Friday, June 26, 2026
No menu items!

Tamil Vani

நாட்டில் விசேட தேவைக்குரியவர்களுக்கான தாழ்தள பேருந்து சேவைகள் அறிமுகம்!

விசேட தேவைக்குரியவர்களுக்கு பாதுகாப்பான, வசதியான மற்றும் நம்பகமான போக்குவரத்தை வழங்கும் நோக்கில், மாகும்புர பல்நோக்கு போக்குவரத்து மையத்தில் இன்று (21) தாழ்தள (Low-floor) பேருந்துச் சேவை தொடங்கப்பட்டுள்ளது. அரசாங்கதத்தின் “கிளீன் ஸ்ரீலங்கா” திட்டத்தின் கீழ், நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள இந்த திட்டம், போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்கவின் தலைமையில் தொடங்கி வைக்கப்பட்டது. இந்த முன்னோட்டத் திட்டத்தில், சக்கர நாற்காலிப் பயனாளர்கள்,...

நிலக்கரி இறக்குமதி விவகாரம்; கணக்காளர் நாயகத்தின் அறிக்கையை நிராகரிக்கும் அமைச்சர்

சர்ச்சைக்குரிய நிலக்கரி இறக்குமதி தொடர்பாக கணக்காளர் நாயகத்தின் அறிக்கையின் சில பகுதிகளுடன் தாம் உடன்படவில்லை என அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். “அறிக்கையில் உள்ள சில விடயங்களை ஏற்றுக்கொள்ள முடியாது.” ஆனால், முழு அறிக்கையும் தவறானது என கூறவில்லை என அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார். தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். நிலக்கரியைக் கொள்முதல் செய்வதில் எந்த...

அமைச்சரின் சட்ட அறிவித்தலுக்கு பதில் அனுப்பப்படும்; ‘ஹிரு’

ஹிரு செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தி தொடர்பில் அமைச்சர் கே.டி லால்காந்த அனுப்பிய சட்ட அறிவித்தல் கடிதத்துக்கு அடுத்த 24 மணி நேரத்துக்குள் பதில் அனுப்படும் என ஹிரு மீடியா நெட்வொர்க் தெரிவித்துள்ளது. கடந்த ஏப்ரல் 16ஆம் திகதி ஹிரு மீடியா நெட்வொர்க்,2025 ஆம் வருட சொத்து அறிக்கையின் அடிப்படையில், அமைச்சர் கே.டி. லால்காந்தவிடம் ரூ....

அதிகாரத்தை கைப்பற்றும் திட்டம் உள்ளது; முன்னாள் ஜனாதிபதி மஹிந்த

நாட்டின் அதிகாரத்தை மீண்டும் கைப்பற்றும் நோக்கில் பெரிய திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அறிவித்துள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் புத்தாண்டு திட்டங்கள் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த போதே அவர் இவ்வாறு கூறினார். "அதிகாரத்தை மீண்டும் கைப்பற்றுவதற்கு எங்களிடம் ஒரு பெரிய திட்டம் உள்ளது. நிச்சயமாக மாற்றம் நிகழும்," என...

ஈரான்-பாகிஸ்தான் முக்கியஸ்தர்கள் இடையே முக்கிய கலந்துரையாடல்

ஈரான் ஜனாதிபதி மசூத் பெஷெஷ்கியன் மற்றும் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் ஆகியோர் தொலைபேசி உரையாடல் ஒன்றை நடத்தத் திட்டமிட்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது. "பிராந்தியத்திலும் அதற்கு அப்பாலும் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மை" குறித்துப் பேசும் நோக்கில் இந்த உரையாடல் மேற்கொள்ளப்படவுள்ளது. ஈரானும் அமெரிக்காவும் பாகிஸ்தானில் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. எனினும் ஹார்முஸ் நீரிணை தொடர்பான அமெரிக்க-ஈரான் மோதல் இன்னும்...

கடும் மின்னல் தாக்கம்; பொதுவெளிகளை தவிர்க்குமாறு அறிவுறுத்தல்

நாட்டில் இன்று பிற்பகல் 1.00 மணிக்கு பின்னர் பெரும்பாலான பகுதிகளில் கடுமையான மின்னல் மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது. இடியுடன் கூடிய மழையின் போது, ​​தற்காலிகமாக, குறிப்பிட்ட பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்றும் திணைக்களம் தெரிவித்துள்ளது. சேதங்களைக் குறைக்கவும், மின்னல் தாக்கத்திலிருந்து பாதுகாப்பை உறுதி செய்யவும் பொதுமக்கள் தகுந்த...

ஜப்பானில் 7.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்; சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது

ஜப்பானின் வடகிழக்குக் கடற்கரை பகுதியில் இன்று (திங்கள்கிழமை) பிற்பகல்7.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக ஜப்பான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அத்துடன் இவாடே, ஆமோரி மற்றும் ஹொக்கைடோ மாகாணங்களில் 3 மீற்றர் (9.84 அடி) உயரம் வரை சுனாமி ஏற்படக்கூடும் என குறித்த மையம் எச்சரித்துள்ளது. குறித்த நிலநடுக்கத்தின் மையப்புள்ளி பசிபிக் பெருங்கடலில் காணப்பட்டதுடன், அது...

பங்களாதேஷில் எரிபொருள் விலை அதிகரிப்பு

பங்களாதேஷில் எரிபொருள் விலை 10% முதல் 15% வரை அதிகரிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் எரிசக்தி அமைச்சு நேற்று (சனிக்கிழமை) அறிவித்துள்ளது. உலகளாவிய மசகு எண்ணெய் விலையில் ஏற்பட்ட அதிகரிப்பு மற்றும் மத்திய கிழக்கு மோதல் காரணமாக ஏற்பட்ட விநியோகப் பாதிப்பு என்பவையே விலை அதிகரிப்புக்கு காரணம் என அவ் அமைச்சு தெரிவித்துள்ளது. புதிய விலைகளின்படி, பெட்ரோல் ஒரு லிட்டருக்கு...

அமெரிக்கா-ஈரான் பேச்சுவார்த்தை; பாகிஸ்தானில் பாதுகாப்பு அதிகரிப்பு

நாளை இடம்பெறும் என எதிர்பார்க்கப்படும் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான அமைதிப் பேச்சுவார்த்தைகளை முன்னிட்டு, பாகிஸ்தானின் தலைநகரான இஸ்லாமாபாத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் 11 ஆம் திகதி இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் உடன்பாடு எதுவுமின்றி முடிவடைந்த நிலையில், பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குவதற்காக அமெரிக்கப் பிரதிநிதிகள் நாளை (திங்கட்கிழமை)பாகிஸ்தான் செல்வார்கள் என டொனால்ட்...

ஈரானுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ள ட்ரம்ப்!

ஹோர்முஸ் நீரிணை பகுதியில் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், முன்மொழியப்பட்ட ஒப்பந்தத்திற்கு ஈரான் ஒப்புக்கொள்ளாவிட்டால், அந்நாட்டின் மின் உற்பத்தி நிலையங்களையும் பாலங்களையும் தகர்த்துவிடுவோம் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் புதிய எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். ட்ரூத் சோஷியல் (Truth Social) தள பதிவின் ஊடாக அவர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். பிரான்ஸ் மற்றும் ஐக்கிய இராச்சியத்துடன்...

About Me

860 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

அரச பணியாளர்கள் ஸ்மார்ட்போன் பயன்படுத்த தடை விதித்த தலிபான்

ஆப்கானிஸ்தானில் உயர்மட்ட அதிகாரிகள் முதல் சேவைப் பணியாளர்கள் வரை அனைத்து அரச அதிகாரிகளுக்கும் ஸ்மார்ட்போன்கள் பயன்படுத்த தலிபான்கள் முழுமையான தடை விதித்துள்ளனர். ஸ்மார்ட்போன்கள் பயன்படுத்த அனுமதி இல்லை...
- Advertisement -spot_img