Wednesday, July 1, 2026
No menu items!

புதிய செய்திகள்

1 பில்லியன் டொலர் இழப்பு;ஜனாதிபதியின் அறிவிப்பு தொடர்பில் ஆய்வு

வங்கி அமைப்புகளுடன் தொடர்புடைய மோசடியின் காரணமாக இலங்கை கிட்டத்தட்ட 1 பில்லியன் அமெரிக்க டொலர் அந்நியச் செலாவணியை இழந்துள்ளது என்று ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க வெளிப்படுத்தியதைத் தொடர்ந்து,இது தொடர்பில் ஆய்வு மேற்கொள்ளப்படவுள்ளது. இது தொடர்பில் பாராளுமன்றத்தின் பொது நிதிக் குழு (COPF) அடுத்த வாரம் மத்திய வங்கி அதிகாரிகளிடம் வினவ உள்ளது என அதிகாரி ஒருவர்...

ஜனாதிபதி செயலகத்தின் சிரேஷ்ட உதவி செயலாளர் ஒருவர் கைது!

ஜனாதிபதி செயலகத்தின் நாடாளுமன்ற மற்றும் அமைச்சரவைப் பிரிவில் பணியாற்றும் சிரேஷ்ட உதவிச் செயலாளர் ஒருவர், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி நாட்டை விட்டுத் தப்பிச் செல்ல உதவியமை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளார். மற்றொரு நபரின் பெயரில் கடவுச்சீட்டைப் போலியாகத் தயாரித்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டார். மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் கொலை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப்...

உலகின் முன்னணி சுகாதாரச் சுற்றுலாத் தலமாக இலங்கை தேர்வு!

2026 ஆம் ஆண்டிற்கான உலகின் முன்னணி சுகாதாரச் சுற்றுலாத் தலமாக இலங்கை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. BookRetreats.com வெளியிட்ட சமீபத்திய 'State of Retreats 2026' அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தத் தளத்தில் தேடல் ஆர்வம் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 100% அதிகரித்ததை பதிவு செய்ததன் மூலம், அவுஸ்திரேலியா (85%), மொராக்கோ (83%), இங்கிலாந்து (82%) மற்றும் ஸ்பெயின்...

இயன் மருத்துவர் கொலை; நால்வருக்கு விளக்கமறியல்

தெல்தெனியவில் காருக்குள் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட இயன் மருத்துவரின் சடலம் தொடர்பாக, பிரதான சந்தேக நபர் உட்பட நான்கு சந்தேக நபர்களையும் ஜூலை 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நுவரெலியா நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது. விளக்கமறியலில் வைக்கப்பட்டவர்களில், கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர், அவரது மனைவி, குண்டசாலை பொலிஸ் பயிற்சி கல்லூரியின்...

வெனிசுலாவை உலுக்கிய “இரட்டை பூகம்பம்”; 235 பேர் உயிரிழப்பு, 4300 பேர் காயம்

வடக்கு வெனிசுலாவை புதன்கிழமை (24) மாலை ஏற்பட்ட"இரட்டை பூகம்பம்" எனப்படும் நில அதிர்வுகளால் குறைந்தது 235 பேர் உயிரிழந்துள்ளனர். இதேநேரம் இந்த பாதிப்பினால் 4,300-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். மீட்பு பணி தொடரும் நிலையில் உயிரிழப்புக்கள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் USGS எச்சரித்துள்ளது. வெனிசுலாவில் 39 வினாடியில் இரண்டு அதிர்வுகள் ஏற்பட்டிருந்ததாக...

அரச பணியாளர்கள் ஸ்மார்ட்போன் பயன்படுத்த தடை விதித்த தலிபான்

ஆப்கானிஸ்தானில் உயர்மட்ட அதிகாரிகள் முதல் சேவைப் பணியாளர்கள் வரை அனைத்து அரச அதிகாரிகளுக்கும் ஸ்மார்ட்போன்கள் பயன்படுத்த தலிபான்கள் முழுமையான தடை விதித்துள்ளனர். ஸ்மார்ட்போன்கள் பயன்படுத்த அனுமதி இல்லை எனவும் தடையை மீறினால், கைபேசி உடைக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் சட்ட மற்றும் ஷரியா தண்டனை வழங்கப்படும் என்றும் உச்ச தலைவர் ஹிபத்துல்லா அகுந்த்சாதாவின் எழுத்துப்பூர்வ உத்தரவின் பேரில்...

நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டம் திருத்தப்பட்டு வருகிறது; ஜனாதிபதி

நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் எண்ணம் அரசாங்கத்திற்கு இல்லை என்றும், அதற்குப் பதிலாக அச்சட்டத்தின் திருத்தப்பட்ட பதிப்பைத் தயாரித்து வருவதாகவும் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க கூறியுள்ளார். போதைப்பொருள் அச்சுறுத்தல் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை எதிர்ப்பது தொடர்பான ஒத்திவைக்கப்பட்ட விவாதத்தின் போது பாராளுமன்றத்தில் பேசிய ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார். நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டம் முதலில் அறிமுகப்படுத்தப்பட்டபோது தற்போதைய அரசாங்கம்...

தலால்ல பஸ் விபத்து; 50 பேருக்கு காயம்

மாத்தறை, கந்தர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலால்ல பகுதியில் இரண்டு பேருந்துகள் மோதிக்கொண்டதில் குறைந்தது 50 பேர் காயமடைந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக்கொண்டநிலையில் இந்த விபத்து சம்பவித்துள்ளது என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து காயமடைந்தவர்கள் மாத்தறை மற்றும் பெத்தீகம வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இயன் மருத்துவர் கொலை; பொலிஸ் அதிகாரியின் கைதை அடுத்து விசாரணை தீவிரம்

தெல்தெனியவில் காரில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட பெண் இயன் மருத்துவரின் மரணம் தொடர்பாக, பொலிஸ் அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். முன்னதாக, யாழ்ப்பாணத்தில், ​​43 வயதான பிரதான சந்தேக நபர், அவரது மனைவி மற்றும் ஒரு சிறு குழந்தையுடன் கைது செய்யப்பட்டனர். இதனை தொடர்ந்து குண்டசாலை பிரதேச சபையைச் சேர்ந்த 49 வயதான சாரதி ஒருவரும் கைது...

வெனிசுலாவை உலுக்கியுள்ள நில அதிர்வு; 164 பேர் வரையில் உயிரிழப்பு

வெனிசுலாவில் ஏற்பட்ட  நிலநடுக்கத்தினால் குறைந்தது 164 பேர் வரையில் உயிரிழந்து இருப்பதாகவும் சுமார் 1000 பேர் வரை காயம் அடைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அந்நாட்டின் இடைக்கால ஜனாதிபதி டெல்சி ரொட்ரிக்ஸ் இதனை உறுதி செய்துள்ளார். 7.2 மற்றும் 7.5 ரிக்டர் அளவில் அடுத்தடுத்து 1 நிமிட இடைவெளியில் நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் 1900 ஆம் ஆண்டுக்கு பிறகு 7.5 ரிக்டர்...
- Advertisement -

Latest News

வெனிசுலா சுகாதார சேவைகளில் கடும் பாதிப்பு!

வெனிசுலாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் அந்நாட்டின் சுகாதார அமைப்பு கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இதுவரை, பல வைத்தியசாலைகள் சேதமடைந்துள்ளன, மேலும் பணியாளர்கள் இன்மையினால் ஏனைய...