Tuesday, April 28, 2026
No menu items!

வேட்பாளர்கள்

தேர்தல்கள் ஆணைக்குழு எச்சரிக்கை..!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களின் வரவு செலவை சமர்ப்பிப்பதற்கான கால எல்லையை தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இதன்படி, நாளையுடன் இதற்கான கால எல்லை நிறைவடைவதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் அறிக்கையில் எச்சரிக்கப்பட்டுள்ளது. அரசியல் கட்சிகள் சுயேச்சைக்குழுக்களில் போட்டியிட்ட வேட்பாளர்கள் தேர்தல் பிரச்சாரங்களின் போதான செலவீனங்களை கோரியுள்ளது. மேலும் கட்சியின் செயலாளர்கள் மற்றும் வேட்பாளர்கள் இது குறித்த சமர்ப்பனங்களை மாவட்ட...

அமைதி காலத்தில் சட்டத்தை மீறுபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை..!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான பிரச்சாரம் நேற்று (03) நள்ளிரவு 12.00 மணியுடன் நிறைவடைந்தது. அதன்படி, இன்று தொடங்கும் அமைதி காலத்தில் வேட்பாளர்கள் உட்பட அனைத்து தரப்பினரும் எந்தவித பிரச்சார நடவடிக்கைகளிலும் ஈடுபட வேண்டாம் என தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க அறிவுறுத்தியுள்ளார். 339 உள்ளூராட்சி நிறுவனங்களுக்காக நடைபெறும் இந்தத் தேர்தல், நாளை மறுநாள் காலை...

உள்ளூராட்சித் தேர்தல்கள் தொடர்பாக 33 தேர்தல் வேட்பாளர்கள் கைது !

இந்த ஆண்டு உள்ளூராட்சித் தேர்தல்கள் தொடர்பாக 33 தேர்தல் வேட்பாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. மார்ச் 3 ஆம் திகதி முதல் இன்று (30) காலை வரை சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக போலீசார் அறிக்கை ஒன்றை வெளியிட்டனர். இதற்கிடையில், சம்பந்தப்பட்ட காலகட்டத்தில் 349 கட்சி ஆதரவாளர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கிடையில், நேற்று வரை தேர்தல் தொடர்பான...

தேர்தல் சட்டங்களை மீறிய 30 வேட்பாளர்கள் கைது!

2025 உள்ளூராட்சித் தேர்தல்கள் தொடர்பாக தேர்தல் சட்டங்களை மீறிய 30 வேட்பாளர்கள் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.

தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் 27 வேட்பாளர்கள் கைது..!

உள்ளூராட்சி தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டதிலிருந்து தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் 27 வேட்பாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், 106 அரசியல் ஆதரவாளர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவங்கள் தொடர்பாக அதிகாரிகள் 26 வாகனங்களை பறிமுதல் செய்துள்ளனர். இதுவரை, தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பாக 237 முறைப்பாடுகள் பொலிஸில் பதிவு செய்யப்பட்டுள்ளன,இவற்றில் 65 குற்றவியல் முறைப்பாடுகள் அடங்குகின்றன. இதனிடையே...

இன்று வரை 25 வேட்பாளர்கள் கைது..!

தேர்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் மேலும் இரண்டு வேட்பாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, கடந்த மார்ச் 3 ஆம் திகதி முதல் இன்று (24/04/2025) வரையில் கைது செய்யப்பட்ட மொத்த வேட்பாளர்களின் எண்ணிக்கை 25ஆக அதிகரித்துள்ளது. நேற்றைய தினத்தில் மாத்திரம் 6 ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது கைது செய்யப்பட்ட மொத்த ஆதரவாளர்களின் எண்ணிக்கை 98ஆக...

 உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான நடவடிக்கைகள் குறித்து ஆய்வு!

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதற்கான கூட்டம் ஒன்று நேற்றுத் தேர்தல்கள் ஆணைக்குழுவில் நடைபெற்றிருந்தது. தேர்தலுக்கான ஏற்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து இதன்போது ஆராயப்பட்டது. அதேநேரம், இம்முறை தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்களின் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடல் ஒன்றையும் தேர்தல்கள் ஆணைக்குழு நேற்று நடத்தியது. இதற்கிடையில் உள்ளூராட்சி மன்றங்களுக்கான நிதி ஒதுக்கீடு...

கரவெட்டி பிரதேச சபை வேட்பாளர்களின் அறிமுக நிகழ்வு!

2025 உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கரவெட்டி பிரதேச சபைக்காக போட்டியிடுகின்ற வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நிகழ்வும், தேசிய மக்கள் சக்தியின் பிரதிநிதிகள் மற்றும் ஆதரவாளர்களுடனான சந்திப்பானது நேற்றைய தினம் (20/04/2025) இடம்பெற்றிருந்திருந்தது. உடுப்பிட்டி மற்றும் அல்வாய் பகுதிகளில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் அமைச்சர், இராமலிங்கம் சந்திரசேகர் தலைமை தாங்கி உரையாற்றினார். இதன் போது உறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்றத் தேர்தல்...

நிதியை வைத்து தமிழரை அடிபணியச் செய்ய முயல்கின்றது அனுர அரசு – தமிழ் தேசிய மக்கள் முன்னணி குற்றச்சாட்டு!

நிதியை வைத்து தமிழர் தாயகத்தை அடிபணியச் செய்யும் அடக்குமுறை செய்ய அனுர தலைமையிலான தேசிய மக்கள் முனைகின்றது என சுட்டிக்காட்டிய யாழ் மாநகர சபையின் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின்  முதல்வர் மற்றும் துணை முதல்வர் வேட்பாளர்கள் உள்ளூராட்சி மன்றங்களின் சட்ட முறைமைகள் தொடர்பில் கூட தெரியாதவர்களாக இன்றைய அரசு இருப்பது வேடிக்கையாக இருப்பதாகவும்...

வேட்பாளர்களுக்கான சட்டங்கள் மற்றும் செலவீனங்கள் குறித்து கலந்துரையாடல்..!

2025 உள்ளூராட்சி சபை தேர்தலில் வேட்பாளர்கள் பின்பற்ற வேண்டிய சட்டங்கள் மற்றும் செலவீனங்கள் தொடர்பாக கிளிநொச்சி பூநகரி பிரதேச சபையில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான கலந்துரையாடல் மாவட்ட உதவித்தேர்தல் ஆணையாளர் வேலாயுதம் சிவராசா தலைமையில் பூநகரி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று நடைபெற்றது. குறித்த கலந்துரையாடலில் பூநகரி பிரதேச சபையில் போட்டியிடும் கட்சிகள் மற்றும் சுயேட்சைக்குழு...
- Advertisement -spot_img

Latest News

ஆதாரம் இருக்கும் போது அரசாங்கம் எவ்வாறு மறுக்க முடியும்?நாமல் கேள்வி

வீதி அபிவிருத்தி அதிகார சபையின் (RDA) கொடுப்பனவுகளில் உள்ள சிக்கல்களை அரசாங்கம் மறைக்க முயற்சிக்கிறது என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ குற்றம் சாட்டியுள்ளார். ஒப்பந்ததாரர்களுக்கு இரண்டு...
- Advertisement -spot_img