இந்தவருடம் நவம்பர் மாதத்தில் முதல் 20 நாட்களில் 100,000 சுற்றுலாப் பயணிகள் வருகை பதிவாகியுள்ளது.
இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் (SLTDA) படி, நவம்பர் 01-20 வரை மொத்தம் 120,961 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர்.
அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்து (26,717), அதைத் தொடர்ந்து ரஷ்யா (20,157), ஜெர்மனி (9,444), லண்டன்(7,715) மற்றும் ஆஸ்திரேலியா (4,762) இல் இருந்து வருகை தந்துள்ளனர்.
இந்த காலகட்டத்தில் சீனா, பிரான்ஸ், போலந்து, அமெரிக்கா மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகை பதிவாகியுள்ளது.
இந்த வருடத்தில் இதுவரை மொத்தம் 1,741,676 சுற்றுலாப் பயணிகள் வருகை பதிவு செய்யப்பட்டுள்ளதாக SLTDA மேலும் தெரிவித்துள்ளது.








