- Advertisement -spot_img