Saturday, June 13, 2026
No menu items!

பிரதி அமைச்சர்

அரச காணியை குடும்ப சொத்தாக்கிய முன்னாள் அமைச்சர்கள்; அமைச்சர் அரவிந்த சேனாரத்ன !

காணி அமைச்சை முன்னர் மேற்பார்வையிட்ட பல முன்னாள் அமைச்சர்கள், தமது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உறவினர்களுக்குப் அரசாங்க நிலங்களை பகிர்ந்தளித்ததாக பிரதி அமைச்சர் அரவிந்த சேனாரத்ன இன்று நாடாளுமன்றத்தில் குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும், சில முன்னாள் அமைச்சர்கள் தனிப்பட்ட இரத்தினக் கல் அகழ்வு (Gem Mining) நடவடிக்கைகளுக்காகக் காணிகளை எடுத்துக்கொண்டதாகவும் அவர் வெளியிடத் தெரிவித்தார். 1972 ஆம் ஆண்டின்...

ஊழல் விசாரணைகள் தீவிரம் – ஊழல்வாதிகள் கலக்கமடைந்துள்ளனர்: பிரதி அமைச்சர் சுனில் வட்டகல!

கையூட்டல் அல்லது ஊழல் பற்றிய ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சட்டத்தின் அடிப்படையில் கடுமையான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதால், பல ஊழல்வாதிகள் கலக்கமடைந்துள்ளதாக பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்துள்ளார். அவர் மேலும், அரச நிதியை மோசடி செய்தவர்கள் நிச்சயமாக சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்றும் வலியுறுத்தினார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகங்களிடம் கருத்து...

நாட்டை வந்தடைந்தார் இத்தாலியின் வெளிவிவகார பிரதி அமைச்சர்!

இத்தாலியின் வெளிவிவகார மற்றும் சர்வதேச ஒத்துழைப்புக்கான பிரதி அமைச்சர் மரியா திரிபோடி (Maria Tripodi), உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று நாட்டை வந்தடைந்துள்ளார். அவர் எதிர்வரும் 5ஆம் திகதி வரை நாட்டில் தங்கியிருந்து இலங்கையின் பல உயர் மட்ட பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடவுள்ளார். சுமார் ஒரு தசாப்தத்திற்கு பின்னர் இத்தாலியில் இருந்து இலங்கைக்கு மேற்கொள்ளப்படும் அதி உயர்மட்ட...

அரச அதிகாரிகள் நேர்மையாக செயற்படத் தவறினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் – பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க!

அரச அதிகாரிகள் நேர்மையாக செயற்படத் தவறினால், அதன் விளைவுகளை எதிர்கொள்வதற்கு அவர்கள் தயாராக இருக்க வேண்டும் என துறைமுகங்கள் மற்றும் சிவில் வானூர்தி போக்குவரத்து பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க எச்சரித்துள்ளார். மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் இதைத் தெரிவித்தார். முன்னாள் ஜனாதிபதிக்கும் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட நிலையில், அதிகாரிகளுக்கு எதிராகவும்...

ஓட்டுநர் உரிமம் பெற மருத்துவச் சான்றிதழ் வழங்க இணைய முறை அறிமுகம் – பிரதி அமைச்சர்!

ஓட்டுநர் உரிமம் பெற விண்ணப்பிக்கும் நபர்களுக்கு மருத்துவச் சான்றிதழ்களை வழங்குவதற்கான இணைய முறை விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக துறைமுகங்கள் மற்றும் சிவில் வானூர்தி போக்குவரத்து பிரதி அமைச்சர் ஜனித ருவான் கொடித்துவக்கு தெரிவித்துள்ளார். நுகேகொடையில் உள்ள தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனம் தற்போது அச்சிடப்பட்ட மருத்துவச் சான்றிதழ்களை வழங்கி வரும் நிலையில், அங்கு ஏராளமான முறைகேடுகள் இடம்பெறுவதாக...

மன்னார் காற்றாலை திட்டம்: ஆகஸ்ட் 7ம் திகதி விசேட கலந்துரையாடல்!

மன்னாரில் இரண்டாம் கட்ட காற்றாலை மின் உற்பத்தி வேலைத்திட்டம் தொடர்பில் எதிர்வரும் வியாழக்கிழமை (7) பாராளுமன்ற வளாகத்தில் அமைச்சர்கள் தலைமையில் விசேட கலந்துரையாடல் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர்  செல்வம் அடைக்கலநாதன்  தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (5) பாராளுமன்ற அமர்வின் போது அமைச்சர் விமல் ரத்நாயக்க விடம்...

2025 இல் இதுவரை 57 திட்டங்களுக்கு BOI ஒப்புதல் – 569 மில்லியன் டொலர் மதிப்புள்ள முதலீடுகள்!

இந்த ஆண்டு (2025) இதுவரை 57 முதலீட்டு திட்டங்களுக்கு முதலீட்டு வாரியம் (BOI) அனுமதி வழங்கியுள்ளதாக கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க தெரிவித்தார். இந்த திட்டங்களின் மொத்த மதிப்பு 569 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஆகும். இதில் 507 மில்லியன் டொலர் முதலீடு ஏற்கனவே நாட்டிற்குள் வந்துவிட்டது எனவும்...

உள்ளூராட்சி அபிவிருத்தித் திட்டங்கள்: நவம்பருக்குள் நிதி பயன்படுத்துமாறு அறிவுறுத்தல் – பிரதி அமைச்சர் ருவன் செனரத்!

அபிவிருத்தி திட்டங்களை விரைவாக செயற்படுத்துமாறு பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு உள்ளூராட்சி மன்றங்களுக்கு அறிவித்துள்ளது. கடந்த வரவு செலவுத் திட்டத்தில் உள்ளூராட்சி மன்றங்களின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக 23,000 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக பிரதி அமைச்சர் ருவன் செனரத் தெரிவித்தார். மாகாண சபைகளின் அபிவிருத்தி பணிகளுக்காகவும், 53,000 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக...

காட்டு யானைகள் பாதுகாப்பு: புதிய சட்டங்களை உருவாக்குவதில் அரசாங்கம் முயற்சி !

காட்டு யானைகள் மீதான துப்பாக்கிச் சூட்டுக்கு எதிரான சட்டங்களை கடுமையாக்கும் நோக்கில், வனவிலங்கு திணைக்களத்தின் அதிகாரிகளுடன் நேற்று (15.07) மதியம் சுற்றாடல் அமைச்சில் கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது. சுற்றாடல் அமைச்சர் வைத்தியர் தம்மிக படபெந்தி மற்றும் பிரதி அமைச்சர் என்டன் ஜயக்கொடி ஆகியோர் தலைமையில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது. இதன் போது தற்போதைய அரசாங்கம் யானை வேட்டையாடுதல்...

எச்.ஐ.வி. தடுப்பு முயற்சிகளில்  இலங்கை  வெற்றி; சுகாதார பிரதி அமைச்சர் தெரிவிப்பு!

ஆசியாவில்  எச்.ஐ.வி பரவல் மிகக் குறைந்த மட்டத்தில் இருக்கும் நாடாக இலங்கையை கருதலாம் என சுகாதார மற்றும் வெகுஜன ஊடக பிரதி அமைச்சர் டாக்டர் ஹன்சகா விஜேமுனி தெரிவித்தார். பாலியல் உரிமைகள் தொடர்பான ஐரோப்பிய நாடாளுமன்ற மன்றத்தின் பிரதிநிதிகள் சார்பாக இலங்கை குடும்பக் கட்டுப்பாடு சங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட சிறப்பு நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து...
- Advertisement -spot_img

Latest News

சிறுமி துஷ்பிரயோகம்: 65 வயது நபர் கைது

புத்தளம்,  மாதம்பே பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கருகுவட்டவ பகுதியில் 5 வயதான முன்பள்ளி  சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 65 வயது வியாபாரி ஒருவர் கைது...
- Advertisement -spot_img